ETV Bharat / state

தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிவரும் எம்.பி.க்கு பாராட்டு

தருமபுரி: தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிவரும் தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமாருக்கு பலர் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.

author img

By

Published : Aug 7, 2019, 4:43 PM IST

எம்.பி.செந்தில்குமார்

தருமபுரி மக்களவை உறுப்பினர் எஸ். செந்தில்குமார் ட்விட்டரில் தமக்கு கோரிக்கைவிடுக்கும் மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்துவருகிறார். முன்னதாக கோவையைச் சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீராங்கனை ஒருவர் விளையாட்டுப் போட்டியில் பங்குபெற நிதி உதவி கோரி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, வீராங்கனையின் வங்கிக் கணக்கு எண்ணை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார் செந்தில்குமார். அப்பதிவை தொடர்ந்து ஏராளமானோர் அந்த மாணவிக்கு நிதி உதவி வழங்கினர். அதேபோல், மருத்துவக் கல்லூரியில் படிக்க நிதி இல்லாத காரணத்தால் பாதிக்கப்பட்டிருந்த மாணவி ஒருவருக்கு தனியார் கல்லூரி தாளாளர் ஒருவர் மூலம் படிக்க ஏற்பாடு செய்திருந்தார்.

சாலையின் மையப்பகுதியில் உள்ள மின் கம்பம்
சாலையின் மையப்பகுதியில் உள்ள மின் கம்பம்

இந்நிலையில், அவரது தருமபுரி தொகுதியில் அரூர் வட்டத்திற்கு உட்பட்ட செல்லம்பட்டி ஊராட்சியில் அமைக்கப்பட்ட புதிய சாலையின் நடுவே உள்ள மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என புகைப்படத்துடன், கோரிக்கை ஒன்றை தமிழ் அழகன் என்பவர் ட்விட்டரில் விடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, செந்தில்குமாரின் முயற்சியால் இரண்டு நாட்களில் மின் கம்பம் அகற்றப்பட்டது. இப்படி ட்விட்டரில் பதிவிடப்படும் மக்களின் கோரிக்கையை செந்தில் நிறைவேற்றியுள்ளது அனைவரிடமும் பாராட்டை பெற்றுள்ளது.

சாலையின் மையப்பகுதியில் இருந்த மின் கம்பம் அகற்றும் முன், அகற்றிய பின்
சாலையின் மையப்பகுதியிலிருந்த மின் கம்பம் அகற்றும் முன், அகற்றிய பின்

தருமபுரி மக்களவை உறுப்பினர் எஸ். செந்தில்குமார் ட்விட்டரில் தமக்கு கோரிக்கைவிடுக்கும் மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்துவருகிறார். முன்னதாக கோவையைச் சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீராங்கனை ஒருவர் விளையாட்டுப் போட்டியில் பங்குபெற நிதி உதவி கோரி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, வீராங்கனையின் வங்கிக் கணக்கு எண்ணை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார் செந்தில்குமார். அப்பதிவை தொடர்ந்து ஏராளமானோர் அந்த மாணவிக்கு நிதி உதவி வழங்கினர். அதேபோல், மருத்துவக் கல்லூரியில் படிக்க நிதி இல்லாத காரணத்தால் பாதிக்கப்பட்டிருந்த மாணவி ஒருவருக்கு தனியார் கல்லூரி தாளாளர் ஒருவர் மூலம் படிக்க ஏற்பாடு செய்திருந்தார்.

சாலையின் மையப்பகுதியில் உள்ள மின் கம்பம்
சாலையின் மையப்பகுதியில் உள்ள மின் கம்பம்

இந்நிலையில், அவரது தருமபுரி தொகுதியில் அரூர் வட்டத்திற்கு உட்பட்ட செல்லம்பட்டி ஊராட்சியில் அமைக்கப்பட்ட புதிய சாலையின் நடுவே உள்ள மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என புகைப்படத்துடன், கோரிக்கை ஒன்றை தமிழ் அழகன் என்பவர் ட்விட்டரில் விடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, செந்தில்குமாரின் முயற்சியால் இரண்டு நாட்களில் மின் கம்பம் அகற்றப்பட்டது. இப்படி ட்விட்டரில் பதிவிடப்படும் மக்களின் கோரிக்கையை செந்தில் நிறைவேற்றியுள்ளது அனைவரிடமும் பாராட்டை பெற்றுள்ளது.

சாலையின் மையப்பகுதியில் இருந்த மின் கம்பம் அகற்றும் முன், அகற்றிய பின்
சாலையின் மையப்பகுதியிலிருந்த மின் கம்பம் அகற்றும் முன், அகற்றிய பின்
Intro:tn_dpi_01_dpi_mp_tweeter_help_img_7204444Body:tn_dpi_01_dpi_mp_tweeter_help_img_7204444Conclusion:டுவிட்டரில் பொதுமக்கள் கோரிக்கையை நிறைவேற்றும் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி.எஸ்.செந்தில்குமார். தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி .என். வி.எஸ்.செந்தில்குமார் டுவிட்டரில் தமக்கு கோரிக்கை வைக்கும் தருமபுரி தொகுதி மக்களுக்கு உடனடியாக அந்த பிரச்சனைகளை தீர்த்து வைப்பதில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களையே இவர் முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார். கடந்த வாரம் தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்திற்கு உட்பட்ட செல்லம்பட்டி ஊராட்சியில் செல்லம்பட்டி முதல் கீழனூர் வரை செல்லும் சாலை புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையின் மையப்பகுதியில் மின் கம்பம் உள்ளது மின் கம்பத்தை அகற்றாமலேயே சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து சிரமப்பட்ட அப்பகுதியைச் சேர்ந்த தமிழ் அழகன் என்பவர் மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என தருமபுரி எம்பி செந்தில்குமாரின் டுவிட்டர் பக்கத்தில் தனது கோரிக்கையை படத்தோடு பதிவு செய்தார். நாடாளுமன்றத்தில் கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருந்த செந்தில்குமார் தனது உதவியாளரிடம் தெரிவித்து அரூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். இதனை தொடர்ந்து அரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மின்சார வாரியத்திடம் தெரிவித்து இரண்டு நாட்களில் மின் கம்பத்தை அகற்றியுள்ளனர். தற்போது செல்லம்பட்டி சாலை மையப்பகுதியில் இருந்த மின் கம்பம் அகற்றப்பட்டு பாதை சீராக உள்ள படத்தையும் செந்தில் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தருமபுரி மக்களுக்கு மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள பலக்கு உதவி செய்து வருகிறார். அவரது ட்விட்டர் பக்கத்தில்உதவி கேட்டு கோவையைச் சேர்ந்த விளையாட்டு வீராங்கனை ஒருவர் விளையாட்டுப் போட்டியில் பங்கு பெற நிதி உதவி கோரி பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து விளையாட்டு வீராங்கனையின் வங்கி கணக்கு எண்ணை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார் செந்தில்குமார். அப்ப பதிவை தொடர்ந்து ஏராளமானோர் அந்த மாணவிக்கு நிதி வழங்கினர். மருத்துவ கல்லூரியில் படிக்க நிதி இல்லாத காரணத்தால் பாதிக்கப்பட்டிருந்த மாணவி ஒருவருக்கு தனியார் கல்லூரி தாளாளர் ஒருவர் மூலம் படிக்க ஏற்பாடு செய்திருந்தார். தருமபுரி தொகுதி மக்கள் டுவிட்டரில் கோரிக்கையாக வைத்த தெருவிளக்கு பிரச்சனை. குடிநீர் பிரச்சனை. போக்குவரத்து பிரச்சனை .போன்ற கோரிக்கைகளை அவர் நிறைவேற்றியுள்ளார். பெரும்பாலும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களை அணுக வேண்டும் என்றால் அவரது அலுவலகங்களுக்கு செல்ல வேண்டும் அவ்வாறு சென்றால் கூட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது சட்டமன்ற உறுப்பினர்களின் உதவியாளர்கள்தான் அவரது அவர்களது அலுவலகத்தில் இருப்பார்கள் மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று அவை நிறைவேற்றப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ள இக்காலகட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரின் டுவிட்டர் பக்கத்தில் பிரச்சனையை பதிவிட்டால் உடனடியாக தீர்வு காணப்படும் நாடாளுமன்ற உறுப்பினராக திகழ்கிறார் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.