ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த முயற்சிக்கும் திமுகவின் திட்டம் பலிக்காது - கே.சி. கருப்பணன்! - அதிமுக அமைச்சர் கே.சி. கருப்பணன்

ஈரோடு: உள்ளாட்சித் தேர்தல் நடந்து விடக்கூடாது என்கிற நோக்கத்தில் திமுக எடுத்துவரும் முயற்சிகள் எதுவும் பலிக்காது என்றும் கட்டாயம் உள்ளாட்சித்தேர்தல் நடைபெறுமென்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் தெரிவித்துள்ளார்.

admk minister k c karuppannan
author img

By

Published : Nov 25, 2019, 7:23 PM IST

தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் பவானி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளான பவானி நகராட்சி, ஆண்டிகுளம், குருப்பநாயக்கன்பாளையம், வரதநல்லூர், சன்னியாசிப்பட்டி, மைலம்பாடி, தொட்டிபாளையம் பகுதிகளில் நேரடியாக பெறப்பட்ட மனுக்களில் தகுதியுள்ள மனுக்கள் தேர்வு செய்யப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா பவானியில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுற்றுச்சுசூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் கலந்து கொண்டு, 3 ஆயிரத்து 125 பயனாளிகளுக்கு, 13 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், தமிழ்நாட்டில் உணவுப் பொருட்கள் பேக்கிங் செய்யும் பைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு அலுவலர்கள் வணிக நிறுவனங்களில் சோதனை என்கிற பெயரில் அவற்றை பறிமுதல் செய்தாலோ, அபராதம் விதித்தாலோ வர்த்தகர்கள் புகார்கள் தெரிவிக்கலாம் என்றும் அவ்வாறு கொடுக்கும் புகார்களை கருத்தில் கொண்டு அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நலத்திட்ட உதவிகளை வழங்கிய கே.சி. கருப்பணன்

மேலும், உள்ளாட்சித் தேர்தல் நடந்து விடக்கூடாது என்கிற நோக்கத்தில் திமுக எடுத்து வரும் முயற்சிகள் எதுவும் பலிக்காது என்றும் நிச்சயம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுக, காங்கிரஸ் கூட்டணி அரசுதான் இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பி அங்குள்ள தமிழர்கள் கொல்ல காரணமாக இருந்தார்கள். தற்போது திமுக இலங்கைத் தமிழர்கள் குறித்து கவலைப்படுவது ஏன் என்றும், வைகோ மற்றும் திருமாளவளவன் போன்றவர்கள் இலங்கையை வைத்துதான் அரசியல் செய்து கொண்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க: இந்தியாவிலேயே முதன்முறையாக சிறுநீரக குழாய் அடைப்பு சிகிச்சை : திருச்சி அரசு மருத்துவமனை சாதனை!

தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் பவானி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளான பவானி நகராட்சி, ஆண்டிகுளம், குருப்பநாயக்கன்பாளையம், வரதநல்லூர், சன்னியாசிப்பட்டி, மைலம்பாடி, தொட்டிபாளையம் பகுதிகளில் நேரடியாக பெறப்பட்ட மனுக்களில் தகுதியுள்ள மனுக்கள் தேர்வு செய்யப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா பவானியில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுற்றுச்சுசூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் கலந்து கொண்டு, 3 ஆயிரத்து 125 பயனாளிகளுக்கு, 13 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், தமிழ்நாட்டில் உணவுப் பொருட்கள் பேக்கிங் செய்யும் பைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு அலுவலர்கள் வணிக நிறுவனங்களில் சோதனை என்கிற பெயரில் அவற்றை பறிமுதல் செய்தாலோ, அபராதம் விதித்தாலோ வர்த்தகர்கள் புகார்கள் தெரிவிக்கலாம் என்றும் அவ்வாறு கொடுக்கும் புகார்களை கருத்தில் கொண்டு அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நலத்திட்ட உதவிகளை வழங்கிய கே.சி. கருப்பணன்

மேலும், உள்ளாட்சித் தேர்தல் நடந்து விடக்கூடாது என்கிற நோக்கத்தில் திமுக எடுத்து வரும் முயற்சிகள் எதுவும் பலிக்காது என்றும் நிச்சயம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுக, காங்கிரஸ் கூட்டணி அரசுதான் இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பி அங்குள்ள தமிழர்கள் கொல்ல காரணமாக இருந்தார்கள். தற்போது திமுக இலங்கைத் தமிழர்கள் குறித்து கவலைப்படுவது ஏன் என்றும், வைகோ மற்றும் திருமாளவளவன் போன்றவர்கள் இலங்கையை வைத்துதான் அரசியல் செய்து கொண்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க: இந்தியாவிலேயே முதன்முறையாக சிறுநீரக குழாய் அடைப்பு சிகிச்சை : திருச்சி அரசு மருத்துவமனை சாதனை!

Intro:ஈரோடு ஆனந்த்
நவ25

திமுகவின் திட்டம் பலிக்காது: அமைச்சர் கருப்பணன்!

ஈரோடு: திமுகவைப் பொறுத்தவரை உள்ளாட்சித் தேர்தல் நடந்து விடக்கூடாது என்கிற நோக்கத்தில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது அவர்களின் திட்டம் பலிக்காது என்று சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளான பவானி நகராட்சி, ஆண்டிகுளம், குருப்பநாயக்கன்பாளையம், வரதநல்லூர், சன்னியாசிப்பட்டி, மைலம்பாடி, தொட்டிபாளையம் பகுதிகளில் நேரடியாக பெறப்பட்ட மனுக்களில் தகுதியுள்ள மனுக்கள் தேர்வு செய்யப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா பவானியில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சுசூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்ட 3 ஆயிரத்து 125 பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் கீழ் பட்டாக்கள், ஓய்வூதியம், புதிய குடும்ப அட்டைகள் உள்பட 13 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்டங்களை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கே.சிகருப்பணன், தமிழகத்தில் உணவுப் பொருட்கள் பேக்கிங் செய்யும் பைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு அலுவலர்கள் வணிக நிறுவனங்களில் சோதனை என்கிற பெயரில் அவற்றை பறிமுதல் செய்தாலோ, அபராதம் விதித்தாலோ வர்த்தகர்கள் புகார்கள் தெரிவித்தால் அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Body:மேலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து ஆளுங்கட்சிக்கு கெட்டபெயர் ஏற்படுத்துவதற்கான குற்றச்சாட்டு, புகார்கள் உள்பட அனைத்துவித நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் திமுகவைப் பொறுத்தவரை உள்ளாட்சித் தேர்தல் நடந்து விடக்கூடாது என்கிற நோக்கத்தில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவது பலிக்காது நிச்சயம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமென்றும், காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது அதிமுக கட்சித் தலைவர் ஜெயலலிதா மீது வீண் பழிகளைச் சுமத்தி கெட்டபெயர் உருவாக்கியவர்கள் தற்போது அவர் மீது கருணை காட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.

Conclusion:தொடர்ந்து அவர்,அதிமுகவில் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்தால் மட்டுமே கட்சிப் பதவிகளுக்கு போட்டியிட முடியும் என்பது முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் காலத்தைய சட்டம் என்றும், திமுகவும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணியாக இருந்த காலத்தில்தான் இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பி தமிழர்கள் கொல்ல காரணமாக இருந்தவர்கள் தற்போது கவலைப்படுவது ஏன் என்றும், வைகோ மற்றும் திருமாளவளவன் போன்றவர்கள் இலங்கையை வைத்துதான் அரசியல் செய்து கொண்டிருப்பதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டினார்.

பேட்டி : கே.சி.கருப்பணன் – தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர்..
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.