ETV Bharat / state

பூட்டிக்கிடக்கும் தேவாலயங்கள்: களையிழந்த ஈஸ்டர் பண்டிகை! - ஈரோட்டில் பூட்டிக்கிடக்கும் தேவாலயங்கள்: கலையிழந்த ஈஸ்டர் பண்டிகை

ஈரோடு: ஊரடங்கு உத்தரவின் காரணமாக அனைத்து தேவாலயங்களும் மூடப்பட்டுள்ள நிலையில் ஈஸ்டர் பண்டிகை களையிழந்து காணப்பட்டது.

பூட்டிக்கிடக்கும் தேவாலயங்கள்
பூட்டிக்கிடக்கும் தேவாலயங்கள்
author img

By

Published : Apr 12, 2020, 1:09 PM IST

இயேசு சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் மரணத்திலிருந்து உயிர்த்தெழுவதை குறிக்கும் வகையில் ஈஸ்டர் திருநாள் கொண்டாடப்படுகிறது. மேலும், ஈஸ்டர் திருநாளன்று தேவாலயங்களில் சிறப்பு பிராத்தனைகள் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் மத வழிபாட்டுத் தலங்களில் வழிபாடுகள் நடத்தக்கூடாது என அரசு அறிவித்துள்ளது.

அதன்காரணமாக சத்தியமங்கலம் நகர்ப்பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் பூட்டிக்கிடக்கின்றன. இதேபோல் புஞ்சைபுளியம்பட்டி, பவானிசாகர், புதுவடவள்ளி, தாளவாடி பகுதிகளில் உள்ள தேவாலயங்களிலும் சிறப்பு பிராத்தனைகள் நடைபெறவில்லை என்பதோடு தேவாலயங்கள் திறக்கப்படவில்லை.

தேவாலயங்கள் அமைந்துள்ள பகுதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இது குறித்து கிறிஸ்தவர்களிடம் கேட்டபோது, கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை செய்ய அனுமதி இல்லை என்பதால் தங்களது வீடுகளில் பிரார்த்தனை நடைபெற்றதாக தெரிவித்தனர்.

பூட்டிக்கிடக்கும் தேவாலயங்கள்

ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படாததால் வழக்கமாக மின்னொளியில் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கும் தேவாலயங்கள் மக்கள் நடமாட்டமின்றி களையிழந்து காணப்பட்டன.

இதையும் படிங்க: வேளாங்கண்ணியில் பக்தர்களின்றி ஈஸ்டர் திருப்பலி

இயேசு சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் மரணத்திலிருந்து உயிர்த்தெழுவதை குறிக்கும் வகையில் ஈஸ்டர் திருநாள் கொண்டாடப்படுகிறது. மேலும், ஈஸ்டர் திருநாளன்று தேவாலயங்களில் சிறப்பு பிராத்தனைகள் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் மத வழிபாட்டுத் தலங்களில் வழிபாடுகள் நடத்தக்கூடாது என அரசு அறிவித்துள்ளது.

அதன்காரணமாக சத்தியமங்கலம் நகர்ப்பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் பூட்டிக்கிடக்கின்றன. இதேபோல் புஞ்சைபுளியம்பட்டி, பவானிசாகர், புதுவடவள்ளி, தாளவாடி பகுதிகளில் உள்ள தேவாலயங்களிலும் சிறப்பு பிராத்தனைகள் நடைபெறவில்லை என்பதோடு தேவாலயங்கள் திறக்கப்படவில்லை.

தேவாலயங்கள் அமைந்துள்ள பகுதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இது குறித்து கிறிஸ்தவர்களிடம் கேட்டபோது, கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை செய்ய அனுமதி இல்லை என்பதால் தங்களது வீடுகளில் பிரார்த்தனை நடைபெற்றதாக தெரிவித்தனர்.

பூட்டிக்கிடக்கும் தேவாலயங்கள்

ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படாததால் வழக்கமாக மின்னொளியில் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கும் தேவாலயங்கள் மக்கள் நடமாட்டமின்றி களையிழந்து காணப்பட்டன.

இதையும் படிங்க: வேளாங்கண்ணியில் பக்தர்களின்றி ஈஸ்டர் திருப்பலி

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.