ETV Bharat / state

மரப்பட்டறையில் தீ விபத்து: ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்!

author img

By

Published : Oct 29, 2019, 7:42 AM IST

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே உள்ள மரப்பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரப்பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.

fire

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், வரதம்பாளையத்தைச் சேர்ந்தவர் நாகேந்திரன் (44). இவர் அதே பகுதியில் மரப்பட்டறை வைத்துள்ளார்.

தீபாவளி தொடர் விடுமுறையால் கடந்த இரண்டு நாட்களாக நாகேந்திரன் மரப்பட்டறையை திறக்கவில்லை. இந்நிலையில் இன்று பட்டறையில் உள்ள மரங்கள் தீப்பிடித்து எரிந்து புகை வெளியேறியுள்ளது. இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக, தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

மரப்பட்டறையில் தீ விபத்து

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இருப்பினும் மரப்பட்டறையில் வைத்திருந்த சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள மரங்கள், கதவு, ஜன்னல் உள்ளிட்ட மரப்பொருட்கள் தீயில் ஏரிந்து சேதமடைந்தன. பட்டறை அருகில் பட்டாசு வெடிக்கும்போது தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதும் காரணமா உள்ளிட்டவை குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: கார் உதிரிபாகங்கள் கிடங்கில் தீ விபத்து; பட்டாசு வெடித்ததால் சம்பவம்!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், வரதம்பாளையத்தைச் சேர்ந்தவர் நாகேந்திரன் (44). இவர் அதே பகுதியில் மரப்பட்டறை வைத்துள்ளார்.

தீபாவளி தொடர் விடுமுறையால் கடந்த இரண்டு நாட்களாக நாகேந்திரன் மரப்பட்டறையை திறக்கவில்லை. இந்நிலையில் இன்று பட்டறையில் உள்ள மரங்கள் தீப்பிடித்து எரிந்து புகை வெளியேறியுள்ளது. இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக, தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

மரப்பட்டறையில் தீ விபத்து

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இருப்பினும் மரப்பட்டறையில் வைத்திருந்த சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள மரங்கள், கதவு, ஜன்னல் உள்ளிட்ட மரப்பொருட்கள் தீயில் ஏரிந்து சேதமடைந்தன. பட்டறை அருகில் பட்டாசு வெடிக்கும்போது தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதும் காரணமா உள்ளிட்டவை குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: கார் உதிரிபாகங்கள் கிடங்கில் தீ விபத்து; பட்டாசு வெடித்ததால் சம்பவம்!

Intro:Body:tn_erd_02_sathy_fire_accident_vis_tn10009

மரப்பட்டறையில் பட்டாசு துகள் விழுந்து தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்பிலான மரங்கள் எரிந்து சேதம்

சத்தியமங்கலத்தில் மரப்பட்டறையில் பட்டாசு துகள் விழுந்து ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான மரங்கள் எரிந்து சேதமடைந்தது.


சத்தியமங்கலம் நகர்ப்பகுதியில் உள்ள வரதம்பாளையம் லட்சுமிநகரை சேர்ந்தவர் நாகேந்திரன்(44). இவர் அதே பகுதியில் மரப்பட்டறை வைத்துள்ளார். தனது பட்டறையில் மரத்தினாலான கதவு, ஜன்னல் உள்ளிட்ட பொருட்களை தயார் செய்து விற்பனை செய்து வந்தார். இதற்கென தேக்கு, சால் உள்ளிட்ட பல்வேறு வகை மரங்களை வாங்கி தனது மரப்பட்டறையில் அடுக்கி வைத்துள்ளார். தீபாவளி தொடர்விடுமுறை என்பதால் கடந்த 2 நாட்களாக நாகேந்திரன் மரப்பட்டறையை திறக்கவில்லை. திங்கள்கிழமை இவரது மரப்பட்டறையில் உள்ள மரங்கள் தீப்பிடித்து எரிந்து புகை வெளியேறியது. இதைக்கண்ட நாகேந்திரன் மற்றும் அக்கம்பக்கம் உள்ள பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அக்கம்பக்கம் இருந்த பொதுமக்களும் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க உதவினர். இருப்பினும் சுமார் ரூ.10 இலட்சம் மதிப்பிலான மரங்கள் மற்றும், கதவு, ஜன்னல் உள்ளிட்ட மரப்பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. பட்டாசு வெடிக்கும்போது தீ விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.