ETV Bharat / state

15 வயது சிறுமி மாயம்: போலீஸ் விசாரணை

author img

By

Published : Jul 21, 2021, 1:54 PM IST

சென்னையில் கோயிலுக்கு சென்ற 15 வயது சிறுமி மாயமானது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

15 வயது சிறுமி மாயம்
15 வயது சிறுமி மாயம்

சென்னை: வேப்பேரி ரத்தினசபாபதி தெருவைச் சேர்ந்தவர்கள் ஏட்வர்ட் - வேளாங்கண்ணி தம்பதி. இவர்களுக்கு 15 வயதில் மகள் உள்ளார். எட்வர்ட் தனியார் நிறுவனத்திலும், வேளாங்கண்ணி வீட்டு வேலையும் செய்து வருகின்றனர்.

சிறுமி பத்தாம் வகுப்பு வரை படித்து முடித்த நிலையில், கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு புரசைவாக்கம் சிட்டி சென்டரிலுள்ள கிளினிக்கில் வேலை செய்து வந்துள்ளார்.

மாயமான சிறுமி

அப்போது அங்கு வேலை செய்துவந்த சுரேன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் குறித்து சிறுமியின் தாய் வேளாங்கண்ணிக்கு தெரியவர சிறுமியை வேலைக்கு அனுப்பவில்லை.

இந்நிலையில் நேற்று மாலை (ஜூலை 20) வேப்பேரி ரத்தினசபாபதி தெருவிலுள்ள கோயிலுக்கு சிறுமி மட்டும் தனியாக சென்றுள்ளார். கோயிலுக்குச் சென்றவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

காவல் துறை விசாரணை

இதனால், அதிர்சியடைந்த சிறுமியின் பெற்றோர் பதறியடித்துக் கொண்டு பல இடங்களில் தேடினர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால் இது குறித்து வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர், காணாமல் போன சிறுமியை தேடி வருகின்றனர். மேலும், சிறுமி தனது காதலன் சுரேன் என்பவருடன் சென்றிருப்பாரோ என்ற கோணாத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சிறுமியை கடத்தியவர்கள் கைது

சென்னை: வேப்பேரி ரத்தினசபாபதி தெருவைச் சேர்ந்தவர்கள் ஏட்வர்ட் - வேளாங்கண்ணி தம்பதி. இவர்களுக்கு 15 வயதில் மகள் உள்ளார். எட்வர்ட் தனியார் நிறுவனத்திலும், வேளாங்கண்ணி வீட்டு வேலையும் செய்து வருகின்றனர்.

சிறுமி பத்தாம் வகுப்பு வரை படித்து முடித்த நிலையில், கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு புரசைவாக்கம் சிட்டி சென்டரிலுள்ள கிளினிக்கில் வேலை செய்து வந்துள்ளார்.

மாயமான சிறுமி

அப்போது அங்கு வேலை செய்துவந்த சுரேன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் குறித்து சிறுமியின் தாய் வேளாங்கண்ணிக்கு தெரியவர சிறுமியை வேலைக்கு அனுப்பவில்லை.

இந்நிலையில் நேற்று மாலை (ஜூலை 20) வேப்பேரி ரத்தினசபாபதி தெருவிலுள்ள கோயிலுக்கு சிறுமி மட்டும் தனியாக சென்றுள்ளார். கோயிலுக்குச் சென்றவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

காவல் துறை விசாரணை

இதனால், அதிர்சியடைந்த சிறுமியின் பெற்றோர் பதறியடித்துக் கொண்டு பல இடங்களில் தேடினர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால் இது குறித்து வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர், காணாமல் போன சிறுமியை தேடி வருகின்றனர். மேலும், சிறுமி தனது காதலன் சுரேன் என்பவருடன் சென்றிருப்பாரோ என்ற கோணாத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சிறுமியை கடத்தியவர்கள் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.