ETV Bharat / state

பயங்கரவாதி இஜாஸ் பாட்ஷாவை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு

author img

By

Published : Jan 13, 2020, 7:40 PM IST

சென்னை: பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவரும் கொலை செய்யப்பயன்படுத்திய துப்பாக்கியை சப்ளை செய்தவருமான இஜாஸ் பாட்ஷாவை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

terrorist custody for 15 days egmore court ordered  இஜாஸ் பாட்ஷா  வில்சன் கொலை வழக்கு  வில்சன் கொலை வழக்கு விசாரணை
பயங்கரவாதி இஜாஸ் பாட்ஷாவை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு

பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவரும் வில்சனை கொலை செய்யப்பயன்படுத்திய துப்பாக்கியை சப்ளை செய்தவருமான இஜாஸ் பாட்ஷா(43), தமிழ்நாடு காவல்துறையினரால் நேற்றிரவு பெங்களூரில் உள்ள கலாசிப்பாளையத்தில் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக பெங்களூருவில் முகம்மது ஹனிப் கான், இம்ரன் கான், முகமது சையது ஆகிய மூன்று நபர்களை கடந்த 7ஆம் தேதி தமிழ்நாடு கியூ பிரிவு காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து மூன்று துப்பாக்கிகள் மற்றும் 89 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து அவர்களை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்ற நடுவர் ரோஸ்லின் துரை அனுமதி வழங்கினார்.

பயங்கரவாதி இஜாஸ் பாட்ஷாவை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்றிரவு பயங்கரவாதி இஜாஸ் பாட்ஷாவை தமிழ்நாடு கியூ பிரிவு காவலர்கள் கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்ற நடுவர் ரோஸ்லின் துரை, இஜாஸை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.

இதையும் படிங்க: வில்சனை கொலை செய்த குற்றவாளிகளை என்கவுண்டர் செய்ய வேண்டும்!

பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவரும் வில்சனை கொலை செய்யப்பயன்படுத்திய துப்பாக்கியை சப்ளை செய்தவருமான இஜாஸ் பாட்ஷா(43), தமிழ்நாடு காவல்துறையினரால் நேற்றிரவு பெங்களூரில் உள்ள கலாசிப்பாளையத்தில் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக பெங்களூருவில் முகம்மது ஹனிப் கான், இம்ரன் கான், முகமது சையது ஆகிய மூன்று நபர்களை கடந்த 7ஆம் தேதி தமிழ்நாடு கியூ பிரிவு காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து மூன்று துப்பாக்கிகள் மற்றும் 89 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து அவர்களை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்ற நடுவர் ரோஸ்லின் துரை அனுமதி வழங்கினார்.

பயங்கரவாதி இஜாஸ் பாட்ஷாவை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்றிரவு பயங்கரவாதி இஜாஸ் பாட்ஷாவை தமிழ்நாடு கியூ பிரிவு காவலர்கள் கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்ற நடுவர் ரோஸ்லின் துரை, இஜாஸை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.

இதையும் படிங்க: வில்சனை கொலை செய்த குற்றவாளிகளை என்கவுண்டர் செய்ய வேண்டும்!

Intro:Body:பெங்களூரில் கைதுசெய்த
தீவிரவாதி இஜாஷ் பாஷாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு.

அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதியான இசாஸ் பாட்ஷா வயது 46 என்ற ஆம்னி பஸ் ஓட்டுனரை தமிழக கியூ பிரிவு காவல்துறை பெங்களூரில் உள்ள கலசப்பாளையத்தில் வைத்து கைது செய்தனர்...

ஏற்கனவே பெங்களூரில் வைத்து முகம்மது ஹனிப் கான், இம்ரன் கான், முகமது சையது ஆகிய மூன்று நபர்களை கடந்த 7 ஆம் தேதி தமிழக கியூ பிரிவு காவல்துறை கைது செய்தனர் அவர்களிடமிருந்து 3 துப்பாக்கிகள் 89 புல்லட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது...

பின்னர் முகமது அனீப்கான், முகமது சையது, இம்ரான் மூவரையும் 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த எழும்பூர் இரண்டாவது பெருநகர குற்றவியல் நீதிமன்ற நடுவர் ரோஸ்லின் துரை அனுமதி வழங்கினார்...

அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மேலும் ஒரு தீவிரவாதி இசாஸ் பாட்ஷா என்ற கார் ஓட்டுனரை தமிழக கியூ பிரிவு காவல்துறை பெங்களூரில் உள்ள கலசப்பாளையத்தில் வைத்து கைது செய்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்...

பின்னர் இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் இரண்டாவது பெருநகர குற்றவியல் நீதிமன்ற நடுவர் ரோஸ்லின் துரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.