ETV Bharat / state

உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக பதவியேற்பு - ஈபிஎஸ் உள்பட 400 பேருக்கு அழைப்பு!

author img

By

Published : Dec 13, 2022, 4:38 PM IST

Updated : Dec 13, 2022, 4:51 PM IST

உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக பதவி ஏற்க உள்ள நிலையில், பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள, எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் உள்பட 400 பேருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

Udhayanidhi
Udhayanidhi

சென்னை: 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தபோதே, கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன் பிறகு உதயநிதி அமைச்சராக வேண்டும் என அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் வலியுறுத்தி வந்தனர். ஆனால், இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் அமைதி காத்து வந்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் செய்த பரிந்துரையை ஏற்று உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவையில் சேர்க்க ஆளுநர் ஒப்புதல் அளித்தார். அதன்படி, உதயநிதி ஸ்டாலின் நாளை காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்கவுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இதற்காக ஆளுநர் மாளிகை தர்பார் ஹாலில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

விழாவுக்காக சுமார் 400 பேருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் உள்ளிட்டோருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றபோது, அந்த விழாவில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 10 சதவீதம் வாரிசு அரசியல் சகஜம் தான் - அமைச்சர் பொன்முடி பளீச்!

சென்னை: 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தபோதே, கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன் பிறகு உதயநிதி அமைச்சராக வேண்டும் என அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் வலியுறுத்தி வந்தனர். ஆனால், இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் அமைதி காத்து வந்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் செய்த பரிந்துரையை ஏற்று உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவையில் சேர்க்க ஆளுநர் ஒப்புதல் அளித்தார். அதன்படி, உதயநிதி ஸ்டாலின் நாளை காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்கவுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இதற்காக ஆளுநர் மாளிகை தர்பார் ஹாலில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

விழாவுக்காக சுமார் 400 பேருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் உள்ளிட்டோருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றபோது, அந்த விழாவில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 10 சதவீதம் வாரிசு அரசியல் சகஜம் தான் - அமைச்சர் பொன்முடி பளீச்!

Last Updated : Dec 13, 2022, 4:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.