ETV Bharat / state

பைக்கில் சென்ற மாற்றுத்திறனாளி மீது லத்தி வீசிய காவலர் - தொடரும் மனித உரிமை மீறல்! - பைக்கில் சென்ற மாற்றுதிறனாளி மீது லத்தி வீசிய காவலர்

கடலூர் : வேப்பூர் காவல் நிலைய காவல் அதிகாரிகள் விருத்தாசலம் செல்லும் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் சென்ற மாற்றுத்திறனாளி மீது லத்தியை வீசியதில் அவர் தலையில் காயம்பட்டு 8 தையல் போடப்பட்டுள்ளது.

Policeman attacked disability person
author img

By

Published : Sep 24, 2019, 1:25 PM IST

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள வேப்பூர் காவல் நிலைய காவல் அதிகாரிகள் விருத்தாசலம் செல்லும் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர் லாரியை முந்திச் செல்ல முயன்றுள்ளார். அப்போது காவல்துறையினர் இருசக்கரவாகனத்தை நிறுத்த முயன்ற போது, அவர் நிற்காமல் சென்றதால் ஆத்திரத்தில் லத்தியை வீசியுள்ளனர்.

https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cdl-01-policeman-attacked-disability-person-photo-script-7204906_24092019120210_2409f_1569306730_559.jpg
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி

இதில் இருசக்கரவாகனத்தில் சென்றவர் தலையில் லத்திபட்டு கீழே விழுந்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அவரை நெருங்கிப் பிடித்தபோது, தலையில் ரத்தம் கசிவதைக் கண்டு, உடனடியாக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதில் அவருக்கு தலையில் 8 தையல் போட்டுள்ளனர்.

Policeman attacked disability person
லத்தி வீசியதால் காயம் அடைந்த மாற்றுத் திறனாளி

பின்னர் காவல்துறை நடத்திய விசாரணையில் காயம்பட்டவர் வேலூர் மாவட்டம் என்.நாரையூர் கிராமத்தைச் சேர்ந்த காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி சங்கர்(47) என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து லத்தி வீசிய காவலர் ஜெயபாலிடம் வேப்பூர் காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி விசாரணை நடத்தினார். இந்நிலையில் காவலர் ஜெயபாலை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் உத்தரவிட்டிருக்கிறார்.

முன்னதாக, கடந்த வருடம்

திருச்சி அருகே இருசக்கரவாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த கர்ப்பிணிப்பெண் உஷா என்பவரை காவல் அதிகாரி எட்டி உதைத்ததில் உயிரிழந்தார். அதற்கு பல்வேறு மனித உரிமை அமைப்பினரும் கண்டனம் தெரிவிந்திருந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிங்க: கடலூர் காப்பானுக்கு ட்விட்டரில் பாராட்டு மழை..!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள வேப்பூர் காவல் நிலைய காவல் அதிகாரிகள் விருத்தாசலம் செல்லும் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர் லாரியை முந்திச் செல்ல முயன்றுள்ளார். அப்போது காவல்துறையினர் இருசக்கரவாகனத்தை நிறுத்த முயன்ற போது, அவர் நிற்காமல் சென்றதால் ஆத்திரத்தில் லத்தியை வீசியுள்ளனர்.

https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cdl-01-policeman-attacked-disability-person-photo-script-7204906_24092019120210_2409f_1569306730_559.jpg
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி

இதில் இருசக்கரவாகனத்தில் சென்றவர் தலையில் லத்திபட்டு கீழே விழுந்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அவரை நெருங்கிப் பிடித்தபோது, தலையில் ரத்தம் கசிவதைக் கண்டு, உடனடியாக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதில் அவருக்கு தலையில் 8 தையல் போட்டுள்ளனர்.

Policeman attacked disability person
லத்தி வீசியதால் காயம் அடைந்த மாற்றுத் திறனாளி

பின்னர் காவல்துறை நடத்திய விசாரணையில் காயம்பட்டவர் வேலூர் மாவட்டம் என்.நாரையூர் கிராமத்தைச் சேர்ந்த காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி சங்கர்(47) என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து லத்தி வீசிய காவலர் ஜெயபாலிடம் வேப்பூர் காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி விசாரணை நடத்தினார். இந்நிலையில் காவலர் ஜெயபாலை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் உத்தரவிட்டிருக்கிறார்.

முன்னதாக, கடந்த வருடம்

திருச்சி அருகே இருசக்கரவாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த கர்ப்பிணிப்பெண் உஷா என்பவரை காவல் அதிகாரி எட்டி உதைத்ததில் உயிரிழந்தார். அதற்கு பல்வேறு மனித உரிமை அமைப்பினரும் கண்டனம் தெரிவிந்திருந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிங்க: கடலூர் காப்பானுக்கு ட்விட்டரில் பாராட்டு மழை..!

Intro:கடலூர் மாவட்டம் வேப்பூரில் வாகன சோதனையில் மாற்றுத்திறனாளியை தாக்கிய காவலர் ஜெயபால் ஆயுதப்படைக்கு மாற்றம் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீஅபினவ் உத்தரவு.
Body:கடலூர்
செப்டம்பர் 24,


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள வேப்பூர் காவல் நிலைய போலீஸார் விருத்தாசலம் செல்லும் சாலையில் ஹெல்மெட், வாகன உரிமம் தொடர்பான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக லாரி ஒன்றும், பைக்கில் ஒருவரும் வந்த போது, லாரியை போலீஸார் மறித்த போது, லாரியை முந்திச் செல்ல பைக்கில் சென்றவர் முயன்றுள்ளார். அப்போது போலீஸார் அவரை நிறுத்தச் சொல்லியுள்ளனர். ஆனால் அவர் போலீஸாரைக் கண்டுக்கொள்ளாமல் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவலர் ஜெயபால், லத்தியை வீசியுள்ளார். இதில் மொபட்டில் சென்றவர் தலையில் விழந்த லத்தி, காயத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனால் அவர் கீழே விழுந்துள்ளார்.
இதையடுத்து போலீஸார் அவரை நெருங்கி பிடித்தபோது,தலையில் ரத்தம் கசிவதைக் கண்டு, உடனடியாக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், தலையில் 8 தையல் போட்டுள்ளனர். பின்னர் போலீஸார் விசாரணை நடத்தியதில், காயம்பட்டவர் வேலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த என்.நாரையூர் கிராமத்தைச் சேர்ந்த காது கேளாதா வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி சங்கர்(47) என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து லத்தி வீசிய காவலரிடம் வேப்பூர் காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி விசாரணை நடத்திவந்தார். இந்நிலையில் காவலர் ஜெயபாலை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் உத்தரவிட்டார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.