ETV Bharat / state

பருத்தி சாகுபடிக்கு மாறிய பழங்குடியின மக்கள்! - erode latest news

ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் யானை, காட்டுப்பன்றியால், வருவாய் இழந்த பழங்குடியினர் தற்போது வனவிலங்குகளால் பாதிப்பு ஏற்படாத பருத்தியை சாகுபடி செய்துள்ளனர்.

cotton_cultivationz
cotton_cultivationz
author img

By

Published : Dec 21, 2020, 4:02 PM IST

சத்தியமங்கலம் மலைப்பகுதி கடம்பூரில் பழங்குடியின மக்கள் ராகி, கம்பு, மக்காச்சோளம் பயிர்களை சாகுபடி செய்து வந்தனர்.

இந்தப் பயிர்களை காட்டுப்பன்றிகள், யானைகள் சேதப்படுத்தியதால் பழங்குடியின மக்கள் வாழ்வாரத்தை இழந்து நின்றனர். இதனால் தினந்தோறும் அவதிப்பட்டு வந்த மக்கள் தற்போது வனவிலங்குள் விரும்பாத மாற்றுப்பயிரான பருத்தி சாகுபடிக்கு மாறினர்.

இதையடுத்து கடம்பூரில் மானாவாரியாக முதன்முறையாக 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி செய்துள்ளனர்.

140 நாள்கள் பயிரான பருத்தி காய்பிடித்துள்ளது, அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் பருத்தி சாகுபடியால் வனவிலங்குகள் தொந்தரவு இன்றி சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

மானாவாரியில் குறைந்த உற்பத்தி செலவு என்பதால் ஏக்கருக்கு நல்ல லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பருத்தி சாகுபடிக்கு
பருத்தி சாகுபடி

மேலும், பருத்தி குவிண்டால் 5 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. தற்போது ஏக்கருக்கு 6 குவிண்டால் வரை மகசூல் கிடைத்துள்ளது.

கடம்பூர் மலைப்பகுதியில் வனவிலங்குகள் தொந்தரவு இல்லாமல் செய்யக்கூடிய சாகுபடி பயிராக பருத்தி மாறும் என விவசாயிகள் கூறுகின்றனர்.

பருத்தி சாகுபடிக்கு மாறிய பழங்குடியின மக்கள்

இதையும் படிங்க:

குக்கிராமங்களுக்கு 2,500 கி.மீ.க்கு ஓரடுக்கு கப்பிச் சாலைகள் - ரூ.536.75 கோடி நிதி ஒதுக்கீடுசெய்து அரசாணை!

சத்தியமங்கலம் மலைப்பகுதி கடம்பூரில் பழங்குடியின மக்கள் ராகி, கம்பு, மக்காச்சோளம் பயிர்களை சாகுபடி செய்து வந்தனர்.

இந்தப் பயிர்களை காட்டுப்பன்றிகள், யானைகள் சேதப்படுத்தியதால் பழங்குடியின மக்கள் வாழ்வாரத்தை இழந்து நின்றனர். இதனால் தினந்தோறும் அவதிப்பட்டு வந்த மக்கள் தற்போது வனவிலங்குள் விரும்பாத மாற்றுப்பயிரான பருத்தி சாகுபடிக்கு மாறினர்.

இதையடுத்து கடம்பூரில் மானாவாரியாக முதன்முறையாக 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி செய்துள்ளனர்.

140 நாள்கள் பயிரான பருத்தி காய்பிடித்துள்ளது, அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் பருத்தி சாகுபடியால் வனவிலங்குகள் தொந்தரவு இன்றி சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

மானாவாரியில் குறைந்த உற்பத்தி செலவு என்பதால் ஏக்கருக்கு நல்ல லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பருத்தி சாகுபடிக்கு
பருத்தி சாகுபடி

மேலும், பருத்தி குவிண்டால் 5 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. தற்போது ஏக்கருக்கு 6 குவிண்டால் வரை மகசூல் கிடைத்துள்ளது.

கடம்பூர் மலைப்பகுதியில் வனவிலங்குகள் தொந்தரவு இல்லாமல் செய்யக்கூடிய சாகுபடி பயிராக பருத்தி மாறும் என விவசாயிகள் கூறுகின்றனர்.

பருத்தி சாகுபடிக்கு மாறிய பழங்குடியின மக்கள்

இதையும் படிங்க:

குக்கிராமங்களுக்கு 2,500 கி.மீ.க்கு ஓரடுக்கு கப்பிச் சாலைகள் - ரூ.536.75 கோடி நிதி ஒதுக்கீடுசெய்து அரசாணை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.