ETV Bharat / state

இளநிலை கால்நடை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு தொடங்கியது!

author img

By

Published : Feb 24, 2022, 4:32 PM IST

இளநிலை கால்நடை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு தொடங்கியது. முதல் நாளான இன்று (பிப்.24) அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

மருத்துவப் படிப்பு கலந்தாய்வு
மருத்துவப் படிப்பு கலந்தாய்வு

சென்னை: இளநிலை கால்நடை மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று (பிப்.24) தொடங்கியுள்ளது.

முதல்முறையாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் கால்நடை மருத்துவப்படிப்பில் 39 மாணவர்கள் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை தொழில்நுட்ப படிப்புகளில் சேர்க்கப்பட உள்ளனர். மாணவர்களுக்கான முதலாமாண்டு வகுப்புகள் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கும் எனத் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்பு கலந்தாய்வு

மாணவர்கள் விண்ணப்பம்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் உள்ள 408 இடங்களுக்கு 22 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஏழு கால்நடை மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பி.டெக் தொழில்நுட்பப் படிப்புகள் ஆகியவற்றில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை

முதல்நாளான இன்று அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில், முன்னுரிமை அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து நாளை (பிப்.25) சிறப்புப் பிரிவினரான விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசுப்பள்ளி தொழிற்கல்வி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

இன்று அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டின்கீழ் 276 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். அவர்களில் கால்நடை மருத்துவப் படிப்பில் 176 மாணவர்களும், பி.டெக் தொழில்நுட்பப் படிப்புகளில் 100 மாணவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். முதல் ஐந்து இடங்களைப் பிடித்த மாணவர்கள் சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்துள்ளனர்.

7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு

இதுகுறித்து தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செல்வகுமார் கூறும்போது, "கடந்தாண்டை விட நடப்பாண்டில் அதிக அளவில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கால்நடை மருத்துவப்படிப்பில் முதல் முறையாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கால்நடை மருத்துவப்படிப்பில் கல்வியியல் பிரிவில் 29 மாணவர்கள், தொழிற்கல்வி பிரிவில் படித்த 2 மாணவர்கள் மற்றும் பி.டெக் படிப்பில் 8 மாணவர்கள் என 39 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இவர்களுக்கான வகுப்புகள் அகில இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் அறிவுரைப்படி ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நாகூர் தர்கா தற்காலிக நிர்வாக குழுவை ஏன் கலைக்கக் கூடாது ? - நீதிமன்றம் கேள்வி

சென்னை: இளநிலை கால்நடை மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று (பிப்.24) தொடங்கியுள்ளது.

முதல்முறையாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் கால்நடை மருத்துவப்படிப்பில் 39 மாணவர்கள் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை தொழில்நுட்ப படிப்புகளில் சேர்க்கப்பட உள்ளனர். மாணவர்களுக்கான முதலாமாண்டு வகுப்புகள் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கும் எனத் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்பு கலந்தாய்வு

மாணவர்கள் விண்ணப்பம்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் உள்ள 408 இடங்களுக்கு 22 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஏழு கால்நடை மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பி.டெக் தொழில்நுட்பப் படிப்புகள் ஆகியவற்றில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை

முதல்நாளான இன்று அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில், முன்னுரிமை அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து நாளை (பிப்.25) சிறப்புப் பிரிவினரான விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசுப்பள்ளி தொழிற்கல்வி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

இன்று அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டின்கீழ் 276 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். அவர்களில் கால்நடை மருத்துவப் படிப்பில் 176 மாணவர்களும், பி.டெக் தொழில்நுட்பப் படிப்புகளில் 100 மாணவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். முதல் ஐந்து இடங்களைப் பிடித்த மாணவர்கள் சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்துள்ளனர்.

7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு

இதுகுறித்து தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செல்வகுமார் கூறும்போது, "கடந்தாண்டை விட நடப்பாண்டில் அதிக அளவில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கால்நடை மருத்துவப்படிப்பில் முதல் முறையாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கால்நடை மருத்துவப்படிப்பில் கல்வியியல் பிரிவில் 29 மாணவர்கள், தொழிற்கல்வி பிரிவில் படித்த 2 மாணவர்கள் மற்றும் பி.டெக் படிப்பில் 8 மாணவர்கள் என 39 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இவர்களுக்கான வகுப்புகள் அகில இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் அறிவுரைப்படி ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நாகூர் தர்கா தற்காலிக நிர்வாக குழுவை ஏன் கலைக்கக் கூடாது ? - நீதிமன்றம் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.