ETV Bharat / state

இந்தி போராட்டம் வாபஸ்: திமுகவை பாராட்டிய ஹெச்.ராஜா! - திமுகவை பாராட்டி பேசினார்

தருமபுரி: இந்தி திணிப்பை எதிர்த்து திமுக நடத்த இருந்த போராட்டத்தை வாபஸ் பெற்றது நற்செய்தியாக பார்க்கிறேன் என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

bjb h.raja
author img

By

Published : Sep 24, 2019, 8:28 PM IST

தருமபுரி மாவட்டத்தில் 370 சட்டப் பிரிவு ரத்து குறித்து, பாஜக சார்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அதில், இந்தியாவில் உள்ளவர்கள் ஒவ்வொரு விஷயத்திற்காகவும் தனித்தனி அட்டை வைத்துக் கொள்ளாமல், ஒன்றாக ஒரே அட்டையாக வைத்துக் கொள்ளவே, ஒரே நாடு ஒரே அடையாள அட்டை கொண்டு வரப்படுகிறது. ஆனால், மம்தா பானர்ஜி இதனை எதிர்த்து வாதிடுகிறார். எந்த நாட்டிலாவது அந்நாட்டின் குடிமக்களுக்கு அடையாள அட்டை வழங்குவதை எதிர்ப்பார்களா? அவர்கள் இந்த நாட்டு மக்களுக்கு விசுவாசமானவர்களாக இருக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.

பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா

தொடர்ந்து பேசுகையில், நாட்டின் முதல் பிரதமராக இருந்த ஜவகர்லால் நேருவின் ஆட்சி, ஒரு தலைமைப் பண்பு இல்லாத, திறமை இல்லாத, தன்னம்பிக்கை இல்லாத அரசாக இருந்தது. இந்தியக் குடியுரிமை சட்டம், அரசியல் சட்டம் வந்தபோதே தேசிய அடையாள பதிவேடு வந்திருக்க வேண்டும். இந்த நாட்டிற்குள் யார் வேண்டுமானாலும் வரலாம், வெளியே செல்லலாம் என்று சொல்பவர்கள் நாட்டின் விரோதிகள் ஆவர். எல்லோரும் வந்து செல்வதற்கு இது என்ன சத்திரமா என்று காட்டாமாக பேசினார்.

மேலும், தமிழ்நாட்டில் சில நாட்களாக நல்ல செய்திகள் மட்டுமே என் காதில் விழுகிறது. இந்தி திணிப்பு எதிர்த்து திமுகவின் போராட்டம் வாபஸ், ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ், வங்கி ஊழியர்கள் போராட்டம் வாபஸ் என நல்ல செய்திகளே வந்துகொண்டிருக்கின்றன என்றார்.

இதையும் படிங்க: திமுகவினர், திருமா, வைகோ இந்த நாட்டின் தீய சக்திகள் -ஹெச்.ராஜா

தருமபுரி மாவட்டத்தில் 370 சட்டப் பிரிவு ரத்து குறித்து, பாஜக சார்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அதில், இந்தியாவில் உள்ளவர்கள் ஒவ்வொரு விஷயத்திற்காகவும் தனித்தனி அட்டை வைத்துக் கொள்ளாமல், ஒன்றாக ஒரே அட்டையாக வைத்துக் கொள்ளவே, ஒரே நாடு ஒரே அடையாள அட்டை கொண்டு வரப்படுகிறது. ஆனால், மம்தா பானர்ஜி இதனை எதிர்த்து வாதிடுகிறார். எந்த நாட்டிலாவது அந்நாட்டின் குடிமக்களுக்கு அடையாள அட்டை வழங்குவதை எதிர்ப்பார்களா? அவர்கள் இந்த நாட்டு மக்களுக்கு விசுவாசமானவர்களாக இருக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.

பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா

தொடர்ந்து பேசுகையில், நாட்டின் முதல் பிரதமராக இருந்த ஜவகர்லால் நேருவின் ஆட்சி, ஒரு தலைமைப் பண்பு இல்லாத, திறமை இல்லாத, தன்னம்பிக்கை இல்லாத அரசாக இருந்தது. இந்தியக் குடியுரிமை சட்டம், அரசியல் சட்டம் வந்தபோதே தேசிய அடையாள பதிவேடு வந்திருக்க வேண்டும். இந்த நாட்டிற்குள் யார் வேண்டுமானாலும் வரலாம், வெளியே செல்லலாம் என்று சொல்பவர்கள் நாட்டின் விரோதிகள் ஆவர். எல்லோரும் வந்து செல்வதற்கு இது என்ன சத்திரமா என்று காட்டாமாக பேசினார்.

மேலும், தமிழ்நாட்டில் சில நாட்களாக நல்ல செய்திகள் மட்டுமே என் காதில் விழுகிறது. இந்தி திணிப்பு எதிர்த்து திமுகவின் போராட்டம் வாபஸ், ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ், வங்கி ஊழியர்கள் போராட்டம் வாபஸ் என நல்ல செய்திகளே வந்துகொண்டிருக்கின்றன என்றார்.

இதையும் படிங்க: திமுகவினர், திருமா, வைகோ இந்த நாட்டின் தீய சக்திகள் -ஹெச்.ராஜா

Intro:tn_dpi_01_bjp_hraja_pressmeet_vis_7204444


Body:tn_dpi_01_bjp_hraja_pressmeet_vis_7204444


Conclusion:

தர்மபுரியில் 370 சட்டப் பிரிவு ரத்து குறித்து, பாஜக சார்பில் நடைபெறும் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் தேசிய தலைவர் ஹெச் ராஜா பேட்டி,


இந்தியாவில் எந்த இடத்திலும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்ததை கண்டித்து போராட்டம் நடைபெற வில்லை. தமிழகத்தில் மட்டும் தான் நடந்திருக்கிறது

 காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 அமலில் இருந்த பொழுது பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. தற்பொழுது சட்டப்பிரிவு 370 ரத்து செய்த பிறகு ஜம்மு காஷ்மீரில் உள்ள மக்களுக்கு முழுமையான இட ஒதுக்கீடு கிடைத்துள்ளது. தமிழகத்தில் சமூக நீதி பேசும் திமுக, காங்கிரஸ், வைகோ, திருமாவளவன் போன்றவர்கள் இதை ஆதரிக்கவில்லை. இவர்கள் தேச துரோகிகள். கடந்த வாரம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதார  தேக்க நிலையிலிருந்து விடுபட  அதற்கு ஊக்கம் அளிப்பதற்காக, கார்ப்பரேட் வரி விலக்கு பெரிய அளவில் குறைக்கப்பட்டு வேலைவாய்ப்பை அதிகரிக்கவும்,  தொழில் முனைவோருக்கு கடன் வழங்க வழி வகுக்கப்பட்டுள்ளது.. சிறு குறு தொழிலாளர்கள் வருகிற மார்ச் மாதம் வரை தங்களது தொழிலை நடத்துவதற்கான வங்கிகளின் விதிமுறைகள் தளர்த்தப்பட்டு உள்ளது. ஆகவே இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் நல்ல எழுச்சி பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


இந்தியாவில் உள்ளவர்கள் ஒவ்வொரு விஷயத்திற்காகவும் தனித்தனி அட்டை வைத்துக் கொள்ளாமல், ஒன்றாக ஒரே அட்டையாக வைத்துக்கொள்ளவே, 

ஒரே நாடு ஒரே அடையாள அட்டை. ஆனால் பாரத நாட்டில் தேசிய குடிமக்கள் பதிவேடு எதிர்க்கிறார்கள்.  இதனை மம்தா பானர்ஜி எதிர்க்கிறார். எந்த நாட்டிலாவது தங்களது நாட்டின் குடிமக்களுக்கு அடையாள அட்டை வழங்குவதை எதிர்ப்பவர்களா  அவர்கள்  இந்த நாட்டு மக்களுக்கு விசுவாசமானவர்களாக இருக்க முடியுமா இதை மம்தா பேனர்ஜி எதிர்க்கிறார்.  நாட்டின் முதல் தலைமையாக இருந்த ஜவகர்லால் நேரு தலைமை  ஒரு தலைமைப் பண்பு இல்லாத, திறமை இல்லாத, தன்னம்பிக்கை இல்லாத ஒரு அரசு அமைந்தது. இந்திய குடியுரிமை  சட்டம், அரசியல் சட்டம் வந்தபோது தேசிய அடையாள பதிவேடு  வந்திருக்க வேண்டும். இந்த நாட்டிற்குள் யார் வேண்டுமானாலும் வரலாம், வெளியே செல்லலாம் என்று சொல்பவர்கள் நாட்டின் விரோதிகள். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நல்ல செய்திகள் மட்டுமே என் காதில் விழுகிறது. இந்தி திணிப்பு எதிர்த்து  திமுகவின் போராட்டம் வாபஸ், ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ் வங்கி ஊழியர்கள் போராட்டம் வாபஸ் என்ன நல்ல செய்திகள் வருகின்றன என தெரிவித்தார்.


தொடர்ந்து ஐஎன்எக்ஸ் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவித்தது குறித்து கேட்டதற்கு,



அ ராசா, கனிமொழி  2 ஜி ஊழல் வழக்கில் வழக்கில் திகார் சிறையில் இருந்தபொழுது, காங்கிரஸ் கட்சி தான் ஆட்சி  அமைத்திருந்தது. நாங்கள் ஆட்சி அமைக்க வில்லை.  அப்பொழுது அதிகாரிகள் பரிந்துரை ஏற்று தான் ஆ.ராசா கனிமொழி யை கைது செய்தார்கள் அப்போது  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஏன் கருத்து  தெரிவிக்கவில்லை. தற்பொழுது ஐஎன்எக்ஸ் விவகாரத்தில் சிதம்பரத்திற்கு மட்டும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கருத்து தெரிவித்திருப்பது, ஏதோ பேச வேண்டும் என்பதற்காக பேசியிருக்கிறார்.  முதலில் கனிமொழி, ராசா விவகாரம் குறித்து மன்மோகன் சிங் விளக்கம் கொடுக்க வேண்டும். என ஹெச். ராஜா தெரிவித்தார்.


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.