கோவை: அருகே வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது, இந்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சோலையார் அணை கிடுகிடு வென்று உயர்ந்தது, மிக கனமழை பெய்து வந்ததால் சோலையார் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7100 கன அடியாகவும் இருந்தது. இதையடுத்து சோலையார் அணை 165 அடியில் 164 அடி நிரம்பியது.
பின்னர் பாதுகாப்பு கருதி அணை திறக்கப்பட்டது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 7100 கன அடி ஆகவும் அணையில் இருந்து நீர் வெளியேற்றம் மூன்று மதகுகள் வழியாக 1070 கனடியாகவும் சேடல் பகுதி வழியாக 4400 கன அடியகாவும் மொத்தம் 5470 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இதையும் படிங்க:12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 14ஆம் தேதி முதல் விடைத்தாள் நகல் பதிவிறக்கம்