ETV Bharat / state

‘அனைத்து விதமான ஒப்புதல்களுக்கு பின்னரே பேனா நினைவு சின்னம்’ - தமிழ்நாடு பொதுப்பணி துறை

அனைத்து விதமான ஒப்புதல்களும் பெற்ற பின்னரே மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மெரினாவில் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் என தமிழ்நாடு பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.

author img

By

Published : Feb 3, 2023, 11:00 PM IST

Etv Bharat
Etv Bharat

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் அமையவுள்ள பேனா நினைவுச் சின்னத்திற்கு தடைகோரியும், ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள நினைவிடங்கள், சமாதிகளின் சுற்றுச்சூழல் விதிமீறல்களை ஆராயக்கோரியும் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்யன் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் தமிழ்நாடு பொதுப்பணி துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது. அதில், கலைஞர் நினைவிடத்தில் இருந்து 650 மீட்டர் தூரத்திலும், மெரினா கடற்கரையில் இருந்து கடலுக்குள் 360 மீட்டர் தொலைவிலும் பேனா சிலை அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேனா அமைக்க அனுமதிக்கோரி மத்திய, மாநில அரசுகளிடம் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும்,
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் பரிந்துரைகள் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அனைத்து துறைகளிடம் இருந்து ஒப்புதல்கள் பெறப்பட்ட பின்னர் தான் பணிகள் தொடங்கப்படும் எனவும் பொதுப்பணி துறையின் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு மார்ச் 2 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இரட்டை இலை வழக்கில் எடப்பாடிக்கு வெற்றி? உச்ச நீதிமன்ற உத்தரவு என்ன?

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் அமையவுள்ள பேனா நினைவுச் சின்னத்திற்கு தடைகோரியும், ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள நினைவிடங்கள், சமாதிகளின் சுற்றுச்சூழல் விதிமீறல்களை ஆராயக்கோரியும் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்யன் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் தமிழ்நாடு பொதுப்பணி துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது. அதில், கலைஞர் நினைவிடத்தில் இருந்து 650 மீட்டர் தூரத்திலும், மெரினா கடற்கரையில் இருந்து கடலுக்குள் 360 மீட்டர் தொலைவிலும் பேனா சிலை அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேனா அமைக்க அனுமதிக்கோரி மத்திய, மாநில அரசுகளிடம் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும்,
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் பரிந்துரைகள் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அனைத்து துறைகளிடம் இருந்து ஒப்புதல்கள் பெறப்பட்ட பின்னர் தான் பணிகள் தொடங்கப்படும் எனவும் பொதுப்பணி துறையின் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு மார்ச் 2 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இரட்டை இலை வழக்கில் எடப்பாடிக்கு வெற்றி? உச்ச நீதிமன்ற உத்தரவு என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.