ETV Bharat / state

உயிரிழந்த கோயில் யானைக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் கருப்பணன்! - சங்கமேஸ்வரர் திருக்கோயில் யானை வேதநாயகி உயிரிழப்பு

ஈரோடு: பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் திருக்கோயில் யானை வேதநாயகி உயிரிழந்ததையடுத்து அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

Minister Karupanan pays tribute to the dead elephant in erode
கோயில் யானைக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் கருப்பணன்
author img

By

Published : Dec 1, 2019, 3:27 PM IST

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் உள்ள சங்கமேஸ்வரர் திருக்கோயில் யானை வேதநாயகி, கடந்த 29ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தது. இதனை பவானி பொதுமக்கள், இந்து அறநிலையத் துறையினர், வனத் துறையினர் சேர்ந்து அஞ்சலி செலுத்தி யானையை நல்லடக்கம் செய்தனர்.

இந்நிலையில், யானை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘யானை வேதநாயகி கடந்த 43 ஆண்டுகளாக திருக்கோயிலுக்கு தொண்டு செய்து வந்த நிலையில் தற்போது திடீரென உயிரிழந்திருப்பது பவானி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோயில் யானைக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் கருப்பணன்

யானை, அறநிலையத் துறை சார்பில் முறையாக கால்நடை மருத்துவர்களைக் கொண்டு பராமரிக்கப்பட்டு வந்தது. ஆனால், உடல்நலக் குறைவின் காரணமாக யானை வேதநாயகி இறந்து விட்டது.

விரைவில் அரசு, தனியார் அமைப்பின் உதவியுடன் யானை அல்லது குட்டி யானை வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அன்புக்கு மதம் தடையில்லை - கோயில் யானை இறப்புக்கு மரியாதை செலுத்திய இஸ்லாமியர்!

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் உள்ள சங்கமேஸ்வரர் திருக்கோயில் யானை வேதநாயகி, கடந்த 29ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தது. இதனை பவானி பொதுமக்கள், இந்து அறநிலையத் துறையினர், வனத் துறையினர் சேர்ந்து அஞ்சலி செலுத்தி யானையை நல்லடக்கம் செய்தனர்.

இந்நிலையில், யானை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘யானை வேதநாயகி கடந்த 43 ஆண்டுகளாக திருக்கோயிலுக்கு தொண்டு செய்து வந்த நிலையில் தற்போது திடீரென உயிரிழந்திருப்பது பவானி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோயில் யானைக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் கருப்பணன்

யானை, அறநிலையத் துறை சார்பில் முறையாக கால்நடை மருத்துவர்களைக் கொண்டு பராமரிக்கப்பட்டு வந்தது. ஆனால், உடல்நலக் குறைவின் காரணமாக யானை வேதநாயகி இறந்து விட்டது.

விரைவில் அரசு, தனியார் அமைப்பின் உதவியுடன் யானை அல்லது குட்டி யானை வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அன்புக்கு மதம் தடையில்லை - கோயில் யானை இறப்புக்கு மரியாதை செலுத்திய இஸ்லாமியர்!

Intro:ஈரோடு ஆனந்த்
டிச.01

உயிரிழந்த கோயில் யானைக்கு அமைச்சர் கருப்பணன் மலர்தூவி அஞ்சலி!

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் திருக்கோவில் யானை வேதநாயகி உயிரிழந்ததையடுத்து அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் உள்ள சங்கமேஸ்வரர் திருக்கோவில் யானை வேதநாயகி கடந்த 29ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிர் இழந்தது. இதனை பவானி பொதுமக்கள் மற்றும் இந்து அறநிலையத் துறையினர் வனத்துறையினர் சேர்ந்து அஞ்சலி செலுத்தி யானையை நல்லடக்கம் செய்தனர்.

இந்நிலையில் யானை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

Body:பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் யானை வேதநாயகி கடந்த 43 ஆண்டுகளாக திருக்கோவிலுக்கு தொண்டு செய்து வந்தது இந்நிலையில் உயிரிழந்திருப்பது பவானி மக்களை சோகத்தில் வைத்திருப்பதாக கூறினார். யானையை அறநிலை துறை சார்பில் முறையாக கால்நடை மருத்துவர்களை கொண்டு பராமரிக்கப்பட்டு வந்தது. உடல்நிலை குறைவு காரணமாக இறந்துவிட்டதாக கூறினார்.

Conclusion:மேலும் விரைவில் அரசு மற்றும் தனியார் அமைப்பின் உதவியுடன் யானை அல்லது குட்டி யானை வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கருப்பணன் தெரிவித்தார்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.