வேளச்சேரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட டி.எ.லி. பப்ளிக் பள்ளி, சீதாராம் நகர், வேளச்சேரி, சென்னை என்ற பகுதிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 92இல் மறுவாக்குப் பதிவு இன்று (ஏப்.17) காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறுகிறது.
92ஆவது வாக்குச்சாவடி ஆண் வாக்காளர்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால், வாக்களிக்கத் தகுதிபெற்ற 548 ஆண்கள் மட்டும் இன்றைய மறுவாக்குப்பதிவின்போது வாக்களிக்க உள்ளனர். மேலும், அப்பகுதி வாக்காளர்கள் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
இதையும் படிங்க: காலமானார் ஜனங்களின் கலைஞன் விவேக்!