தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி கரையோரப் பகுதிகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று நாள்களாக விட்டு விட்டு மழை பெய்தது.
காவிரி கரையோர பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 3 நாள்களாக தொடர்ந்து அதிரித்துவருகிறது.
நேற்று ஒகேனக்கல்லுக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்துள்ளது.