ETV Bharat / state

'தமிழ் மண்ணை அழிக்க நினைப்பவர்களுக்கு தோல்விதான் பரிசு..!' - கௌதமன் காட்டம்

author img

By

Published : May 30, 2019, 10:34 PM IST

கடலூர்: "தமிழ் மண்ணை அழிக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு தோல்வியை பரிசாக அளிப்போம்" என்று, தமிழ் பேரரசு கட்சியின் தலைவரும் திரைப்பட இயக்குநருமான கௌதமன் தெரிவித்தார்.

gowthaman

கடலூரில் கடந்த நான்கு ஆண்டுகளாக கொண்டாடப்படாமல் இருக்கும் கோடை விழாவை மாவட்ட ஆட்சியர் தலைமை ஏற்று நடத்தக்கோரி தமிழ் பேரரசு கட்சியின் தலைவரும் திரைப்பட இயக்குநருமான கௌதமன் கோரிக்கை மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கடலூர் கடற்கரையில் பல ஆண்டுகளாக மக்கள் கூடி கோடை விழா கொண்டாடுவது வழக்கம். ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக அந்த விழா நடத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் தலைமை ஏற்று நடத்தி கொடுக்குமாறு மனு அளித்தோம். அதற்கு மாவட்ட ஆட்சியர், சுற்றுலாத் துறை அமைச்சருடன் பேசி அதற்கான அரசு நிதி ஒதுக்கி கோடை விழா நடத்த ஏற்பாடு செய்ய முயற்சி செய்கிறேன்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கௌதமன்

எக்காரணம் கொண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம் இம்மண்ணில் வந்துவிடக் கூடாது என்பதற்காக தொடர்ந்து போராடிக் கொண்டு வருகிறோம். ஒருவேளை இந்த மண்ணில் ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தால் நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம். ஜல்லிக்கட்டை போல் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம். இந்த மண்ணை அழிக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு தோல்வியை பரிசாக அளிப்போம்", என்றார்.

கடலூரில் கடந்த நான்கு ஆண்டுகளாக கொண்டாடப்படாமல் இருக்கும் கோடை விழாவை மாவட்ட ஆட்சியர் தலைமை ஏற்று நடத்தக்கோரி தமிழ் பேரரசு கட்சியின் தலைவரும் திரைப்பட இயக்குநருமான கௌதமன் கோரிக்கை மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கடலூர் கடற்கரையில் பல ஆண்டுகளாக மக்கள் கூடி கோடை விழா கொண்டாடுவது வழக்கம். ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக அந்த விழா நடத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் தலைமை ஏற்று நடத்தி கொடுக்குமாறு மனு அளித்தோம். அதற்கு மாவட்ட ஆட்சியர், சுற்றுலாத் துறை அமைச்சருடன் பேசி அதற்கான அரசு நிதி ஒதுக்கி கோடை விழா நடத்த ஏற்பாடு செய்ய முயற்சி செய்கிறேன்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கௌதமன்

எக்காரணம் கொண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம் இம்மண்ணில் வந்துவிடக் கூடாது என்பதற்காக தொடர்ந்து போராடிக் கொண்டு வருகிறோம். ஒருவேளை இந்த மண்ணில் ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தால் நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம். ஜல்லிக்கட்டை போல் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம். இந்த மண்ணை அழிக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு தோல்வியை பரிசாக அளிப்போம்", என்றார்.

Intro:கடலூரில் கோடை விழா நடத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் தமிழ் பேரரசு கட்சியின் தலைவரும் திரைப்பட இயக்குனர் கௌதமன் மனு அளித்தார்


Body:கடலூர்
மே 30,

கடலூரில் கடந்த நான்கு ஆண்டுகளாக கடற்கரையில் மக்கள் கூடி கொண்டாடப்படும் கோடை விழாவை மாவட்ட ஆட்சியர் தலைமை ஏற்று நடத்தக்கோரி தமிழ் பேரரசு கட்சியின் தலைவரும் திரைப்பட இயக்குனருமான கௌதமன் கோரிக்கை மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது; கடலூர் கடற்கரையில் பல ஆண்டுகளாக பல லட்சம் மக்கள் கூடி கோடை விழா நடைபெற்று வந்தது ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக அந்த விழா நடத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது இதனை மாவட்ட ஆட்சியர் தலைமை ஏற்று நடத்தி கொடுக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் அதற்கு மாவட்ட ஆட்சியர் சுற்றுலாத் துறை அமைச்சருடன் பேசி அதற்கு அரசு நிதி ஒதுக்கி கோடை விழா நடத்த ஏற்பாடு செய்யப் முயற்சி செய்கிறேன் என கூறினார்.

எக்காரணம் கொண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம் இம்மண்ணில் வந்துவிடக் கூடாது என்பதற்காக தொடர்ந்து போராடிக் கொண்டு வருகிறோம் என்று தெரிவித்தோம் அதற்கு மாவட்ட ஆட்சியர் அது சம்பந்தமாக ஆய்வும் எந்தவித கோப்புகளும் உத்தரவிட்டு வரவில்லை என தெரிவித்தார்.

ஒருவேளை இந்த மண்ணில் ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தால் நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம். ஜல்லிக்கட்டை போல் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்.

மோடி அவர்களுக்கு பிரதமராக பொறுப்பேற்க இருக்கும் இந்நிலையில் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம் இந்தியா முழுவதும் வெற்றியை பெற்ற அவர்கள் தமிழ்நாட்டில் மட்டும் ஏன் பின்னடைவு ஏற்பட்டது என்று உணர்ந்து ஆய்வு செய்து அவர்கள் மாற்றிட வேண்டும் அவர்கள் நாளைக்கு நல்லது செய்தால் கூட கொண்டாட காத்திருக்கிறோம் அவர்கள் எங்களை அழிக்கவோ சிதைக்கவோ நினைத்தால் அவர்களுக்கு இப்ப கிடைத்த தோல்வியை விட தமிழ்நாடு மிகப்பெரிய தோல்வியை தரும் மேலும் அவர்களுக்கு பாடத்தை மட்டும் கற்பிக்கிற நிலை உருவாகும் என பேட்டி அளித்தார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.