ETV Bharat / state

கரடி தாக்கி ஒருவர் பலி; பாதுகாப்பு வேண்டி மக்கள் போராட்டம்!

கோயமுத்தூர்: வால்பாறையில் உள்ள ஐயர்பாடி எஸ்டேட்டில் கரடி தாக்கி ஒருவர் உயிழந்தார். அவரது உடலை எடுக்கவிடாமல் பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

author img

By

Published : Aug 12, 2019, 3:27 AM IST

KILLED BY BEAR

கோவை அடுத்த வால்பாறை பகுதியில் உள்ள ஐயர்பாடி எஸ்டேட்டில் தோட்ட மேலாளராக வேலை செய்பவர் சுப்பிரமணி(56). இவர் நேற்று இரவு வேலைக்கு சென்றுவிட்டு, வீடு திரும்ப தேயிலை தோட்டம் வழியாக வந்த பொழுது கரடி ஒன்று அவரை தாக்கி கொன்றது.

கரடி தாக்கியதில் உயிழந்த சுப்பிரமணி

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பொதுமக்கள், காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்தனர். இந்நிலையில், எஸ்டேட் பகுதியில் வன விலங்குகள் அதிகளவில் உள்ளது, அவை பொது மக்களை தாக்கியதில் பலர் உயிரிழந்துள்ளதால், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கரடி தாக்கி இறந்தவர் சடலத்தை உடற்கூறாய்விற்கு எடுத்து செல்ல அனுமதிக்காமல், வன விலங்குகளமிடருந்து பொது மக்களுக்கு பாதுகாப்பு தரக்கோரி பொதுமக்கள் வலியுறுத்தினர்.

கோவை அடுத்த வால்பாறை பகுதியில் உள்ள ஐயர்பாடி எஸ்டேட்டில் தோட்ட மேலாளராக வேலை செய்பவர் சுப்பிரமணி(56). இவர் நேற்று இரவு வேலைக்கு சென்றுவிட்டு, வீடு திரும்ப தேயிலை தோட்டம் வழியாக வந்த பொழுது கரடி ஒன்று அவரை தாக்கி கொன்றது.

கரடி தாக்கியதில் உயிழந்த சுப்பிரமணி

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பொதுமக்கள், காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்தனர். இந்நிலையில், எஸ்டேட் பகுதியில் வன விலங்குகள் அதிகளவில் உள்ளது, அவை பொது மக்களை தாக்கியதில் பலர் உயிரிழந்துள்ளதால், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கரடி தாக்கி இறந்தவர் சடலத்தை உடற்கூறாய்விற்கு எடுத்து செல்ல அனுமதிக்காமல், வன விலங்குகளமிடருந்து பொது மக்களுக்கு பாதுகாப்பு தரக்கோரி பொதுமக்கள் வலியுறுத்தினர்.

Intro:bear attackBody:bear attackConclusion:கோவை வால்பாறை: வால்பாறையில் தேயிலை தோட்ட தொழிலாளியை கரடி தாக்கி பலி.வால்பாறை-11

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த ஐயர்பாடி எஸ்டேட் பகுதியில் தோட்டம் மேலாளர் வீட்டிற்கு இரவு பணிக்காக சென்ற சுப்பிரமணி வயது 56 என்பவர் வேலை முடித்து காலையில் வீட்டிற்கு வரும் வழியில் தேயிலை தோட்டம் பகுதியில் கரடி ஒரு அவரை தாக்கி கொன்றது தகவல் அறிந்து வந்த பொது மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர் .எஸ்டேட் பகுதியில் வன விலங்குகள் அதிகரித்து பொது மக்களை தாக்கி பலர் உயிர் இழக்கின்றனர் பொது மக்களுக்கு பாதுகாப்பு தர கோரி கரடி தாக்கி இறந்தவர் உடலை மருத்துவ மனைக்கு எடுத்து செல்ல விடாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் கடந்த மாதம் முன்பு அய்யர் பாடியில் புலிமாட்டை அடித்து கொன்றது குறிப்பிடதக்கது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.