ETV Bharat / state

லஞ்சம் கேட்ட சார்பாதிவாளரை கண்டித்து விவசாயிகள் போராட்டம்! - Defendant who bribed a Pennagaram farme

தர்மபுரி: விவசாய நிலத்தை பதிவு செய்ய லஞ்சம் கேட்ட சார்பதிவாளரை கண்டித்து விவசாயிகள் சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போரட்டத்தில் ஈடுபட்டனர்.

லஞ்சம் கேட்ட சார்பாதிவாளரை கண்டித்து விவசாயிகள் போராட்டம்
லஞ்சம் கேட்ட சார்பாதிவாளரை கண்டித்து விவசாயிகள் போராட்டம்
author img

By

Published : Dec 16, 2019, 7:15 PM IST

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் மூங்கில் மடுவு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி கோவிந்தராஜ். இவர் தனது விவசாய நிலத்தை பத்திரப்பதிவு செய்ய பென்னாகரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் கோவிந்தராஜிடம் சார்பதிவாளர் லட்சுமிகாந்தன் 60 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார்.

இதற்கு கோவிந்தாரஜ் மறுப்பு தெரிவித்ததால் சார்பதிவாளர் பத்திரம் வழங்குவதற்கு காலம் தாழ்த்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தாரஜ் சார்பதிவாளர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு உறுதுணையாக லட்சுமிகாந்தனிடம் லஞ்சம் கொடுத்து ஏமாந்த சிலரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லஞ்சம் கேட்ட சார்பாதிவாளரை பென்னாகரம் கண்டித்த விவசாயிகள்!

இதுகுறித்து கோவிந்தராஜ் கூறுகையில், "பென்னாகரம் பத்திரபதிவு அலுவலகத்தில் லஞ்சம் தராமல் ஒரு அடி நிலம்கூட பதிவு செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சார்பதிவாளர் லட்சுமிகாந்தன் அடாவடியால் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர்." என்று தெரிவித்தார். மேலும் தமிழ்நாடு அரசு இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து அவரை பணிநீக்கம் செய்யவேண்டும் எனவும் விவசாயிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இதையும் படிங்க:


ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டாலும் மேற்படிப்பில் ஆர்வம் காட்டும் சிங்கப் பெண்!

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் மூங்கில் மடுவு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி கோவிந்தராஜ். இவர் தனது விவசாய நிலத்தை பத்திரப்பதிவு செய்ய பென்னாகரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் கோவிந்தராஜிடம் சார்பதிவாளர் லட்சுமிகாந்தன் 60 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார்.

இதற்கு கோவிந்தாரஜ் மறுப்பு தெரிவித்ததால் சார்பதிவாளர் பத்திரம் வழங்குவதற்கு காலம் தாழ்த்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தாரஜ் சார்பதிவாளர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு உறுதுணையாக லட்சுமிகாந்தனிடம் லஞ்சம் கொடுத்து ஏமாந்த சிலரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லஞ்சம் கேட்ட சார்பாதிவாளரை பென்னாகரம் கண்டித்த விவசாயிகள்!

இதுகுறித்து கோவிந்தராஜ் கூறுகையில், "பென்னாகரம் பத்திரபதிவு அலுவலகத்தில் லஞ்சம் தராமல் ஒரு அடி நிலம்கூட பதிவு செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சார்பதிவாளர் லட்சுமிகாந்தன் அடாவடியால் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர்." என்று தெரிவித்தார். மேலும் தமிழ்நாடு அரசு இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து அவரை பணிநீக்கம் செய்யவேண்டும் எனவும் விவசாயிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இதையும் படிங்க:


ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டாலும் மேற்படிப்பில் ஆர்வம் காட்டும் சிங்கப் பெண்!

Intro:விவசாய நிலத்தை பதிவு செய்ய 60 ஆயிரம் லஞ்சம் கேட்ட சார்பதிவாளர் விவசாயிகள் சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் ‌.‌. Body:விவசாய நிலத்தை பதிவு செய்ய 60 ஆயிரம் லஞ்சம் கேட்ட சார்பதிவாளர் விவசாயிகள் சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் ‌.‌. Conclusion:விவசாய நிலத்தை பதிவு செய்ய 60 ஆயிரம் லஞ்சம் கேட்ட சார்பதிவாளர் விவசாயிகள் சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் ‌.‌. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் மூங்கில் மடுவு பகுதியைச் சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ்.இவர் தனது விவசாய நிலத்தை பத்திரப்பதிவு செய்ய பென்னாகரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.சார்பதிவாளர் 60 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் தர விரும்பாத கோவிந்தராஜ் தான் அரசுக்கு மட்டும் தான் பணம் கட்டுவேன் அதிகாரிகளுக்கு லஞ்சம் தர மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.லஞ்சம் தராத காரணத்தால் சார்பதிவாளர் லட்சுமிகாந்தன் அவரது நிலத்தை பதிவு செய்யாமல் ஒரு மாதமாக அழைத்து வருகிறார்.இன்று சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்த கோவிந்தராஜ் விரக்தியில் சார்பதிவாளர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் அவருக்கு உறுதுணையாக லட்சுமிகாந்தன் அது லஞ்சம் கொடுத்து ஏமாந்த சிலரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து கோவிந்தராஜ் பேசும்போது. தனக்கு சொந்தமான விவசாய நிலத்தை பத்திர பதிவு செய்ய பதிவாளர் லட்சுமிகாந்தன் 60 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகவும் லஞ்சம் தர முடியாது என்பதால் தனது நிலத்தை பதிவு செய்ய மறுப்பதாகவும் தெரிவித்தார்.பத்திரப்பதிவு அலுவலகத்தில் நேரடியாக சென்றால் பத்திர பதிவு செய்ய அலைகழித்து வருவதாகவும் இடைத்தரகர்கள் மூலம் சென்றால் உடனடியாக பத்திரபதிவு நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.பென்னாகரம் பத்திரபதிவு அலுவலகத்தில் லஞ்சம் தராமல் ஒரு அடி நிலம் கூட பதிவு செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சார்பதிவாளர் லட்சுமிகாந்தன் அடாவடியால் பென்னாகரம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் தங்கள் நிலங்களை பத்திர பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து அவரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.