ETV Bharat / briefs

கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை - ஈடிவி பாரத்தின் அதிர்ச்சி தரும் ஆய்வு!

author img

By

Published : Jul 13, 2020, 2:57 PM IST

Updated : Jul 14, 2020, 7:32 PM IST

திண்டுக்கல்: பொது ஊரடங்கால் முடங்கிக் கிடக்கும் ஏழை, எளிய மக்களை சுரண்டும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களால் தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

suicide
suicide

திண்டுக்கல் மாவட்டம், ஜோசப் காலனியைச் சேர்ந்தவர் மோகன் (55). இவரது மனைவி விஜயா (51). ஆட்டோ ஓட்டுநரான மோகன், வங்கி அல்லாத நிதி நிறுவனமான 'கிராம விடியல்' தனியார் வங்கியில் கடன் பெற்றுள்ளார். கரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட பொது ஊரடங்கால் வருமானம் இழந்த மோகனிடம், நிதி நிறுவன ஊழியர்கள் கடனை செலுத்தும்படி நிர்பந்தித்துள்ளனர். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான கணவன், மனைவி இருவருமே விஷம் குடித்து உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து காவல் துறை மேற்கொண்ட விசாரணையில் கடன் தொல்லையே காரணம் என்பது உறுதியடைந்திருப்பது மக்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதில், கவனிக்க வேண்டியது என்னவென்றால் ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசின் உத்தரவுகளை மதிக்காமல் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் கடன் தொகையை வசூலிப்பதுதான்.

இதனால், திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா அச்சத்தைவிட கடனை வசூலிக்கும் நிதி நிறுவனங்கள் தான் மக்களுக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன. தம்பதியின் இறப்பினால் வெளிச்சம் பெற்ற வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் அத்துமீறல்கள் குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் முன்னெடுத்த விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதில், சுய உதவி குழுக்கள், ’மைக்ரோ பைனான்ஸ்’ எனக் கூறும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மூலம் பெற்ற கடனை அடைக்கக்கோரி அவமதித்ததால், பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்ததும் தெரிய வந்துள்ளது.

ஊரடங்கு உத்தரவால் வேலையின்றித் தவித்து வரும் அடித்தட்டு மக்களிடம் கடன் வழங்கிய வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், கடனை திரும்ப செலுத்தக்கோரி, நிர்பந்தித்ததால் சென்ற வாரம் 'போதும்பொண்ணு' என்ற பெண் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். மனநலம் குன்றிய குழந்தையுடன் காலணி கடையில் பணிபுரியும் போதும்பொண்ணுவிற்கு ஊரடங்கினால் வருமானம் இல்லை. இருப்பினும், வாங்கிய கடன் தொகையை சேர்த்து செலுத்துவதாக தெரிவித்தும் அதை ஏற்க மறுத்த நிதி நிறுவனத்தினர் தரக்குறைவான வார்த்தைகளைப் பிரயோகித்து வீதியில் நின்று திட்டியுள்ளனர்.

அவர் பணிபுரியும் இடத்திற்கும் சென்று, கடனைக் கட்ட வேண்டுமென வற்புறுத்தியுள்ளனர். "தொடர் அவமானங்களினால் உயிர் வாழ்ந்து என்ன பயன் என மனம் நொந்து, கண்ணீரால் கரைசேர்க்க முடியாத கவலையோடு தற்கொலைக்கு முயற்சித்தேன். ஒருவேளை நான் இறந்திருந்தால் எனது மூன்று குழந்தைகளுக்கு யார் பாதுகாப்பு அளிப்பார்கள்.

இந்த சமூகம் காசு உள்ளவருக்கு ஒரு மாதிரியும், காசில்லாதவரை ஒருமாதிரியும் நடத்துகிறது. காசில்லாதவனை கடவுள் கூட எட்டிப் பார்ப்பதில்லை என்ற நிலை தான் உள்ளது. இவ்வளவு நடந்தும், என் வீட்டிற்கு வந்த அலுவலர்கள் விரைவில் பணத்தை கட்ட வலியுறுத்தி சென்றுள்ளனர்" என வேதனையுடன் தெரிவிக்கிறார், போதும்பொண்ணு.

திண்டுக்கல் நாடகக்கலைஞர் காலனியில் 100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு நாடகம் மற்றும் திருவிழா வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. இந்த ஆறு மாதம் தான் அவர்களின் வாழ்வாதாரமே.

இதில், கடன் வாங்கிய அமுதா என்பவர் கூறுகையில், "45 ஆண்டுகளாக நாடக நடிகையாக இருக்கிறேன். எனக்கு மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் கடன் வழங்கப்பட்டது. என்னைப் போன்று இங்குள்ள பலருக்கும் கடன் வழங்கப்பட்டது. நாங்களும் சரியாக கடனை செலுத்தி வந்த நிலையில் கரோனா வந்ததால் செலுத்த முடியவில்லை. அதற்காக எங்களது வேலையை விமர்சிக்கும் வகையில் பேசுகின்றனர். நாடக நடிகர்கள் என சொல்லிக்கொள்ள நாங்கள் ஒருபோதும் தயங்கியதில்லை. ஆனால், எங்கள் தொழிலை இழிவுபடுத்த இவர்களுக்கு யார் உரிமையளித்தது.

கடன் வசூலிக்கக்கூடாது என அரசு அறிவித்தும் எங்களை துன்புறுத்துகின்றனர். இதைக்கேட்டால் முதலமைச்சரும், அமைச்சர்களும் எங்களுக்கு கடனை வசூலிக்க விதிவிலக்கு அளித்திருப்பதாக கூறுகின்றனர். உண்மையில், மகளிர் சுய உதவிக்குழு என்ற பெயரில் பணம் வழங்கி விட்டு எங்களின் சுயத்தை இழிவுபடுத்துவது நியாயமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

"நிதி நிறுவன ஊழியர்கள் பணத்தை வசூலிக்க பகலில் மட்டுமல்ல இரவிலும் வருவதால் குடும்பத்தில் பிரச்னை அதிகரிக்கிறது. இதுபோன்ற சூழலில் எதற்கு இத்தனை பிரச்னைகளுக்கு இடையே அவமானங்களை சுமந்துகொண்டு வாழ வேண்டும். இதற்கு நாமும் தற்கொலை செய்து கொள்ளலாம் எனத் தோன்றுகிறது.

உண்மையில் நாடக கலைஞர்கள் நலிவடைந்த கலைஞர்கள் என பேசுகிறவர்கள் எங்களின் வாழ்வை மீட்க எந்த முயற்சியும் முன்னெடுக்கவில்லை. அரசு எங்களுக்கு போதுமான சமூக பாதுகாப்பு அளிக்காததினால், நாங்கள் இதுபோன்று வங்கி அல்லாத நிதி நிறுவனங்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதுபோன்ற சூழலில் எங்களது இயலாமையை பயன்படுத்தி இந்த நிறுவனங்கள் எங்களை சுரண்டுகிறார்கள்" என்கிறார் பூங்கோடி.

இதுகுறித்து திண்டுக்கல் ஆட்சியர் விஜயலட்சுமியிடம் கேட்டபோது, "திண்டுக்கல் மாவட்டத்தில் ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசின் உத்தரவை மீறி, செயல்படும் தனியார் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களிடம் அலுவலர்கள் விசாரணை மேற்கொள்வார்கள்" என உறுதியளித்தார்.

இதையும் படிங்க: பாஜகவில் இணையமாட்டேன் -சச்சின் பைலட் திட்டவட்டம்

திண்டுக்கல் மாவட்டம், ஜோசப் காலனியைச் சேர்ந்தவர் மோகன் (55). இவரது மனைவி விஜயா (51). ஆட்டோ ஓட்டுநரான மோகன், வங்கி அல்லாத நிதி நிறுவனமான 'கிராம விடியல்' தனியார் வங்கியில் கடன் பெற்றுள்ளார். கரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட பொது ஊரடங்கால் வருமானம் இழந்த மோகனிடம், நிதி நிறுவன ஊழியர்கள் கடனை செலுத்தும்படி நிர்பந்தித்துள்ளனர். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான கணவன், மனைவி இருவருமே விஷம் குடித்து உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து காவல் துறை மேற்கொண்ட விசாரணையில் கடன் தொல்லையே காரணம் என்பது உறுதியடைந்திருப்பது மக்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதில், கவனிக்க வேண்டியது என்னவென்றால் ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசின் உத்தரவுகளை மதிக்காமல் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் கடன் தொகையை வசூலிப்பதுதான்.

இதனால், திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா அச்சத்தைவிட கடனை வசூலிக்கும் நிதி நிறுவனங்கள் தான் மக்களுக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன. தம்பதியின் இறப்பினால் வெளிச்சம் பெற்ற வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் அத்துமீறல்கள் குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் முன்னெடுத்த விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதில், சுய உதவி குழுக்கள், ’மைக்ரோ பைனான்ஸ்’ எனக் கூறும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மூலம் பெற்ற கடனை அடைக்கக்கோரி அவமதித்ததால், பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்ததும் தெரிய வந்துள்ளது.

ஊரடங்கு உத்தரவால் வேலையின்றித் தவித்து வரும் அடித்தட்டு மக்களிடம் கடன் வழங்கிய வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், கடனை திரும்ப செலுத்தக்கோரி, நிர்பந்தித்ததால் சென்ற வாரம் 'போதும்பொண்ணு' என்ற பெண் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். மனநலம் குன்றிய குழந்தையுடன் காலணி கடையில் பணிபுரியும் போதும்பொண்ணுவிற்கு ஊரடங்கினால் வருமானம் இல்லை. இருப்பினும், வாங்கிய கடன் தொகையை சேர்த்து செலுத்துவதாக தெரிவித்தும் அதை ஏற்க மறுத்த நிதி நிறுவனத்தினர் தரக்குறைவான வார்த்தைகளைப் பிரயோகித்து வீதியில் நின்று திட்டியுள்ளனர்.

அவர் பணிபுரியும் இடத்திற்கும் சென்று, கடனைக் கட்ட வேண்டுமென வற்புறுத்தியுள்ளனர். "தொடர் அவமானங்களினால் உயிர் வாழ்ந்து என்ன பயன் என மனம் நொந்து, கண்ணீரால் கரைசேர்க்க முடியாத கவலையோடு தற்கொலைக்கு முயற்சித்தேன். ஒருவேளை நான் இறந்திருந்தால் எனது மூன்று குழந்தைகளுக்கு யார் பாதுகாப்பு அளிப்பார்கள்.

இந்த சமூகம் காசு உள்ளவருக்கு ஒரு மாதிரியும், காசில்லாதவரை ஒருமாதிரியும் நடத்துகிறது. காசில்லாதவனை கடவுள் கூட எட்டிப் பார்ப்பதில்லை என்ற நிலை தான் உள்ளது. இவ்வளவு நடந்தும், என் வீட்டிற்கு வந்த அலுவலர்கள் விரைவில் பணத்தை கட்ட வலியுறுத்தி சென்றுள்ளனர்" என வேதனையுடன் தெரிவிக்கிறார், போதும்பொண்ணு.

திண்டுக்கல் நாடகக்கலைஞர் காலனியில் 100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு நாடகம் மற்றும் திருவிழா வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. இந்த ஆறு மாதம் தான் அவர்களின் வாழ்வாதாரமே.

இதில், கடன் வாங்கிய அமுதா என்பவர் கூறுகையில், "45 ஆண்டுகளாக நாடக நடிகையாக இருக்கிறேன். எனக்கு மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் கடன் வழங்கப்பட்டது. என்னைப் போன்று இங்குள்ள பலருக்கும் கடன் வழங்கப்பட்டது. நாங்களும் சரியாக கடனை செலுத்தி வந்த நிலையில் கரோனா வந்ததால் செலுத்த முடியவில்லை. அதற்காக எங்களது வேலையை விமர்சிக்கும் வகையில் பேசுகின்றனர். நாடக நடிகர்கள் என சொல்லிக்கொள்ள நாங்கள் ஒருபோதும் தயங்கியதில்லை. ஆனால், எங்கள் தொழிலை இழிவுபடுத்த இவர்களுக்கு யார் உரிமையளித்தது.

கடன் வசூலிக்கக்கூடாது என அரசு அறிவித்தும் எங்களை துன்புறுத்துகின்றனர். இதைக்கேட்டால் முதலமைச்சரும், அமைச்சர்களும் எங்களுக்கு கடனை வசூலிக்க விதிவிலக்கு அளித்திருப்பதாக கூறுகின்றனர். உண்மையில், மகளிர் சுய உதவிக்குழு என்ற பெயரில் பணம் வழங்கி விட்டு எங்களின் சுயத்தை இழிவுபடுத்துவது நியாயமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

"நிதி நிறுவன ஊழியர்கள் பணத்தை வசூலிக்க பகலில் மட்டுமல்ல இரவிலும் வருவதால் குடும்பத்தில் பிரச்னை அதிகரிக்கிறது. இதுபோன்ற சூழலில் எதற்கு இத்தனை பிரச்னைகளுக்கு இடையே அவமானங்களை சுமந்துகொண்டு வாழ வேண்டும். இதற்கு நாமும் தற்கொலை செய்து கொள்ளலாம் எனத் தோன்றுகிறது.

உண்மையில் நாடக கலைஞர்கள் நலிவடைந்த கலைஞர்கள் என பேசுகிறவர்கள் எங்களின் வாழ்வை மீட்க எந்த முயற்சியும் முன்னெடுக்கவில்லை. அரசு எங்களுக்கு போதுமான சமூக பாதுகாப்பு அளிக்காததினால், நாங்கள் இதுபோன்று வங்கி அல்லாத நிதி நிறுவனங்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதுபோன்ற சூழலில் எங்களது இயலாமையை பயன்படுத்தி இந்த நிறுவனங்கள் எங்களை சுரண்டுகிறார்கள்" என்கிறார் பூங்கோடி.

இதுகுறித்து திண்டுக்கல் ஆட்சியர் விஜயலட்சுமியிடம் கேட்டபோது, "திண்டுக்கல் மாவட்டத்தில் ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசின் உத்தரவை மீறி, செயல்படும் தனியார் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களிடம் அலுவலர்கள் விசாரணை மேற்கொள்வார்கள்" என உறுதியளித்தார்.

இதையும் படிங்க: பாஜகவில் இணையமாட்டேன் -சச்சின் பைலட் திட்டவட்டம்

Last Updated : Jul 14, 2020, 7:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.