ETV Bharat / state

முடிஞ்சது தேர்தல்.... விற்பனை அமோகம்: 600 மாடுகள் 1 கோடி ரூபாய்க்கு விற்பனை!

author img

By

Published : Apr 9, 2021, 11:21 AM IST

ஈரோடு: தேர்தல் முடிந்ததால் தாரளமாகப் பணம் எடுத்துவர அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து கர்நாடக வியாபாரிகள் வருகை அதிகரிப்பால் புஞ்சைபுளியம்பட்டி கால்நடைச் சந்தையில் 600 மாடுகள் ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனையாகின.

புஞ்சைபுளியம்பட்டி கால்நடைச் சந்தை
புஞ்சைபுளியம்பட்டி கால்நடைச் சந்தை

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள கால்நடைச் சந்தையில் உழவர்கள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை விற்பனைக்கு கொண்டுவருவது வழக்கம். புஞ்சைபுளியம்பட்டி கால்நடைச் சந்தைக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து வாக்குப்பதிவு வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டுசெல்வோரைப் பறக்கும் படையினர் பிடித்து உரிய ஆவணமின்றி கொண்டுசெல்லும் பணத்தைப் பறிமுதல்செய்தனர்.

இதனால் வியாபாரிகள் வருகை குறைவாகவே இருந்தது. இந்த நிலையில் தேர்தல் முடிவடைந்ததால் பறக்கும் படை வாகன சோதனை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. பணம் கொண்டுசெல்லவும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனால் இன்று கூடிய புஞ்சைபுளியம்பட்டி சந்தைக்கு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வியாபாரிகள் அதிகளவில் வந்தனர். புஞ்சைபுளியம்பட்டி கால்நடைச் சந்தைக்கு நாட்டு மாடு, ஜெர்சி, சிந்து, கலப்பின வகை, கன்றுக்குட்டிகள் என 600-க்கும் மேற்பட்ட மாடுகளை உழவர்கள், வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டுவந்தனர்.

நாட்டு மாடு 75 ஆயிரத்துக்கும், ஜெர்சி மாடு 42 ஆயிரம் ரூபாய்க்கும், சிந்து மற்றும் கலப்பின வகை மாடுகள் 20 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரையிலும் விலைபோயின. சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட 600-க்கும் மேற்பட்ட மாடுகள் ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனையாகின.

பணம் கொண்டுசெல்ல தடை நீக்கப்பட்டுள்ளதால் இன்றையச் சந்தைக்கு கொண்டுவரப்பட்ட 600 மாடுகள் ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனையானதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இதையும் படிங்க: தொடங்கியது தஞ்சை பெரிய கோயில் சித்திரைப் பெருந்திருவிழா!

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள கால்நடைச் சந்தையில் உழவர்கள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை விற்பனைக்கு கொண்டுவருவது வழக்கம். புஞ்சைபுளியம்பட்டி கால்நடைச் சந்தைக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து வாக்குப்பதிவு வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டுசெல்வோரைப் பறக்கும் படையினர் பிடித்து உரிய ஆவணமின்றி கொண்டுசெல்லும் பணத்தைப் பறிமுதல்செய்தனர்.

இதனால் வியாபாரிகள் வருகை குறைவாகவே இருந்தது. இந்த நிலையில் தேர்தல் முடிவடைந்ததால் பறக்கும் படை வாகன சோதனை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. பணம் கொண்டுசெல்லவும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனால் இன்று கூடிய புஞ்சைபுளியம்பட்டி சந்தைக்கு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வியாபாரிகள் அதிகளவில் வந்தனர். புஞ்சைபுளியம்பட்டி கால்நடைச் சந்தைக்கு நாட்டு மாடு, ஜெர்சி, சிந்து, கலப்பின வகை, கன்றுக்குட்டிகள் என 600-க்கும் மேற்பட்ட மாடுகளை உழவர்கள், வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டுவந்தனர்.

நாட்டு மாடு 75 ஆயிரத்துக்கும், ஜெர்சி மாடு 42 ஆயிரம் ரூபாய்க்கும், சிந்து மற்றும் கலப்பின வகை மாடுகள் 20 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரையிலும் விலைபோயின. சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட 600-க்கும் மேற்பட்ட மாடுகள் ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனையாகின.

பணம் கொண்டுசெல்ல தடை நீக்கப்பட்டுள்ளதால் இன்றையச் சந்தைக்கு கொண்டுவரப்பட்ட 600 மாடுகள் ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனையானதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இதையும் படிங்க: தொடங்கியது தஞ்சை பெரிய கோயில் சித்திரைப் பெருந்திருவிழா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.