ETV Bharat / state

"இந்திய சினிமாவின் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி தான்" - நடிகர் உபேந்திரா புகழாரம்

author img

By

Published : Mar 12, 2023, 9:01 PM IST

இந்திய சினிமாவின் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் என, நடிகர் உபேந்திரா புகழாரம் சூட்டியுள்ளார்.

கப்ஸா படக்குழு செய்தியாளர் சந்திப்பு
கப்ஸா படக்குழு செய்தியாளர் சந்திப்பு

சென்னை: கன்னடத்தில் கேஜிஎஃப் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்ற பின், அதிக பட்ஜெட்டில் பல்வேறு திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதே பாணியில் உருவாக்கப்பட்டுள்ள படம் கப்ஸா. ஆர்.சந்துரு இயக்கியுள்ள இப்படத்தில் உபேந்திரா, கிச்சா சுதீப், சிவராஜ் குமார், ஷ்ரேயா, நயன்தாரா, மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ரவி பஸ்னூர் இசையமைத்துள்ளார்.

இப்படம் வரும் 17ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் திரைக்கு வருகிறது. இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் உபேந்திரா, நடிகை ஸ்ரேயா, இயக்குநர் சந்துரு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் உபேந்திரா, நேரடி தமிழ் படம் பண்ண வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஏற்கனவே பான் இந்தியா படங்கள் வந்துள்ளன. இப்போது தான் பான் இந்தியா என்று போட்டுக்கொள்கின்றனர். இந்திய சினிமாவில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான், அது ரஜினிகாந்த் தான். தமிழில் சத்யம் படத்திற்குப் பிறகு வேறு படம் எதுவும் நடிக்கவில்லை. காரணம் கன்னடத்தில் நிறைய படங்களில் நடிக்கிறேன்.

என்னிடம் கதை சொல்ல எந்தவித தடையும் இல்லை. நானே கதை கேட்கிறேன். ஊடகங்கள் தான் என்னைப் பற்றி தமிழ் இயக்குநர்களிடம் சொல்ல வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய ஷ்ரேயா, "கப்ஸா திரைப்படம் உங்கள் பார்வைக்கு வருகிறது‌. வெற்றி பெற வையுங்கள். சிவாஜி படத்தில் ரஜினியுடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. சென்னை எப்பொழுதும் எனக்கு ஸ்பெஷலாக தான் இருக்கும். கப்ஸா என்ற எனது மனதிற்கு நெருக்கமான ஒரு படத்துடன் நான் இப்போது மீண்டும் வந்திருக்கிறேன்.

இந்த படத்திற்கு என்னைத் தேர்ந்தெடுத்த இயக்குநர் சந்துருவுக்கு நன்றி. உபேந்திரா போன்ற ஒரு அற்புதமான நடிகருடன் திரையைப் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி. மார்ச் 17 அன்று படம் வெளியாக இருக்கிறது. உங்களுடைய ஆதரவு இந்த படத்திற்குத் தேவை. படம் பார்த்துவிட்டு உங்கள் கருத்தைக் கூறுங்கள்" என குறிப்பிட்டார்.

1942ம் ஆண்டு முதல்1984ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் மாஃபியா உலகில் சிக்கிக் கொள்ளும் ஒரு சுதந்திரப் போராட்ட வீரரின் மகனைச் சுற்றியே கதை சுழல்கிறது. இதில் உபேந்திரா கேங்ஸ்டராக, ஒரு டான் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எனவே இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக அமையும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: Oscars 2023: ஆஸ்கர் வென்று வரலாறு படைக்குமா RRR?... சினிமா ரசிகர்கள் எதிர்பார்ப்பு!!

சென்னை: கன்னடத்தில் கேஜிஎஃப் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்ற பின், அதிக பட்ஜெட்டில் பல்வேறு திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதே பாணியில் உருவாக்கப்பட்டுள்ள படம் கப்ஸா. ஆர்.சந்துரு இயக்கியுள்ள இப்படத்தில் உபேந்திரா, கிச்சா சுதீப், சிவராஜ் குமார், ஷ்ரேயா, நயன்தாரா, மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ரவி பஸ்னூர் இசையமைத்துள்ளார்.

இப்படம் வரும் 17ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் திரைக்கு வருகிறது. இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் உபேந்திரா, நடிகை ஸ்ரேயா, இயக்குநர் சந்துரு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் உபேந்திரா, நேரடி தமிழ் படம் பண்ண வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஏற்கனவே பான் இந்தியா படங்கள் வந்துள்ளன. இப்போது தான் பான் இந்தியா என்று போட்டுக்கொள்கின்றனர். இந்திய சினிமாவில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான், அது ரஜினிகாந்த் தான். தமிழில் சத்யம் படத்திற்குப் பிறகு வேறு படம் எதுவும் நடிக்கவில்லை. காரணம் கன்னடத்தில் நிறைய படங்களில் நடிக்கிறேன்.

என்னிடம் கதை சொல்ல எந்தவித தடையும் இல்லை. நானே கதை கேட்கிறேன். ஊடகங்கள் தான் என்னைப் பற்றி தமிழ் இயக்குநர்களிடம் சொல்ல வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய ஷ்ரேயா, "கப்ஸா திரைப்படம் உங்கள் பார்வைக்கு வருகிறது‌. வெற்றி பெற வையுங்கள். சிவாஜி படத்தில் ரஜினியுடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. சென்னை எப்பொழுதும் எனக்கு ஸ்பெஷலாக தான் இருக்கும். கப்ஸா என்ற எனது மனதிற்கு நெருக்கமான ஒரு படத்துடன் நான் இப்போது மீண்டும் வந்திருக்கிறேன்.

இந்த படத்திற்கு என்னைத் தேர்ந்தெடுத்த இயக்குநர் சந்துருவுக்கு நன்றி. உபேந்திரா போன்ற ஒரு அற்புதமான நடிகருடன் திரையைப் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி. மார்ச் 17 அன்று படம் வெளியாக இருக்கிறது. உங்களுடைய ஆதரவு இந்த படத்திற்குத் தேவை. படம் பார்த்துவிட்டு உங்கள் கருத்தைக் கூறுங்கள்" என குறிப்பிட்டார்.

1942ம் ஆண்டு முதல்1984ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் மாஃபியா உலகில் சிக்கிக் கொள்ளும் ஒரு சுதந்திரப் போராட்ட வீரரின் மகனைச் சுற்றியே கதை சுழல்கிறது. இதில் உபேந்திரா கேங்ஸ்டராக, ஒரு டான் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எனவே இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக அமையும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: Oscars 2023: ஆஸ்கர் வென்று வரலாறு படைக்குமா RRR?... சினிமா ரசிகர்கள் எதிர்பார்ப்பு!!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.