ETV Bharat / state

வெங்காயத்தால் முட்டைகோஸுக்கு வந்த வாழ்வு!

ஈரோடு: சத்தியமங்கலத்தில் வெங்காயத்துக்கு மாற்றாக முட்டைகோஸின் தேவை அதிகரித்துள்ளதால் முட்டைகோஸ் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

author img

By

Published : Oct 29, 2020, 5:58 PM IST

Updated : Oct 29, 2020, 6:04 PM IST

Cabbage
Cabbage

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைக்கிராமங்களில் மானாவாரி விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. ஊட்டியில் நிலவும் தட்பவெப்பநிலை காணப்படுவதால் மலைக்காய்கறி பயிரான காலிபிளவர், முட்டைகோஸ் சாகுபடி செய்யப்படுகிறது. போதிய மழை பொழிவு இல்லாததால் குறைந்த நீரில் சாகுபடி செய்வதற்கு சொட்டுநீர் பாசனம் முறையை பயன்படுத்தி வருகின்றனர்.

மூன்று மாத பயிரான முட்டைகோஸ் பயிரை நாற்றாங்கால் முறையில் குழிதட்டுகளில் வளர்க்கின்றனர். இந்த குழித்தட்டுகளில் வளர்ந்த பயிரை வாங்கி ஒரு ஏக்கரில் 25 ஆயிரம் பயிர் நடவு செய்து வருகின்றனர். குறுகிய கால பயிரான முட்டைகோஸ் தற்போது அறுவடை செய்யப்பட்டு கோவை, மேட்டுப்பாளையம், சென்னைக்கு அனுப்பப்படுகிறது. அண்மைகாலமாக வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து கிலோ 120 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், வெங்காயம் பயன்பாடு உள்ள போன்டா, பஜ்ஜி போன்ற கார வகைகளுக்கு முட்டைகோஸ் பயன்படுத்தப்படுகிறது

முட்டைகோஸ் விலை உயர்வு
முட்டைகோஸ் விலை உயர்வு

முட்டைகோஸுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளதால் தாளவாடி, தொட்டகாசனூர், சூசைபுரம், பனஹள்ளி, தலமலை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் தற்போது வியாபாரிகள் முகாமிட்டு விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்கின்றனர். இதனால் கிலோ 5 ரூபாயில் இருந்து 20 ரூபாய் வரை அதிகரித்து முட்டைகோஸ் தற்போது கிலோ 28 ரூபாயை எட்டியுள்ளது.

முட்டைகோஸ் பயிரிட விவசாயிகள் ஆர்வம்

உற்பத்தி செலவு கிலோ 5 ரூபாயாக இருந்த நிலையில், இந்தாண்டு விவசாயிகளுக்கு முட்டைகோஸ் நல்ல லாபம் தந்துள்ளதால் தற்போது முட்டைகோஸ் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: அதிமுக ஆட்சி விவசாயிகளாலேயே விரட்டி அடிக்கப்படும் - மு.க.ஸ்டாலின்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைக்கிராமங்களில் மானாவாரி விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. ஊட்டியில் நிலவும் தட்பவெப்பநிலை காணப்படுவதால் மலைக்காய்கறி பயிரான காலிபிளவர், முட்டைகோஸ் சாகுபடி செய்யப்படுகிறது. போதிய மழை பொழிவு இல்லாததால் குறைந்த நீரில் சாகுபடி செய்வதற்கு சொட்டுநீர் பாசனம் முறையை பயன்படுத்தி வருகின்றனர்.

மூன்று மாத பயிரான முட்டைகோஸ் பயிரை நாற்றாங்கால் முறையில் குழிதட்டுகளில் வளர்க்கின்றனர். இந்த குழித்தட்டுகளில் வளர்ந்த பயிரை வாங்கி ஒரு ஏக்கரில் 25 ஆயிரம் பயிர் நடவு செய்து வருகின்றனர். குறுகிய கால பயிரான முட்டைகோஸ் தற்போது அறுவடை செய்யப்பட்டு கோவை, மேட்டுப்பாளையம், சென்னைக்கு அனுப்பப்படுகிறது. அண்மைகாலமாக வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து கிலோ 120 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், வெங்காயம் பயன்பாடு உள்ள போன்டா, பஜ்ஜி போன்ற கார வகைகளுக்கு முட்டைகோஸ் பயன்படுத்தப்படுகிறது

முட்டைகோஸ் விலை உயர்வு
முட்டைகோஸ் விலை உயர்வு

முட்டைகோஸுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளதால் தாளவாடி, தொட்டகாசனூர், சூசைபுரம், பனஹள்ளி, தலமலை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் தற்போது வியாபாரிகள் முகாமிட்டு விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்கின்றனர். இதனால் கிலோ 5 ரூபாயில் இருந்து 20 ரூபாய் வரை அதிகரித்து முட்டைகோஸ் தற்போது கிலோ 28 ரூபாயை எட்டியுள்ளது.

முட்டைகோஸ் பயிரிட விவசாயிகள் ஆர்வம்

உற்பத்தி செலவு கிலோ 5 ரூபாயாக இருந்த நிலையில், இந்தாண்டு விவசாயிகளுக்கு முட்டைகோஸ் நல்ல லாபம் தந்துள்ளதால் தற்போது முட்டைகோஸ் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: அதிமுக ஆட்சி விவசாயிகளாலேயே விரட்டி அடிக்கப்படும் - மு.க.ஸ்டாலின்

Last Updated : Oct 29, 2020, 6:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.