ETV Bharat / state

மியாவாக்கி அடர்வனம் அமைக்கும் பணி மும்முரம்

author img

By

Published : Jan 25, 2020, 3:14 PM IST

சென்னை: கோட்டூர்புரத்தில் சுமார் 21 ஆயிரம் சதுர அடி நிலத்தில் மியாவாக்கி அடர்வனங்களை அமைக்கும் பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டுவருகிறது.

மியாவாக்கி அடர்வனம்  ஜப்பானிய தாவரவியல் அறிஞர் மியாவாக்கி  சென்னை மாநகராட்சி அடர்வனம்  Chennai corporation  miyawaki dense forest
miyawaki dense forest making in chennai

சென்னை மாநகராட்சி கோட்டூர்புரத்தில் புதர் மண்டிக்கிடந்த மாநகராட்சி இடமான 20,724 சதுர அடி நிலத்தில் அடர்வனம் அமைக்கப்படவுள்ளது.

மியாவாக்கி என்னும் அடர்ந்த நகர்ப்புறக் காடுகளை உருவாக்கும் திட்டத்தின் கீழ் அடர்வனம் அமைக்கப்படவுள்ளது. ஜப்பானிய தாவரவியல் நிபுணர் மியாவாக்கி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட சிறந்த தாவரவியல் முறையில் அடர்வனம் உருவாக்கப்படுகிறது. அதன்படி, 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரே இடத்தில் அடர்த்தியான மண்ணின் தன்மைக்கேற்ப 40 வகையான மரங்கள் ஒரு மீட்டர் இடைவெளியில் நீர் மருது, நாவல், புன்னை, இலுப்பை, பலா, வேங்கை, மந்தாரை, வாழை, நெல்லி உள்ளிட்ட 2,000 நாட்டுப்புற மரக்கன்றுகள் நடப்படவுள்ளன.

மியாவாக்கி அடர்வனம்  ஜப்பானிய தாவரவியல் அறிஞர் மியாவாக்கி  சென்னை மாநகராட்சி அடர்வனம்  Chennai corporation  miyawaki dense forest
மியாவாக்கி அடர்வனம்

ஏற்கனவே அந்நிலத்தில் 1,600 மெட்ரிக் டன் கட்டடக் கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது அகற்றப்பட்டது. பின்னர் நான்கு அடி ஆழத்திற்கு மண் எடுக்கப்பட்டு, திடக்கழிவுகள், தென்னை நாறு, மாட்டுச்சாணம் என 112 மெட்ரிக் டன் அளவிற்கு மூன்று அடுக்குகளாக நிலம் பதப்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்தகட்டமாக வளசரவாக்கம் பகுதியிலும் மியாக்கிவாக்கி அடர்வனம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இவ்வாறான காடுகள் உருவாக்கப்படுவதால், நகர்ப்புறத்தில் சுற்றுச்சூழல் மாசு குறைக்கப்பட்டு காற்றின் தூய்மை மேம்படும் என்றும் நகர்ப்புறங்களில் அழிந்துவரும் அரிய வகை பறவைகள், விலங்குகளும் விருத்தியடைய இந்த அடர்வனங்கள் உதவியாக இருக்கும் எனவும் பிரகாஷ் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பிரேசில் நாட்டு ஜனாதிபதிக்கு விவசாயிகள் கருப்புக்கொடி!

சென்னை மாநகராட்சி கோட்டூர்புரத்தில் புதர் மண்டிக்கிடந்த மாநகராட்சி இடமான 20,724 சதுர அடி நிலத்தில் அடர்வனம் அமைக்கப்படவுள்ளது.

மியாவாக்கி என்னும் அடர்ந்த நகர்ப்புறக் காடுகளை உருவாக்கும் திட்டத்தின் கீழ் அடர்வனம் அமைக்கப்படவுள்ளது. ஜப்பானிய தாவரவியல் நிபுணர் மியாவாக்கி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட சிறந்த தாவரவியல் முறையில் அடர்வனம் உருவாக்கப்படுகிறது. அதன்படி, 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரே இடத்தில் அடர்த்தியான மண்ணின் தன்மைக்கேற்ப 40 வகையான மரங்கள் ஒரு மீட்டர் இடைவெளியில் நீர் மருது, நாவல், புன்னை, இலுப்பை, பலா, வேங்கை, மந்தாரை, வாழை, நெல்லி உள்ளிட்ட 2,000 நாட்டுப்புற மரக்கன்றுகள் நடப்படவுள்ளன.

மியாவாக்கி அடர்வனம்  ஜப்பானிய தாவரவியல் அறிஞர் மியாவாக்கி  சென்னை மாநகராட்சி அடர்வனம்  Chennai corporation  miyawaki dense forest
மியாவாக்கி அடர்வனம்

ஏற்கனவே அந்நிலத்தில் 1,600 மெட்ரிக் டன் கட்டடக் கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது அகற்றப்பட்டது. பின்னர் நான்கு அடி ஆழத்திற்கு மண் எடுக்கப்பட்டு, திடக்கழிவுகள், தென்னை நாறு, மாட்டுச்சாணம் என 112 மெட்ரிக் டன் அளவிற்கு மூன்று அடுக்குகளாக நிலம் பதப்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்தகட்டமாக வளசரவாக்கம் பகுதியிலும் மியாக்கிவாக்கி அடர்வனம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இவ்வாறான காடுகள் உருவாக்கப்படுவதால், நகர்ப்புறத்தில் சுற்றுச்சூழல் மாசு குறைக்கப்பட்டு காற்றின் தூய்மை மேம்படும் என்றும் நகர்ப்புறங்களில் அழிந்துவரும் அரிய வகை பறவைகள், விலங்குகளும் விருத்தியடைய இந்த அடர்வனங்கள் உதவியாக இருக்கும் எனவும் பிரகாஷ் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பிரேசில் நாட்டு ஜனாதிபதிக்கு விவசாயிகள் கருப்புக்கொடி!

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 25.01.20

சென்னை நகரில் சுற்றுச்சூழலை மேம்படுத்த அடர் வனங்களை அமைக்கும் மாநகராட்சி நிர்வாகம்...

மியாவாக்கி என்னும் அடர்ந்த நகர்புற காடுகளை உருவாக்கும் திட்டத்தில் சென்னை மாநகராட்சி கோட்டூர்புரத்தில் புதர் மண்டிக்கிடந்த மாநகராட்சி இடமான ரயில் நிலையத்தின் அருகே 20,724 சதுர அடி நிலத்தில் ஜப்பானிய தாவரவியல் நிபுணர் மியாவாக்கி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட சிறந்த தாவரவியல் முறையில் ஒரே இடத்தில் அடர்த்தியான மண்ணின் தன்மைக்கு ஏற்ப 20 லட்சம் மதிப்பீட்டில் 40 வகையான மரங்கள் ஒரு மீட்டர் இடைவெளியில் 2000 மரக்கன்றுகள் முறையே நீர் மருது, நாவல், புன்னை, இலுப்பை, பலா, வேங்கை, மந்தாரை, வாழை, நெல்லி உள்ளிட்ட நாட்டுப்புற மரக்கன்றுகள் கொண்டு அடர் வனம் அமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்நிலத்தில் 1600 மெட்ரிக் டன் கட்டிடக்கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது அகற்றபட்டு, நான்கு அடி ஆழத்திற்கு மண் எடுக்கப்பட்டு, திடக்கழிவுகள், தென்னை நாறு, மாட்டுச்சாணம் என 112 மெட்ரிக் டன் அளவிற்கு மூன்று அடுக்குகளாக அடுக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், அடுத்த கட்டமாக வளசரவாக்கம் பகுதியிலும் மியாவாக்கி அடர் வனம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான காடுகள் உருவாக்கப்படுவதால், நகர்புற மக்களுக்கு சுற்றுச்சூழல் மாசு குறைக்கப்பட்டு காற்றின் தூய்மை மேம்படும். இவை தவிர நகர்புறங்களில் அழிந்துவரும் அரிய வகை பறவைகள், விலங்குகளும் விருத்தியடைய இந்த அடர் வனங்கள் உதவியாக இருக்கும் எனவும் பிரகாஷ் தெரிவித்தார்..

tn_che_03_miyavakki_dense_forest_making_by_corporation_script_7204894Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.