ETV Bharat / state

'யூ டியூப்பில் விளம்பரம் பார்த்தால் பணம்' - நூதன மோசடியில் ஈடுபட்ட பி.இ., பட்டதாரிகள் கைது!

author img

By

Published : Dec 18, 2019, 7:40 AM IST

ஈரோடு: யூ டியூப்பில் விளம்பரம் பார்த்தால் இரு மடங்கு சம்பாதிக்கலாம் என நூதன முறையில் மோசடி விளம்பரம் செய்த பட்டதாரிகள் இரண்டு பேர் காவல் துறையால் கைது செய்யப்பட்டனர்.

online-cheating-fraud-
யூடியூப்

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஆண்ட்ராய்டு செல்போனில் "ஏடிசி நியூஸ்" யூடியூப் சேனலில் நியூஸ் பார்த்தாலே வருமானம் என்ற நோட்டீஸ் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் உலா வந்தன. அதில் முழு நேரம், பகுதி நேரம் சம்பாதிக்கும் வாய்ப்பு, ஆண்ட்ராய்டு செல்போன் வைத்துள்ள அனைவருக்கும் வேலை, ஆட்கள் யாரையும் சேர்க்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், யூ டியூப் சேனலில் நியூஸ் பார்ப்பதற்கு மைக்ரோ, மினி, பேசிக், சில்வர், கோல்டு, டைமண்ட் போன்ற திட்டங்கள் இருப்பதாகவும், குறைந்தபட்சமாக ரூ.1,440 முதல் 46,080 ரூபாய் வரையிலான பலத் திட்டங்களில் பணம் கட்டி சேர்ந்தால், மாதந்தோறும் ரூ. 272 முதல் 8,704 ரூபாய் சம்பாதிக்கலாம் எனவும் விளம்பரம் செய்யப்பட்டது.

நூதன மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது

இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியதையடுத்து காவல் துறை கவனத்திற்குச் சென்றது. பின்னர் காவல் துறை நடத்திய விசாரணையில், நாமக்கல்லில் ஆலம்பாளையத்தை சேர்ந்த பிரவீன்குமார்(25), ஈரோட்டில் தேவஸ்தானபுரத்தைச் சேர்ந்த பிரபாகரன்(25) ஆகிய இருவரும் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இவர்கள் பிஇ பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, ஈரோடு நகர குற்றவியல் காவல் துறை வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: குடியுரிமை திருத்த சட்ட நகலை எரிக்க முயற்சி - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஆண்ட்ராய்டு செல்போனில் "ஏடிசி நியூஸ்" யூடியூப் சேனலில் நியூஸ் பார்த்தாலே வருமானம் என்ற நோட்டீஸ் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் உலா வந்தன. அதில் முழு நேரம், பகுதி நேரம் சம்பாதிக்கும் வாய்ப்பு, ஆண்ட்ராய்டு செல்போன் வைத்துள்ள அனைவருக்கும் வேலை, ஆட்கள் யாரையும் சேர்க்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், யூ டியூப் சேனலில் நியூஸ் பார்ப்பதற்கு மைக்ரோ, மினி, பேசிக், சில்வர், கோல்டு, டைமண்ட் போன்ற திட்டங்கள் இருப்பதாகவும், குறைந்தபட்சமாக ரூ.1,440 முதல் 46,080 ரூபாய் வரையிலான பலத் திட்டங்களில் பணம் கட்டி சேர்ந்தால், மாதந்தோறும் ரூ. 272 முதல் 8,704 ரூபாய் சம்பாதிக்கலாம் எனவும் விளம்பரம் செய்யப்பட்டது.

நூதன மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது

இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியதையடுத்து காவல் துறை கவனத்திற்குச் சென்றது. பின்னர் காவல் துறை நடத்திய விசாரணையில், நாமக்கல்லில் ஆலம்பாளையத்தை சேர்ந்த பிரவீன்குமார்(25), ஈரோட்டில் தேவஸ்தானபுரத்தைச் சேர்ந்த பிரபாகரன்(25) ஆகிய இருவரும் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இவர்கள் பிஇ பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, ஈரோடு நகர குற்றவியல் காவல் துறை வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: குடியுரிமை திருத்த சட்ட நகலை எரிக்க முயற்சி - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது

Intro:ஈரோடு ஆனந்த்
டிச17

யூடியூப்பில் விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்கும் என மோசடி : இருவர் கைது!

ஈரோட்டில் யூடியூப் சேனலில் முதலீடு செய்து
ஸ்மார்ட் போனில் சேனலை பார்த்தாலே இருமடங்கு சம்பாதிக்கலாம் என
நூதன முறையில் மோசடி விளம்பரம் செய்த
பிஇ பட்டதாரிகள் 2பேர் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக யூடியூப் சேனலில்(ஆப்பேக்ஸ் டிஜிட்டல் சேனல், ஏடிசி நியூஸ்) ஆன்ட்ராய்டு செல்போனில் நியூஸ் பார்த்தாலே வருமானம் என்ற பெயரில் நோட்டீஸ் பேஸ்புக், வாட்ஸ் அப் குரூப், இன்ஸ்டாகிராமில் உலா வந்தன. அதில், முழு நேரம், பகுதி நேரம் சம்பாதிக்க வாய்ப்பு, ஆன்ட்ராய்டு செல்போன் வைத்துள்ள அனைவருக்கும் இந்த வாய்ப்பு என்றும், ஆட்களை யாரையும் சேர்க்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், யூடியூப் சேனலில் நியூஸ் பார்ப்பதற்கு மைக்ரோ, மினி, பேசிக், சில்வர், கோல்டு, டயமண்ட் போன்ற திட்டங்கள் இருப்பதாகவும், மைக்ரோ திட்டத்தில் சேர்வதற்கு ரூ.1,440 முதல் 46080 ரூபாய் வரையிலான பல திட்டங்களில் பணம் கட்டி சேர்ந்தால், மாதாமாதம் 272 ரூபாய் முதல் 8704 ரூபாய் வரை 20 மாதங்களுக்கு அதிகபட்சமாக 1,74,080 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டது.

Body:இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த ஆலம்பாளையத்தை சேர்ந்த பிரவீன்குமார்(25), அவரது நண்பர் ஈரோடு அடுத்த கனகபுரம் தேவஸ்தானபுரத்தை சேர்ந்த பழனிச்சாமி மகன் பிரபாகரன்(25) என்பது தெரியவந்தது. இவர்கள் பிஇ பட்டதாரிகள். இவர்கள் இருவரும் மக்களை யூடியூப் சேனலில் சேர வைக்க முதலீடு செய்தால், அதிக லாபம் பெறலாம் என மோசடியாக விளம்பரம் செய்தது தெரியவந்தது.

Conclusion:இதையடுத்து மக்களை ஏமாற்றி மோசடி செய்ய முயன்றதாக ஈரோடு நகர குற்றவியல் போலீசார் இருவரையும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.