ETV Bharat / state

வேட்பாளர்கள் புதிய வங்கிக் கணக்கு தொடங்கி தேர்தல் செலவுகளை மேற்கொள்ள வேண்டும்!

தருமபுரி: தருமபுரி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் புதிதாக வங்கிக் கணக்கு தொடங்கி, அக்கணக்கிலிருந்து பணம் எடுத்து தேர்தல் செலவுகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் எஸ்.மலர்விழி தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Mar 29, 2019, 11:08 PM IST

தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலர் எஸ். மலர்விழி


தருமபுரி மக்களவை தொகுதியில் இறுதி வேட்டபாளர் பட்டியலை பொதுப்பார்வையாளர் தேபேந்திரகுமார் ஜெனா முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் எஸ்.மலர்விழி இன்று வெளியிட்டார். திமுக, பா.ம.க உள்ளிட்ட 15 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இத்தொகுதியில் மொத்தம் 27 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதில் நான்கு வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இன்று ஏட்டு வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை திரும்பப்பெற்று கொண்டனர்.

வேட்பாளர்களுக்கு சின்னங்களை ஒதுக்கியப் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாவட்ட தேர்தல் அலுவலர் எஸ்.மலர்விழி, " தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் இறுதி வேட்பாளர் மற்றும் சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணிகள் இன்று நிறைவுபெற்றது. இறுதியாக 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள், அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்களுக்கு தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் குறிதது விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.தேர்தல் விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்பட்டி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலர் எஸ். மலர்விழி

பெல் நிறுவன பொறியாளர்களைக்கொண்டு முதல்கட்டமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை பணிகள் நிறைவடைந்துள்ளது.தருமபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.இரண்டாம் கட்டமாக வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணிகள் பொது தேர்தல் பார்வையாளர், வேட்பாளர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்படும்.

தருமபுரி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அரூர்(தனி), பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணும் பணிகள் தருமபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.இதற்கான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ‘தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் புதிதாக வங்கிக் கணக்கு தொடங்கி, அக்கணக்கிலிருந்து பணம் எடுத்து தேர்தல் செலவுகளை மேற்கொள்ள வேண்டும் என இவ்வாறு மலர்விழி தெரிவித்தார்.


தருமபுரி மக்களவை தொகுதியில் இறுதி வேட்டபாளர் பட்டியலை பொதுப்பார்வையாளர் தேபேந்திரகுமார் ஜெனா முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் எஸ்.மலர்விழி இன்று வெளியிட்டார். திமுக, பா.ம.க உள்ளிட்ட 15 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இத்தொகுதியில் மொத்தம் 27 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதில் நான்கு வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இன்று ஏட்டு வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை திரும்பப்பெற்று கொண்டனர்.

வேட்பாளர்களுக்கு சின்னங்களை ஒதுக்கியப் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாவட்ட தேர்தல் அலுவலர் எஸ்.மலர்விழி, " தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் இறுதி வேட்பாளர் மற்றும் சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணிகள் இன்று நிறைவுபெற்றது. இறுதியாக 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள், அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்களுக்கு தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் குறிதது விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.தேர்தல் விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்பட்டி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலர் எஸ். மலர்விழி

பெல் நிறுவன பொறியாளர்களைக்கொண்டு முதல்கட்டமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை பணிகள் நிறைவடைந்துள்ளது.தருமபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.இரண்டாம் கட்டமாக வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணிகள் பொது தேர்தல் பார்வையாளர், வேட்பாளர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்படும்.

தருமபுரி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அரூர்(தனி), பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணும் பணிகள் தருமபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.இதற்கான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ‘தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் புதிதாக வங்கிக் கணக்கு தொடங்கி, அக்கணக்கிலிருந்து பணம் எடுத்து தேர்தல் செலவுகளை மேற்கொள்ள வேண்டும் என இவ்வாறு மலர்விழி தெரிவித்தார்.

Intro:TN_DPI_01_29_DPI COLLECTOR PRESSMEET__BYT_7204444


Body:TN_DPI_01_29_DPI COLLECTOR PRESSMEET__BYT_7204444


Conclusion:29.03.2019


தருமபுரி



தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் புதிதாக வங்கிக் கணக்கு தொடங்கி, அக்கணக்கிலிருந்து பணம் எடுத்து தேர்தல் செலவுகளை மேற்கொள்ள வேண்டும் என தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலர் எஸ்.மலர்விழி தெரிவித்துள்ளார்.


தருமபுரி மக்களவை தொகுதியில் இறுதி வேட்டபாளர் பட்டியலை பொதுப்பார்வையாளர் தேபேந்திரகுமார் ஜெனா அவர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் எஸ்.மலர்விழி இன்று வெளியிட்டார்.  இதன் திமுக, பா.ம.க உள்ளிட்ட 15 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.  இத்தொகுதியில் மொத்தம் 27 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.  இதில் 4 வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.  இன்று 8 வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை விலக்கிக்கொண்டனர்.


இந்த வேட்பாளர்களுக்கு சின்னங்களை ஒதுக்கியப்பின் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தேர்தல் அலுவலர் எஸ்.மலர்விழி ‘ தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் இறுதி வேட்பாளர் மற்றும் சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணிகள் இன்று நிறைவுபெற்றது.  இறுதியாக 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.  தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள், அங்கிகரிக்கப்பட்ட அரசியில் கட்சிகளின் பிரமுகர்களுக்கு தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் குறிதது விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.  தேர்தல் விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்பட்டி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


பெல் நிறுவன பொறியாளர்களைக்கொண்டு முதல்கட்டமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை பணிகள் நிறைவடைந்துள்ளது.  தருமபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் தருமபுரி நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  இரண்டாம் கட்டமாக வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணிகள் பொது தேர்தல் பார்வையாளர், வேட்பாளர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்படும். 


தருமபுரி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அரூர்(தனி), பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணும் பணிகள் தருமபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.  இதற்கான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் புதிதாக வங்கிக் கணக்கு தொடங்கி, அக்கணக்கிலிருந்து பணம் எடுத்து தேர்தல் செலவுகளை மேற்கொள்ள வேண்டும், 3 நாட்களுக்கு செலவுக் கணக்குகளை முறையாக தாக்கல் செய்யவேண்டும். தேர்தல் முடிந்து 30 நாட்களுக்குள் இறுதி செலவு கண்கை தாக்கல் செய்ய வேண்டும்.  நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வேட்பாளர்களின் சின்னம் வரைய அனுமதி இல்லை, கிராமப்பகுதிகளில் சம்மந்தப்பட்டவர்கள் அனுமதி பெற்று சின்னம் வரைய வேண்டும். பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள், பொதுக் கூட்டம், பிரச்சாரம் மேற்கொள்ள அரசியல் கட்சிகள் முறையான அனுமதிபெற வேண்டும். என்றார் மலர்விழி.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.