ETV Bharat / state

பழனி கோயில் உண்டியல் எண்ணும் பணி: இதுவரை எவ்வளவு வருவாய் தெரியுமா?

author img

By

Published : Feb 22, 2023, 12:37 PM IST

பழனி மலைக்கோயிலில் தைப்பூசம் முடிந்ததையொட்டி உண்டியல் எண்ணும் பணி தொடங்கியது. இதுவரை காணிக்கை வருவாய் ரூ.5 கோடியை தாண்டியுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பழனி கோயில் உண்டியல் எண்ணும் பணி
பழனி கோயில் உண்டியல் எண்ணும் பணி
பழனி மலைக்கோயிலில் தைப்பூசம் முடிந்ததையொட்டி உண்டியல் எண்ணும் பணி தொடங்கியது

திண்டுக்கல்: பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் மலை மீது சென்று சுவாமி தரிசனம் செய்யும் போது காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக மலையடிவாரம் பாதவிநாயகர் கோயில் முதல் மலைகோயில் வரை பல்வேறு இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பக்தர்களால் செலுத்திய காணிக்கை நிறையும் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். தற்போது தைப்பூசத்திருவிழா நடைபெற்று நிறைவடைந்த நிலையில், உண்டியல்கள் நிறைந்தன. அதைத் தொடர்ந்து, உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது. பழனி கோயில் இணை ஆணையர் நடராஜன் முன்னிலையில் நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணியில் தேவஸ்தான ஊழியர்கள், வங்கி அதிகாரிகள், கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள், மற்றும் தொண்டு அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர். உண்டியல் எண்ணும் பணி சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது.

இதில் ரொக்கமாக 5 கோடியே 9 லட்சத்து 80 ஆயிரத்து 479 ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது. மேலும் தங்கம் 894 கிராமும், வெள்ளி 29 ஆயிரத்து 417 கிராமும், வெளிநாட்டு கரன்சி 2372 நோட்டுகளும் வருவாயாக கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணும் பணி நாளையும் தொடர்ந்து நடைபெறும் என திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: சாம்பல் புதனுடன் கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடக்கம்!

பழனி மலைக்கோயிலில் தைப்பூசம் முடிந்ததையொட்டி உண்டியல் எண்ணும் பணி தொடங்கியது

திண்டுக்கல்: பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் மலை மீது சென்று சுவாமி தரிசனம் செய்யும் போது காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக மலையடிவாரம் பாதவிநாயகர் கோயில் முதல் மலைகோயில் வரை பல்வேறு இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பக்தர்களால் செலுத்திய காணிக்கை நிறையும் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். தற்போது தைப்பூசத்திருவிழா நடைபெற்று நிறைவடைந்த நிலையில், உண்டியல்கள் நிறைந்தன. அதைத் தொடர்ந்து, உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது. பழனி கோயில் இணை ஆணையர் நடராஜன் முன்னிலையில் நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணியில் தேவஸ்தான ஊழியர்கள், வங்கி அதிகாரிகள், கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள், மற்றும் தொண்டு அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர். உண்டியல் எண்ணும் பணி சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது.

இதில் ரொக்கமாக 5 கோடியே 9 லட்சத்து 80 ஆயிரத்து 479 ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது. மேலும் தங்கம் 894 கிராமும், வெள்ளி 29 ஆயிரத்து 417 கிராமும், வெளிநாட்டு கரன்சி 2372 நோட்டுகளும் வருவாயாக கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணும் பணி நாளையும் தொடர்ந்து நடைபெறும் என திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: சாம்பல் புதனுடன் கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.