ETV Bharat / state

நுரையீரல் தொற்றிலிருந்து மீண்ட சங்கேத் மேத்தா!

சென்னை: எக்மோ கருவி பொருத்தப்பட்டு உயிருக்குப் போராடும் நிலையில் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மருத்துவர் சங்கேத் மேத்தா உரிய சிகிச்சையால் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தார்.

author img

By

Published : Sep 23, 2020, 9:30 PM IST

MGM hospital
MGM hospital

சூரத் மருத்துவமனையில் தனது உயிரையும் பொருட்படுத்தாமல், ஆக்சிஜன் கருவியை பொருத்தி மக்களின் நம்பிக்கையைப் பெற்றவர் மருத்துவர் சங்கேத் மேத்தா. வென்டிலேட்டர் பொருத்தும் பணியில் ஈடுபட்டதால், அவருக்கு நுரையீரல் பாதிப்பு அதிகரித்தது. சூரத்தில் உள்ள மருத்துவமனையில் ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் வென்டிலட்டர், எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டும் நுரையீரல் பாதிப்பிலிருந்து அவரால் மீண்டுவர முடியவில்லை.

இந்நிலையில் சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையை தொடர்புகொண்டு மருத்துவர் சங்கேத் மேத்தா நிலை குறித்து மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக சென்னைக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துவரப்பட்டார். எம்ஜிஎம் மருத்துவமனையில் செய்யப்பட்ட பரிசோதனையில் நுரையீரலில் பாதிப்பு அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டது.

மருத்துவர் சங்கேத் மேத்தாவிற்கு எக்மோ சிகிச்சை செப்டம்பர் 13ஆம் தேதி முதல் அளிக்கப்பட்டதில், 100 விழுக்காடு தொற்றிலிருந்து மீண்டார். செப்டம்பர் 22ஆம் தேதி எக்மோ கருவி அகற்றப்பட்டு வென்டிலேட்டர் மூலம் சுவாசம் அளிக்கப்படுகிறது.

எம்ஜிஎம் மருத்துவமனையின் மருத்துவர்கள் பாலகிருஷ்ணன், சுரேஷ் ராவ், அபர்ஜிந்தால் ஆகியோர் அவருக்கு சிகிச்சையளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆன்லைன் பிட்காயின் மோசடியில் சிக்கிய நைஜீரிய கும்பல் - விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

சூரத் மருத்துவமனையில் தனது உயிரையும் பொருட்படுத்தாமல், ஆக்சிஜன் கருவியை பொருத்தி மக்களின் நம்பிக்கையைப் பெற்றவர் மருத்துவர் சங்கேத் மேத்தா. வென்டிலேட்டர் பொருத்தும் பணியில் ஈடுபட்டதால், அவருக்கு நுரையீரல் பாதிப்பு அதிகரித்தது. சூரத்தில் உள்ள மருத்துவமனையில் ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் வென்டிலட்டர், எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டும் நுரையீரல் பாதிப்பிலிருந்து அவரால் மீண்டுவர முடியவில்லை.

இந்நிலையில் சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையை தொடர்புகொண்டு மருத்துவர் சங்கேத் மேத்தா நிலை குறித்து மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக சென்னைக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துவரப்பட்டார். எம்ஜிஎம் மருத்துவமனையில் செய்யப்பட்ட பரிசோதனையில் நுரையீரலில் பாதிப்பு அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டது.

மருத்துவர் சங்கேத் மேத்தாவிற்கு எக்மோ சிகிச்சை செப்டம்பர் 13ஆம் தேதி முதல் அளிக்கப்பட்டதில், 100 விழுக்காடு தொற்றிலிருந்து மீண்டார். செப்டம்பர் 22ஆம் தேதி எக்மோ கருவி அகற்றப்பட்டு வென்டிலேட்டர் மூலம் சுவாசம் அளிக்கப்படுகிறது.

எம்ஜிஎம் மருத்துவமனையின் மருத்துவர்கள் பாலகிருஷ்ணன், சுரேஷ் ராவ், அபர்ஜிந்தால் ஆகியோர் அவருக்கு சிகிச்சையளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆன்லைன் பிட்காயின் மோசடியில் சிக்கிய நைஜீரிய கும்பல் - விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.