ETV Bharat / state

விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.44.4 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

சென்னை: வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த பயணியிடம் ரூ.44.4 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

author img

By

Published : Oct 20, 2020, 10:00 PM IST

 gold seized in Chennai Airport.
gold seized in Chennai Airport.

கரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு அவர்களை மீட்டுவருகிறது. அதன்படி வெளிநாடுகளிலிருந்து சென்னை, திருச்சி, கோவை விமான நிலையம் வழியாகச் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து இதுவரை ஆயிரக்கணக்கானோர் திருச்சி வந்து அவர்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். இந்தச் சூழலிலும் சிறப்பு விமானங்கள் மூலம் வெளிநாடுகளிலிருந்து சென்னைக்கு தங்கம் கடத்துவது அதிகரித்துவருகிறது.

இந்த நிலையில் துபாயிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில், இன்று (அக்.20) சுங்கத்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பதற்றத்துடன் காணப்பட்ட சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதுடைய புஹாரி என்பவரை தனியே அழைத்துச் சோதனை செய்தனர். சோதனையில் உடலுக்குள் 484 கிராம் எடையுள்ள ரூ.25.5 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது கண்டறியப்பட்டது.

அதேபோல், துபாயிலிருந்து வந்த மற்றொரு விமானத்தில் வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த சையத் அலி(39) என்பவரைச் சோதனை செய்தபோது தங்கப் பசையை நான்கு உருளைகளாக உடலுக்குள் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து 18.9 லட்சம் மதிப்புடைய 358 கிராம் தங்கத்தை அலுவலர்கள் கைப்பற்றினர்.

இரண்டு பேரிடமிருந்து சுமார் 44.4 லட்சம் மதிப்புடைய 842 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் இரண்டு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் விமானத்தில் வரும் பயணிகள் தங்கம் கடத்தி வருவது அலுவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நள்ளிரவில் பிடிபட்ட 14.36 லட்ச ரூபாய் - ஹவாலா பணமா என விசாரணை!

கரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு அவர்களை மீட்டுவருகிறது. அதன்படி வெளிநாடுகளிலிருந்து சென்னை, திருச்சி, கோவை விமான நிலையம் வழியாகச் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து இதுவரை ஆயிரக்கணக்கானோர் திருச்சி வந்து அவர்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். இந்தச் சூழலிலும் சிறப்பு விமானங்கள் மூலம் வெளிநாடுகளிலிருந்து சென்னைக்கு தங்கம் கடத்துவது அதிகரித்துவருகிறது.

இந்த நிலையில் துபாயிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில், இன்று (அக்.20) சுங்கத்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பதற்றத்துடன் காணப்பட்ட சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதுடைய புஹாரி என்பவரை தனியே அழைத்துச் சோதனை செய்தனர். சோதனையில் உடலுக்குள் 484 கிராம் எடையுள்ள ரூ.25.5 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது கண்டறியப்பட்டது.

அதேபோல், துபாயிலிருந்து வந்த மற்றொரு விமானத்தில் வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த சையத் அலி(39) என்பவரைச் சோதனை செய்தபோது தங்கப் பசையை நான்கு உருளைகளாக உடலுக்குள் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து 18.9 லட்சம் மதிப்புடைய 358 கிராம் தங்கத்தை அலுவலர்கள் கைப்பற்றினர்.

இரண்டு பேரிடமிருந்து சுமார் 44.4 லட்சம் மதிப்புடைய 842 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் இரண்டு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் விமானத்தில் வரும் பயணிகள் தங்கம் கடத்தி வருவது அலுவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நள்ளிரவில் பிடிபட்ட 14.36 லட்ச ரூபாய் - ஹவாலா பணமா என விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.