ETV Bharat / state

கொடைக்கானலில் உறைபனி சீசன் தொடக்கம்: சுற்றுலாப் பயணிகள் கடும் பாதிப்பு - Freezing Season at Kodaikanal

திண்டுக்கல்: கொடைக்கானலில் உறைபனி சீசன் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர்.

கொடைக்கானலில் உறைப்பனி சீசன் தொடக்கம்
கொடைக்கானலில் உறைப்பனி சீசன் தொடக்கம்
author img

By

Published : Jan 10, 2020, 10:50 AM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வழக்கமாக டிசம்பர் மாதம்முதல் பிப்ரவரி மாதம்வரை கடும் குளிர் நிலவும். ஆனால் இந்த ஆண்டு அதிகப்படியான மழை பெய்ததின் காரணமாக குளிர் சீசன் சற்று தாமதமாகத் தொடங்கியுள்ளது.

டிசம்பர் மாதம் குளிர் குறைந்திருந்த நிலையில் தற்போது குளிரின் தாக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது. இன்று ஏரிச்சாலையின் பல்வேறு பகுதிகளில் உறைபனி ஏற்பட்டது.

கொடைக்கானலில் உறைபனி சீசன் தொடக்கம்

குறிப்பாக மூஞ்சிக்கல் பகுதியில் ஏழு டிகிரி ஆகவும், ஏரிச்சாலையில் ஆறு டிகிரி ஆகவும் காணப்பட்டது. இதனால் சாலைகளில் சுற்றுலாப் பயணிகளின் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறன.

மேலும், குளிரின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பொதுமக்கள் ஆங்காங்கே நெருப்பு மூட்டி குளிர் காய்ந்துவருகின்றனர்.

இதையும் படிங்க: 22 ஆண்டுகளுக்கு பின் டெல்லியில் கடுங்குளிர் !

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வழக்கமாக டிசம்பர் மாதம்முதல் பிப்ரவரி மாதம்வரை கடும் குளிர் நிலவும். ஆனால் இந்த ஆண்டு அதிகப்படியான மழை பெய்ததின் காரணமாக குளிர் சீசன் சற்று தாமதமாகத் தொடங்கியுள்ளது.

டிசம்பர் மாதம் குளிர் குறைந்திருந்த நிலையில் தற்போது குளிரின் தாக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது. இன்று ஏரிச்சாலையின் பல்வேறு பகுதிகளில் உறைபனி ஏற்பட்டது.

கொடைக்கானலில் உறைபனி சீசன் தொடக்கம்

குறிப்பாக மூஞ்சிக்கல் பகுதியில் ஏழு டிகிரி ஆகவும், ஏரிச்சாலையில் ஆறு டிகிரி ஆகவும் காணப்பட்டது. இதனால் சாலைகளில் சுற்றுலாப் பயணிகளின் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறன.

மேலும், குளிரின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பொதுமக்கள் ஆங்காங்கே நெருப்பு மூட்டி குளிர் காய்ந்துவருகின்றனர்.

இதையும் படிங்க: 22 ஆண்டுகளுக்கு பின் டெல்லியில் கடுங்குளிர் !

Intro:திண்டுக்கல் 10.1.2010

கொடைக்கானலில் உறைபனி சீசன் தொடங்கியதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் பாதிப்பு.

Body:கொடைக்கானல் பகுதியில் வழக்கமாக டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை கடும் குளிர் நிலவும். ஆனால் இந்த ஆண்டு அதிகப்படியான மழை பெய்ததின் காரணமாக குளிர் சீசன் சற்று தாமதமாக தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தில் அவ்வப்போது சாரல் மழையும் மேகமூட்டங்களும் நிலவியதால் குளிர் குறைந்திருந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக மீண்டும் குளிரின் தாக்கம் கடுமையாக அதிகரித்தது. இதனிடையே இன்று ஏரிச்சாலையின் பல்வேறு பகுதிகளில் உறை பனி ஏற்பட்டது.

குறிப்பாக இன்று காலையில் மூஞ்சிக்கல் பகுதியில் 7 டிகிரி ஆகவும், ஏரிச்சாலையில் 6 டிகிரி ஆகவும் காணப்பட்டது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். கடும் குளிர் காரணமாக சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. மேலும், குளிரின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் ஆங்காங்கே நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். நடைபயிற்சி சென்றவர்களும் பாதுகாப்பான உடைகளை அணிந்து நடை பயிற்சி மேற்கொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.