ETV Bharat / state

சாமி சிலைகளை உடைத்தெறிந்த முகமூடி கும்பல்: சிவகிரியில் பரபரப்பு

author img

By

Published : Oct 21, 2019, 12:19 PM IST

ஈரோடு: சிவகிரி அருகே தொப்பம்பாளையம் பகுதியில் உள்ள கோயிலில் இருந்த சாமி சிலைகளை அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த கும்பல் உடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

sivagiri

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தலையநல்லூரில் பிரசித்தி பெற்ற பொன்காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் வரலாற்று நினைவாக ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த கூரக்காளியண்ணன், இளைய காளியண்ணன் என்பவர்களது முழு உருவச்சிலை இருந்து வருகிறது. இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் பல ஆண்டு காலமாக இவர்களை வழிபட்டு வருகின்றனர்.

இந்த சிலைகளை அமைப்பதற்கு இரு சமுதாயத்தினரிடையே பிரச்னை இருந்து வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவகிரியில் இருந்து கொடுமுடி செல்லும் சாலை விரிவாக்கப் பணி காரணமாக, தொப்பம்பாளையம் பகுதியில் இருந்த இரண்டு சிலைகளும் அகற்றப்பட்டு சாலையின் உட்புறமாக நிறுவி மேற்கூரை அமைத்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலைகளை புதுப்பித்து கட்டக்கூடாது என்று மற்றொரு சமுதாயத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் சில மாதங்களுக்கு முன்பு மனு அளித்திருந்தனர். ஆனாலும் சிலைகள் புதுப்பிக்கப்பட்டு தொடர்ந்து வழபாடு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்றிரவு காளியண்ணன் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு முகமூடி அணிந்துவந்த 7க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு சிலைகளையும் கடப்பாறை, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு அடித்து உடைத்தெறிந்தனர். இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த கும்பலைச் சேர்ந்த சிலர் கண்காணிப்பு கேமராவையும் அடித்து நொறுக்கினர்.

சாமி சிலைகளை உடைத்த முகமூடி கும்பல்

இதனைத்தொடர்ந்து சிலைகளை வழிபட்டு வந்த சமுதாயத்தினர் அப்பகுதியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சிலைகளை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு சமுதாயத்தினர் தான் சிலைகள் உடைப்புக்கு பின் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. இதனிடையே சிலை உடைக்கப்பட்ட இடத்தில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க...

முகநூலில் பதிவிட்ட கைபேசி எண்: பெண்ணை மிரட்டி தங்கநகை அபகரிப்பு

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தலையநல்லூரில் பிரசித்தி பெற்ற பொன்காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் வரலாற்று நினைவாக ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த கூரக்காளியண்ணன், இளைய காளியண்ணன் என்பவர்களது முழு உருவச்சிலை இருந்து வருகிறது. இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் பல ஆண்டு காலமாக இவர்களை வழிபட்டு வருகின்றனர்.

இந்த சிலைகளை அமைப்பதற்கு இரு சமுதாயத்தினரிடையே பிரச்னை இருந்து வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவகிரியில் இருந்து கொடுமுடி செல்லும் சாலை விரிவாக்கப் பணி காரணமாக, தொப்பம்பாளையம் பகுதியில் இருந்த இரண்டு சிலைகளும் அகற்றப்பட்டு சாலையின் உட்புறமாக நிறுவி மேற்கூரை அமைத்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலைகளை புதுப்பித்து கட்டக்கூடாது என்று மற்றொரு சமுதாயத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் சில மாதங்களுக்கு முன்பு மனு அளித்திருந்தனர். ஆனாலும் சிலைகள் புதுப்பிக்கப்பட்டு தொடர்ந்து வழபாடு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்றிரவு காளியண்ணன் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு முகமூடி அணிந்துவந்த 7க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு சிலைகளையும் கடப்பாறை, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு அடித்து உடைத்தெறிந்தனர். இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த கும்பலைச் சேர்ந்த சிலர் கண்காணிப்பு கேமராவையும் அடித்து நொறுக்கினர்.

சாமி சிலைகளை உடைத்த முகமூடி கும்பல்

இதனைத்தொடர்ந்து சிலைகளை வழிபட்டு வந்த சமுதாயத்தினர் அப்பகுதியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சிலைகளை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு சமுதாயத்தினர் தான் சிலைகள் உடைப்புக்கு பின் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. இதனிடையே சிலை உடைக்கப்பட்ட இடத்தில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க...

முகநூலில் பதிவிட்ட கைபேசி எண்: பெண்ணை மிரட்டி தங்கநகை அபகரிப்பு

Intro:ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தொப்பய்பாளையம் பகுதியில் குறிப்பிட்ட சமுதாயத்தினரின் முன்னோர்களாக வழிபட்டு வந்த இரண்டு சிலைகள் உடைப்பு

நேற்று இரவு மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த மர்ம நபர்கள் ஏழுக்கும் மேற்பட்டோர் முகமூடி அணிந்த நிலையில் கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு சிலைகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்களை உடைத்து எறிந்தனர்.

சிலைகளை வழிபட்டு வந்த சமுதாயத்தினர் அப்பகுதியில் குவிந்ததால் பரபரப்பு. சிலைகளை உடைத்தவர்களை கைது செய்ய கோரி சிவகிரியில் இருந்து கொடுமுடி செல்லும் சாலையில் சாலை மறியல் போராட்டம். சிலை உடைப்பு சம்பவத்தை தொடர்ந்து இரண்டு சமுதாயத்தினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டு உள்ளதால் பதற்றம். போலீசார் குவிப்பு.

Body:ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தலையநல்லூர் பிரசித்தி பெற்ற பொன்காளியம்மன் கோயில் இந்த கோவிலின் வரலாற்று நினைவாக ஒரு சமுதாயத்தை சேர்ந்த கூரக்காளியண்ணன் இளைய காளியண்ணன் இவர்களது முழு உருவச்சிலையை சிவகிரியில் இருந்து.கொடுமுடி சாலை செல்லும் வழியில் உள்ள தொப்பம்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்டு முன்னோர்களாக பல ஆண்டுகளாக வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த சிலைகளை அமைப்பதற்கு இரண்டு சமுதாயத்தினர் இடையே பிரச்சினை இருந்து வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவகிரியில் இருந்து கொடுமுடி செல்லும் சாலை விரிவாக்கப் பணி தொப்பம்பாளையம் பகுதியில் இருந்த இரண்டு சிலைகளும் அகற்றப்பட்டு சாலையின் உட்புறமாக நிறுவி மேற்கூரை அமைத்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலைகளை புதுப்பித்து கட்டக்கூடாது என்று மற்றொரு சமுதாயத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் சில மாதங்களுக்கு முன்பு மனு அளித்திருந்தனர். ஆனாலும் சிலைகள் புதுப்பித்து அமைக்கப்பட்டு வழிபட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு காளியண்ணன் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு வந்த 7க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் முகமூடி இரண்டு சிலைகளையும் கடப்பாறை சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு அடித்து உடைத்தனர்.இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதனை கண்டு அதனையும் உடைத்துவிட்டு தப்பிச் சென்றனர். இதனைதொடர்ந்து சிலைகளை வழிபட்டு வந்த சமுதாயத்தினர் அப்பகுதியில் குவிந்தனர். இச்சிலைகளை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு சமுதாயத்தினர் தான் சிலைகளை உடைத்தாக கூறியவர்கள் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய கோரி சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் சிலைகளை வழிபட்டு வந்த சமுதாயத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Conclusion:சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவத்தால் இருசமுதாயத்தினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளதால் அப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதால் பரபரப்புஏற்பட்டுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.