ETV Bharat / state

Chennai NIA Raid : சென்னையில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 16, 2023, 7:58 AM IST

NIA Raid in Chennai : சென்னையின் திருவிக நகர், நீலாங்கரை உள்ளிட்ட 3 இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Chennai
Chennai

சென்னை : சென்னையில் மூன்று இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, திரு.வி.க. நகரில் முர் ரகுமான் என்பவரது வீட்டிலும், நீலாங்கரையில் புஹாரி என்பவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல் கோவையிலும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் உக்கடம், போத்தனூர், கரும்புக்கடை, ஜி.எம். நகர் உள்ளிட்ட 20 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உக்கடம் குக்கர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

2022 ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி கோவை உக்கடம் அருகே, அதிகாலையில் கோட்டைமேட்டில் இருந்து டவுன்ஹால் நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் திடீரென வெடித்து தீப்பிடித்தது. விபத்துக்குள்ளான கார் இரண்டு துண்டாக உடைந்தது. காரை ஓட்டி வந்த உக்கடம் ஜி.எம்.நகரைச் சேர்ந்த ஜமேஷா முபின் உயிரிழந்தார்.

காரில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் 2 சிலிண்டர்கள் இருந்ததும், அதில் ஒரு சிலிண்டர் வெடித்துச் சிதறியதால் காரில் தீ பற்றியதும் தெரியவந்தது. இது தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அதன் அடுத்தக்கட்டமாக தற்போது சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் கூறப்படுகின்றன.

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு தொடர்பான வழக்கில் ஜார்கண்ட் உள்ளிட்ட இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நேற்று (செப். 15) சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக இன்று (செப். 16) சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : NIA Raid in Covai : கோவையில் என்ஐஏ சோதனை.. காலை முதலே அதிரடி சோதனை!

சென்னை : சென்னையில் மூன்று இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, திரு.வி.க. நகரில் முர் ரகுமான் என்பவரது வீட்டிலும், நீலாங்கரையில் புஹாரி என்பவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல் கோவையிலும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் உக்கடம், போத்தனூர், கரும்புக்கடை, ஜி.எம். நகர் உள்ளிட்ட 20 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உக்கடம் குக்கர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

2022 ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி கோவை உக்கடம் அருகே, அதிகாலையில் கோட்டைமேட்டில் இருந்து டவுன்ஹால் நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் திடீரென வெடித்து தீப்பிடித்தது. விபத்துக்குள்ளான கார் இரண்டு துண்டாக உடைந்தது. காரை ஓட்டி வந்த உக்கடம் ஜி.எம்.நகரைச் சேர்ந்த ஜமேஷா முபின் உயிரிழந்தார்.

காரில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் 2 சிலிண்டர்கள் இருந்ததும், அதில் ஒரு சிலிண்டர் வெடித்துச் சிதறியதால் காரில் தீ பற்றியதும் தெரியவந்தது. இது தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அதன் அடுத்தக்கட்டமாக தற்போது சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் கூறப்படுகின்றன.

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு தொடர்பான வழக்கில் ஜார்கண்ட் உள்ளிட்ட இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நேற்று (செப். 15) சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக இன்று (செப். 16) சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : NIA Raid in Covai : கோவையில் என்ஐஏ சோதனை.. காலை முதலே அதிரடி சோதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.