ETV Bharat / state

கருணாநிதியின் பிரமாண்ட சிலையைத் திறந்து வைக்கும் குடியரசு துணைத்தலைவர் - Venkaiah Naidu unveils the statue of karunanithi

ஓமந்தூரார் தோட்டத்தில் அமையவுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வரும் மே 28ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு திறந்து வைக்கவுள்ளார்.

கருணாநிதி
கருணாநிதி
author img

By

Published : May 22, 2022, 7:57 PM IST

சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தின் வளாகத்தில் கருணாநிதியின் கம்பீர சிலை நிறுவப்படும் எனவும் ஜூன் 3ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் எனவும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் 1.7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிலை அமைப்பதற்கானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சுமார் 16 அடியில் தயாராகும் சிலையை, 12 அடி பீடத்தில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா சாலையில் பெரியார் மற்றும் அண்ணா சிலைகளுக்கு இடையே கருணாநிதி சிலை நிறுவப்படவுள்ளது. அதற்கானப் பணிகளை பொதுப்பணித் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கருணாநிதியின் பிரம்மாண்ட சிலையை திறந்து வைக்கும் வெங்கையா நாயுடு
கருணாநிதியின் பிரம்மாண்ட சிலையை திறந்து வைக்கும் வெங்கையா நாயுடு

இந்த சிலை திறப்பு விழா வரும் மே 28ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது. விழாவில் கலந்துகொள்ளும் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, கருணாநிதியின் சிலையைத் திறந்துவைத்து சிறப்புரையாற்றுகிறார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையுரையாற்றவுள்ளார். தொடர்ந்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வரவேற்புரையாற்றுகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தாமஸ் கோப்பையினை வென்ற இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தின் வளாகத்தில் கருணாநிதியின் கம்பீர சிலை நிறுவப்படும் எனவும் ஜூன் 3ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் எனவும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் 1.7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிலை அமைப்பதற்கானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சுமார் 16 அடியில் தயாராகும் சிலையை, 12 அடி பீடத்தில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா சாலையில் பெரியார் மற்றும் அண்ணா சிலைகளுக்கு இடையே கருணாநிதி சிலை நிறுவப்படவுள்ளது. அதற்கானப் பணிகளை பொதுப்பணித் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கருணாநிதியின் பிரம்மாண்ட சிலையை திறந்து வைக்கும் வெங்கையா நாயுடு
கருணாநிதியின் பிரம்மாண்ட சிலையை திறந்து வைக்கும் வெங்கையா நாயுடு

இந்த சிலை திறப்பு விழா வரும் மே 28ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது. விழாவில் கலந்துகொள்ளும் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, கருணாநிதியின் சிலையைத் திறந்துவைத்து சிறப்புரையாற்றுகிறார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையுரையாற்றவுள்ளார். தொடர்ந்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வரவேற்புரையாற்றுகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தாமஸ் கோப்பையினை வென்ற இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.