ETV Bharat / state

பொதுக்குழுவை ஒத்திவைக்க ஈபிஎஸ்க்கு ஓபிஎஸ் கடிதம்! - கூட்டம் நடக்குமா? நடக்காதா...தொண்டர்கள் குழப்பம்

author img

By

Published : Jun 20, 2022, 1:23 PM IST

அதிமுக பொதுக்குழுவை தற்போதைக்கு ஒத்திவைக்கலாம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் , இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதிமுக
அதிமுக

அக்கடிதத்தில் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களை இடபற்றாக்குறை காரணமாக அழைக்க வேண்டாம் என எடுக்கப்பட்ட முடிவிற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதாக ஓ பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக கழகத்தின் பிற அணி நிர்வாகிகள் , முன்னாள் அமைச்சர்கள் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் , முன்னாள் வாரியத் தலைவர்கள் மற்றும் கட்சிக்காக தியாகம் செய்தவர்கள் ஆகியோரை சிறப்பு அழைப்பாளர்களாக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பது உண்டு; ஆண்டாண்டாக பின்பற்றப்படும் நடைமுறை இம்முறை பின்பற்றப்படாது என்ற தகவலை அறிந்தவர்கள் தங்களையும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்க தன்னை தொலைபேசி வாயிலாகவும் , நேரிலும் சந்தித்து கோரிக்கை வைத்ததாகவும் இடப்பற்றாக்குறை என கூறுவது ஏற்புடையதாக இல்லை என்று ஆதங்கம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி ஒற்றை தலைமை இரட்டை தலைமை என கட்சி விதிகளுக்கு எதிராக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் கழக தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது; சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது; மேலும் பொதுக்குழுவில் விவாதிக்கப்படுவது தொடர்பான தகவல் எதுவும் கிடைக்கவில்லை என மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் முறையிட்டுள்ளனர் என்பதையும் ஓ பன்னீர் செல்வம் கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.

எனவே மேற்காணும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு , கழக நலன் கருதி 23ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தை தற்போதைக்கு தள்ளி வைக்கலாம் எனவும், பின்னர் இது தொடர்பாக இருவரும் கலந்தாலோசித்து முடிவு செய்யலாம் எனவும் ஓ பன்னீர் செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே பொதுக்குழு நடைபெற உள்ள வானகரத்தில் ஏற்பாடுகள் குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஆய்வு நடத்தினர். பொதுக்குழுவை நடத்தியே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் எடப்பாடி பழனிசாமி தரப்பு இருப்பதை காட்டுகிறது.

இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

அக்கடிதத்தில் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களை இடபற்றாக்குறை காரணமாக அழைக்க வேண்டாம் என எடுக்கப்பட்ட முடிவிற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதாக ஓ பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக கழகத்தின் பிற அணி நிர்வாகிகள் , முன்னாள் அமைச்சர்கள் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் , முன்னாள் வாரியத் தலைவர்கள் மற்றும் கட்சிக்காக தியாகம் செய்தவர்கள் ஆகியோரை சிறப்பு அழைப்பாளர்களாக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பது உண்டு; ஆண்டாண்டாக பின்பற்றப்படும் நடைமுறை இம்முறை பின்பற்றப்படாது என்ற தகவலை அறிந்தவர்கள் தங்களையும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்க தன்னை தொலைபேசி வாயிலாகவும் , நேரிலும் சந்தித்து கோரிக்கை வைத்ததாகவும் இடப்பற்றாக்குறை என கூறுவது ஏற்புடையதாக இல்லை என்று ஆதங்கம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி ஒற்றை தலைமை இரட்டை தலைமை என கட்சி விதிகளுக்கு எதிராக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் கழக தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது; சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது; மேலும் பொதுக்குழுவில் விவாதிக்கப்படுவது தொடர்பான தகவல் எதுவும் கிடைக்கவில்லை என மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் முறையிட்டுள்ளனர் என்பதையும் ஓ பன்னீர் செல்வம் கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.

எனவே மேற்காணும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு , கழக நலன் கருதி 23ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தை தற்போதைக்கு தள்ளி வைக்கலாம் எனவும், பின்னர் இது தொடர்பாக இருவரும் கலந்தாலோசித்து முடிவு செய்யலாம் எனவும் ஓ பன்னீர் செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே பொதுக்குழு நடைபெற உள்ள வானகரத்தில் ஏற்பாடுகள் குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஆய்வு நடத்தினர். பொதுக்குழுவை நடத்தியே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் எடப்பாடி பழனிசாமி தரப்பு இருப்பதை காட்டுகிறது.

இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.