சென்னை கே.கே. நகர் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் வெளியானதைத் தொடர்ந்து, பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களும் சிக்கிவருகின்றனர். இதில் ஏற்கனவே நான்குப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், தற்போது மேலும் மூன்று பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தகவல் வெளியாகியது. இது தொடர்பாக மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மூன்று பள்ளிகளுக்கு, மாநில குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை அடையாறில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி, கேளம்பாக்கத்தில் உள்ள இன்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளி, நாமக்கல் மாவட்டத்தில் ஒரு தனியார் பள்ளி என மூன்று பள்ளிகளுக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தினரும், ஆசிரியர்களும் ஆணையம் முன்பு முன்னிலையாகி விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி