ETV Bharat / state

டெல்டாவை பாதிக்கும் திட்டங்களுக்கு அரசு அனுமதி வழங்காது - அமைச்சர் கருப்பணன் - Interview with Erode Minister Karupanan

ஈரோடு: டெல்டா மாவட்டங்களை பாதிக்கும் திட்டங்களுக்கு அரசு அனுமதி வழங்காது என்று அமைச்சர் கருப்பணன் தெரிவித்தார்.

அமைச்சர் கருப்பணன் பேட்டி
அமைச்சர் கருப்பணன் பேட்டி
author img

By

Published : Jan 26, 2020, 11:51 AM IST

ஈரோடு மாவட்டம் பவானி மேட்டூர் வலதுகரை கால்வாய் கரைகளின் இருபுறமும் கான்கிரீட் அமைத்து பலப்படுத்திடவும் முழுமையாகப் பராமரித்திடவும் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.

அதன் ஒரு பகுதியாக 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அந்தியூர் அருகேயுள்ள பூதப்பாடியில் வலது கரை வாய்க்காலின் ஒரு பகுதியை பலப்படுத்தும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.சி. கருப்பணன் கலந்துகொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தார்.

அமைச்சர் கருப்பணன் பேட்டி

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கே.சி. கருப்பணன், "மக்களுக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் அரசு சிறப்பான முறையில் செயல்படுத்திவருகிறது. குறிப்பாக, முதலமைச்சர் அறிவித்தத் திட்டங்கள் அனைத்தும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது" என்றார்.

மேலும், தமிழ்நாட்டின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதில் கேரளா மாநிலம் முக்கிய பங்கு வகிப்பதால் தமிழ்நாடு, கேரள அரசு அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்கள் என்று கூறிய அவர், டெல்டா மாவட்டங்களை பாதிக்கும் திட்டங்களுக்கு அரசு அனுமதி வழங்காது எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 2021இல் அதிமுக ஆட்சியே மீண்டும் தொடரும்...! - அமைச்சர் காமராஜ்

ஈரோடு மாவட்டம் பவானி மேட்டூர் வலதுகரை கால்வாய் கரைகளின் இருபுறமும் கான்கிரீட் அமைத்து பலப்படுத்திடவும் முழுமையாகப் பராமரித்திடவும் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.

அதன் ஒரு பகுதியாக 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அந்தியூர் அருகேயுள்ள பூதப்பாடியில் வலது கரை வாய்க்காலின் ஒரு பகுதியை பலப்படுத்தும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.சி. கருப்பணன் கலந்துகொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தார்.

அமைச்சர் கருப்பணன் பேட்டி

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கே.சி. கருப்பணன், "மக்களுக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் அரசு சிறப்பான முறையில் செயல்படுத்திவருகிறது. குறிப்பாக, முதலமைச்சர் அறிவித்தத் திட்டங்கள் அனைத்தும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது" என்றார்.

மேலும், தமிழ்நாட்டின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதில் கேரளா மாநிலம் முக்கிய பங்கு வகிப்பதால் தமிழ்நாடு, கேரள அரசு அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்கள் என்று கூறிய அவர், டெல்டா மாவட்டங்களை பாதிக்கும் திட்டங்களுக்கு அரசு அனுமதி வழங்காது எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 2021இல் அதிமுக ஆட்சியே மீண்டும் தொடரும்...! - அமைச்சர் காமராஜ்

Intro:ஈரோடு ஆனந்த்
ஜன26

டெல்டா மாவட்டங்களை பாதிக்கும் திட்டங்களுக்கு அரசு அனுமதி வழங்காது - அமைச்சர் கருப்பணன்!

கேரள அரசுடன் தமிழக அரசு சகோதரத்துவ முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்வதற்கு நிலுவையிலுள்ள அனைத்து நீர்ப்பாசனத் திட்டங்களையும் நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரையில் கேரள முதல்வரும் தமிழக முதல்வரும் சந்தித்து தமிழகத்தில் தண்ணீர் பிரச்னையை நிரந்தரமாக தீர்ப்பதற்கான வழிவகைகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானி மேட்டூர் வலதுகரை கால்வாய் கரைகளின் இருபுறமும் கான்கிரீட் அமைத்து பலப்படுத்திடவும் முழுமையாகப் பராமரித்திடவும் 100 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது,

அதன் முன்னோட்டமாக ரூபாய் 13 லட்சம் மதிப்பீட்டில் அந்தியூர் அருகேயுள்ள பூதப்பாடியில் வலது கரை வாய்க்காலின் ஒரு பகுதியை பலப்படுத்தும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது இதில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு பணியைத் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறுகையில்,

தமிழக அரசின் அனைத்துத் துறைகளும் மக்களுக்குத் தேவையான அனைத்துத் திட்டங்களையும் சிறப்பான முறையில் செயல்படுத்தி வருவதாகவும், குறிப்பாக முதல்வரின் அனைத்துத் துறைகளிலும் அனைத்துத் திட்டங்களும் விரைவாக அனுமதி வழங்கப்பட்டு திட்டங்கள் செயல்பாட்டுக்கு வருவதால் அதற்கு அனுமதி வழங்கும் முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

கேரள அரசு 15 கோடி ரூபாய் மதிப்பில் கன்யாகுமரியில் விருந்தினர் மாளிகையொன்றை கட்டுவதற்காக அரசிடம் அனுமதி கேட்பதற்காக தமிழகத்திற்கு வந்து அரசிடம் அனுமதி பெற்றுச் சென்றுள்ளதாகவும், தமிழகத்தின் தண்ணீர்த் தேவையை பூர்த்தி செய்வதில் கேரளா முக்கிய பங்கு வகிப்பதால் தமிழக அரசு மற்றும் கேரள அரசுகளின் அலுவலர்கள் அளவில் நிலுவையிலுள்ள நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அலுவலர்கள் பேச்சுவார்த்தை முடிவுற்றதற்குப் பிறகு கேரள முதல்வர் விரைவில் சென்னையில் தமிழக முதல்வரைச் சந்தித்து நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு முடிவு செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதால் எதிர்காலத்தில் தமிழகத்தில் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்றார்.

Body:மேலும் டெல்டா மாவட்டங்கள் உள்பட வறட்சி மாவட்டங்களின் தண்ணீர் பிரச்னையைத் தீர்ப்பதற்காக வருகிற ஆகஸ்ட் மாதம் கரூர் அருகே ஆற்றைத் தடுத்து 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைக்கவுள்ளதாகவும்,

Conclusion:மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டம் திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்களென்றும்,டெல்டா மாவட்டங்களைப் பாதிப்புக்குள்ளாக்கும் எந்தத் திட்டங்களுக்கும் தமிழக சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்காது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பேட்டி : கே.சி.கருப்பணன் – தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.