ETV Bharat / state

ரயில்வே கட்டண உயர்வு: பயணிகள் கருத்து

author img

By

Published : Jan 2, 2020, 9:38 AM IST

கோயம்புத்தூர்: ரயில்வே கட்டண உயர்வு பயணிகளுக்குச் சுமையை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதே நிலை தொடர்ந்தால் மாட்டுவண்டியில்தான் செல்லவேண்டும் என்றும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

train ticket
train ticket

இந்திய ரயில்வே 2020ஆம் ஆண்டு முதல் ரயில்களின் பயணக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த உயர்வானது 01.01.2020 நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்த கட்டண விலை உயர்வானது படுக்கையறை வசதியுள்ள பெட்டிகளுக்கு கிலோ மீட்டருக்கு 2 பைசா வீதமும், குளிர் சாதனப் பெட்டி வசதி உள்ள பெட்டிகளுக்கு கிலோ மீட்டருக்கு 4 பைசா வீதமும் உயர்ந்துள்ளது. தனி நபர் பார்வையிலிருந்து பார்க்கும் போது பெரிதாக தெரியவில்லை என்றாலும் ஒட்டு மொத்த ரயில்வே துறைக்கு பெரிய லாபத்தை ஈட்டி தரும் வகையில் இந்த கட்டண உயர்வு உள்ளது.

ரயில் கட்டண உயர்வு குறித்து ஈடிவி பாரத் சார்பில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ரயில்வே கட்டண உயர்வு கிலோ மீட்டர் கணக்கில் 2 பைசா, நான்கு பைசா என்பது பெரிய பாதிப்பாக தெரியவில்லை. ஆனால், தொலைதூரம் செல்லும் போது கட்டணமானது 30 ரூபாய் 50 ரூபாய் ஆக உயரும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று என தெரிவித்தனர்.

உயரும் ரயில் கட்டணம் மக்கள் கருத்து

பயணி குமரேசன் கூறுகையில், இந்த கட்டண உயர்வானது பைசா அளவில் உள்ளதால் பெரிதும் கண்டுக் கொள்ள தக்கதாக தெரியாது என்றும் 5 ரூபாய் 10 ரூபாய் என்று உயரும் போது சிரமமாக இருக்கும் என்றார்.

இதே நிலை தொடர்ந்தால் மாட்டுவண்டியில்தான் செல்லவேண்டும் என்றும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 17 சாக்கு மூட்டைகளில் 1020 லிட்டர் பாண்டிச்சேரி சாராயம் பறிமுதல்!

இந்திய ரயில்வே 2020ஆம் ஆண்டு முதல் ரயில்களின் பயணக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த உயர்வானது 01.01.2020 நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்த கட்டண விலை உயர்வானது படுக்கையறை வசதியுள்ள பெட்டிகளுக்கு கிலோ மீட்டருக்கு 2 பைசா வீதமும், குளிர் சாதனப் பெட்டி வசதி உள்ள பெட்டிகளுக்கு கிலோ மீட்டருக்கு 4 பைசா வீதமும் உயர்ந்துள்ளது. தனி நபர் பார்வையிலிருந்து பார்க்கும் போது பெரிதாக தெரியவில்லை என்றாலும் ஒட்டு மொத்த ரயில்வே துறைக்கு பெரிய லாபத்தை ஈட்டி தரும் வகையில் இந்த கட்டண உயர்வு உள்ளது.

ரயில் கட்டண உயர்வு குறித்து ஈடிவி பாரத் சார்பில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ரயில்வே கட்டண உயர்வு கிலோ மீட்டர் கணக்கில் 2 பைசா, நான்கு பைசா என்பது பெரிய பாதிப்பாக தெரியவில்லை. ஆனால், தொலைதூரம் செல்லும் போது கட்டணமானது 30 ரூபாய் 50 ரூபாய் ஆக உயரும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று என தெரிவித்தனர்.

உயரும் ரயில் கட்டணம் மக்கள் கருத்து

பயணி குமரேசன் கூறுகையில், இந்த கட்டண உயர்வானது பைசா அளவில் உள்ளதால் பெரிதும் கண்டுக் கொள்ள தக்கதாக தெரியாது என்றும் 5 ரூபாய் 10 ரூபாய் என்று உயரும் போது சிரமமாக இருக்கும் என்றார்.

இதே நிலை தொடர்ந்தால் மாட்டுவண்டியில்தான் செல்லவேண்டும் என்றும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 17 சாக்கு மூட்டைகளில் 1020 லிட்டர் பாண்டிச்சேரி சாராயம் பறிமுதல்!

Intro:இரயில்வே பயண கட்டண உயர்வு மக்களின் கருத்து


Body:இந்திய ரயில்வேயானது ரயில்களின் பயண கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த உயர்வானது இன்று 01.01.2020 நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்த கட்டண விலை உயர்வானது படுக்கை அறை வசதி உள்ள பெட்டிகளுக்கு கிலோ மீட்டருக்கு 2 பைசா வீதமும் குளிர் சாதன பெட்டி வசதி உள்ள பெட்டிகளுக்கு கிலோ மீட்டருக்கு 4 பைசா வீதமும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வானது தனி நபர் பார்வையில் இருந்து பார்க்கும் போது பெரிதாக தெரியவில்லை என்றாலும் ஒட்டு மொத்த ரயில்வேக்கு பெரிய லாபத்தை ஈட்டி தரும். இது குறித்து மக்களிடம் கருத்துக்களை கேட்கும் பொழுது இந்த விலை உயர்வானது கிலோ மீட்டர் கணக்கில் பைசா அளவில் உயர்வானது பெரிய பாதிப்பாக தெரியவில்லை என்றும் ஆனால் தொலை தூரம் செல்லும் போது கட்டணமானது 30 ரூபாய் 50 ரூபாய் என உயர்வாக தெரியப்படுகிறது என்று தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பேசிய பயணி குமரேசன் இந்த விலை உயர்வானது பைசா அளவில் உள்ளதால் பெரிதும் கண்டுக் கொள்ள தக்கதாக தெரியாது என்றும் ஆனால் 5 ரூபாய் 10 ரூபாய் என்று உயரும் போது சிரமமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

அதன் பின் பேசிய முகமது ரபீக் இந்த விலை உயர்வானது பெரியதாக இல்லை என்றும் ஆனால் இந்த விலை உயர்வானது நள்ளிரவில் அமலுக்கு பதட்டத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்தார். இது போன்று திடீரென அதிகமாக பயணக் கட்டணத்தை ரயில்வே உயர்த்தி விடுமோ என்று பயமாக உள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்நிலை நீடித்தால் மக்கள் அனைவரும் பழைய காலத்தை போல் மாட்டு வண்டியில் செல்ல வேண்டிய நிலை தான் ஏற்படும் என்று தெரிவித்தார்




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.