ETV Bharat / state

தமிழ்நாட்டில் 77% பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - ராதாகிருஷ்ணன்

author img

By

Published : Feb 1, 2022, 3:36 PM IST

தமிழ்நாட்டில் 77 % பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்களில் 77 சதவீதம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - ராதாகிருஷ்ணன்
பள்ளி மாணவர்களில் 77 சதவீதம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - ராதாகிருஷ்ணன்

சென்னை:அசோக்நகர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டு பள்ளியில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை பார்வையிட்டார்.

77 % பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், மாணவர்கள் நலன் கருதி பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்கள் பாதிப்பின்றி கல்வி பயில ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளி, கல்லூரிகள் செயல்படுகிறது. மாணவர்கள் அல்லது அவர்களது வீடுகளில் உள்ளவர்களுக்கு அறிகுறிகள் இருந்தால் பள்ளிக்கு வருவதை தவிர்த்து உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து மாணவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது என்றும் அப்பகுதியில் பள்ளிகள் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 77 விழுக்காடு மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 2.5 லட்சம் இலக்கு உள்ள நிலையில் 1.80 லட்சம் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். இடவசதி இல்லாத பள்ளிகளில் வகுப்புகள் நடத்துவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது. இடவசதி இல்லாத பள்ளிகளில் 3 நாட்கள் கழித்து தேவைப்பட்டால் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளி மாணவர்களில் 77 சதவீதம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - ராதாகிருஷ்ணன்

மக்களின் ஒத்துழைப்பு அவசியம்

5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு முகக்கவசம் அணியக்கூடாது. ஆனால் மற்ற குழந்தைகளுக்கு விழிப்புணர்வு உள்ளது. முகக்கவசம் போட சவாலாக இருக்கும் போது தனி இடத்தில் வந்து தளர்வு படுத்திக்கொண்டு சுவாசிக்கலாம்.

அடுத்த 2 வாரம் கவனக்குறைவாக இருக்கக் கூடாது. ஒவ்வொரு நாளும் முந்தைய நாளை விட நோய்த் தொற்று குறைந்து வருகிறது. நோய் தொற்று ஏற்பட்டவர்களில் 4% பேர் மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளனர். அடுத்த 2 வாரம் இதே அளவு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்ற வேண்டும். 30 விழுக்காட்டிலிருந்து 10 - 12 சதவீதம் வரை நோய் தொற்று பரவல் குறைந்துள்ளது” என கூறினார்.

இந்நிகழ்வில் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு

சென்னை:அசோக்நகர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டு பள்ளியில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை பார்வையிட்டார்.

77 % பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், மாணவர்கள் நலன் கருதி பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்கள் பாதிப்பின்றி கல்வி பயில ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளி, கல்லூரிகள் செயல்படுகிறது. மாணவர்கள் அல்லது அவர்களது வீடுகளில் உள்ளவர்களுக்கு அறிகுறிகள் இருந்தால் பள்ளிக்கு வருவதை தவிர்த்து உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து மாணவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது என்றும் அப்பகுதியில் பள்ளிகள் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 77 விழுக்காடு மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 2.5 லட்சம் இலக்கு உள்ள நிலையில் 1.80 லட்சம் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். இடவசதி இல்லாத பள்ளிகளில் வகுப்புகள் நடத்துவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது. இடவசதி இல்லாத பள்ளிகளில் 3 நாட்கள் கழித்து தேவைப்பட்டால் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளி மாணவர்களில் 77 சதவீதம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - ராதாகிருஷ்ணன்

மக்களின் ஒத்துழைப்பு அவசியம்

5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு முகக்கவசம் அணியக்கூடாது. ஆனால் மற்ற குழந்தைகளுக்கு விழிப்புணர்வு உள்ளது. முகக்கவசம் போட சவாலாக இருக்கும் போது தனி இடத்தில் வந்து தளர்வு படுத்திக்கொண்டு சுவாசிக்கலாம்.

அடுத்த 2 வாரம் கவனக்குறைவாக இருக்கக் கூடாது. ஒவ்வொரு நாளும் முந்தைய நாளை விட நோய்த் தொற்று குறைந்து வருகிறது. நோய் தொற்று ஏற்பட்டவர்களில் 4% பேர் மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளனர். அடுத்த 2 வாரம் இதே அளவு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்ற வேண்டும். 30 விழுக்காட்டிலிருந்து 10 - 12 சதவீதம் வரை நோய் தொற்று பரவல் குறைந்துள்ளது” என கூறினார்.

இந்நிகழ்வில் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.