ETV Bharat / state

Chennai Rains: சென்னையில் கொட்டித்தீர்த்த மழை.. அண்ணா சாலையில் தேங்கிய நீரால் மக்கள் அவதி!

author img

By

Published : May 2, 2023, 2:05 PM IST

சென்னையில் இரவெல்லாம் கொட்டித் தீர்த்த மழையால் சாலையில் மழைநீர் தேங்கிய நிலையில் மாநகராட்சி நிர்வாகம் மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது.

overnight rain in Chennai Anna salai and GB Road get waterlogged
சென்னையில் இரவெல்லாம் பெய்த மழையில் அண்ணா சாலை, ஜி.பி சாலையில் மழை நீர் தேங்கியது
சென்னையில் கொட்டித்தீர்த்த மழை.. அண்ணா சாலையில் தேங்கிய நீரால் மக்கள் அவதி!

சென்னை: தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்கு கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவி வருவதால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கோடையின் உஷ்ணத்தில் இருந்து மக்கள் சற்று விடுபட்டு நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். சென்னையிலும் 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் நேற்று இரவில் இருந்து பெய்த கனமழையால் முக்கிய சாலைகளில் மழை நீர் கரைபுரண்டு ஓடியது.

சென்னையில் அண்ணாசாலை, சேப்பாக்கம், மெரினா, பட்டினம்பாக்கம், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, கிண்டி, அடையாறு, திருவான்மியூர், ஈக்காட்டுத்தாங்கல், தி.நகர், கோடம்பாக்கம், சூளைமேடு, உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு மழை கொட்டி தீர்த்தது. இதனால் ஒரு சில இடங்களில் சாலையோரம் மழைநீர் தேங்கி நின்றது. மேலும் ஒரு சில பகுதிகளில் சாலையில் உள்ள மின் விளக்குகளும் துண்டிக்கப்பட்டது.

குறிப்பாக அண்ணா சாலை, ஜி.பி சாலையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டனர். பெரிய இயந்திரங்கனை வைத்து மழைநீரை அப்புறப்படுத்தும் பணிகளில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து சென்னை மாநகராட்சியின் சமூக வலைதள பக்கத்தில், “அண்ணாசாலையில் நெடுஞ்சாலை பணிகளால் ஏற்பட்ட அடைப்புகளினால் மழைநீர் வெளியேறுவதில் தடை ஏற்பட்டுள்ளது. அதை இயந்திரங்களை கொண்டு அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி ஊழியர்கள் மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்
சென்னை மாநகராட்சி ஊழியர்கள் மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

சாலைகளில் மழை நீர் தேங்குவதை கண்டறிந்து உடனடியாக சென்னை மாநகராட்சி நடவடிக்கை எப்பதை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். மேலும், தமிழகத்தில் நான்கு நாட்கள் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் இன்று காலை முதலே சென்னையில் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: "ஆடியோ மூலம் மட்டமான அரசியல்" - அமைச்சர் பிடிஆர் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிலடி!

சென்னையில் கொட்டித்தீர்த்த மழை.. அண்ணா சாலையில் தேங்கிய நீரால் மக்கள் அவதி!

சென்னை: தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்கு கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவி வருவதால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கோடையின் உஷ்ணத்தில் இருந்து மக்கள் சற்று விடுபட்டு நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். சென்னையிலும் 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் நேற்று இரவில் இருந்து பெய்த கனமழையால் முக்கிய சாலைகளில் மழை நீர் கரைபுரண்டு ஓடியது.

சென்னையில் அண்ணாசாலை, சேப்பாக்கம், மெரினா, பட்டினம்பாக்கம், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, கிண்டி, அடையாறு, திருவான்மியூர், ஈக்காட்டுத்தாங்கல், தி.நகர், கோடம்பாக்கம், சூளைமேடு, உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு மழை கொட்டி தீர்த்தது. இதனால் ஒரு சில இடங்களில் சாலையோரம் மழைநீர் தேங்கி நின்றது. மேலும் ஒரு சில பகுதிகளில் சாலையில் உள்ள மின் விளக்குகளும் துண்டிக்கப்பட்டது.

குறிப்பாக அண்ணா சாலை, ஜி.பி சாலையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டனர். பெரிய இயந்திரங்கனை வைத்து மழைநீரை அப்புறப்படுத்தும் பணிகளில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து சென்னை மாநகராட்சியின் சமூக வலைதள பக்கத்தில், “அண்ணாசாலையில் நெடுஞ்சாலை பணிகளால் ஏற்பட்ட அடைப்புகளினால் மழைநீர் வெளியேறுவதில் தடை ஏற்பட்டுள்ளது. அதை இயந்திரங்களை கொண்டு அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி ஊழியர்கள் மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்
சென்னை மாநகராட்சி ஊழியர்கள் மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

சாலைகளில் மழை நீர் தேங்குவதை கண்டறிந்து உடனடியாக சென்னை மாநகராட்சி நடவடிக்கை எப்பதை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். மேலும், தமிழகத்தில் நான்கு நாட்கள் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் இன்று காலை முதலே சென்னையில் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: "ஆடியோ மூலம் மட்டமான அரசியல்" - அமைச்சர் பிடிஆர் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிலடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.