ETV Bharat / state

‘அதிகமாக பேசுறீங்க உட்காருங்க’ - புகார் அளித்த பெண்ணால் ஆத்திரமடைந்த அமைச்சர் கே.என். நேரு!

author img

By

Published : Jul 10, 2022, 10:05 AM IST

ஆவடி மாநகராட்சியில் கே.என். நேரு தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் பூவிருந்தவல்லி நகராட்சி ஆணையர் மீது புகார் அளித்த நகரமன்ற பெண் தலைவரை அதிகமாக பேசுகிறீர்கள் என கூறி அமைச்சர் அமர வைத்தார்.

கே.என். நேரு!
கே.என். நேரு!

திருவள்ளூர்: ஆவடி மாநகராட்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு, ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஆவடி மாநகராட்சி பூந்தமல்லி, திருவேற்காடு திருநின்றவூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் திருமழிசை பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது மக்கள் அடிப்படை தேவைகளை விரைந்து முடிக்க அறிவுருத்தினார். ஒவ்வொரு நகரமன்ற தலைவர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வந்தனர். அப்போது பூவிருந்தவல்லி நகரமன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் பூவிருந்தவல்லி நகராட்சி ஆணையர் நாராயணன் மீது சரமாரியாக புகார் அளித்தார்.

’அதிகமாக பேசுறீங்க’ பெண் தலைவரை ஆய்வு கூட்டத்தில் அமரவைத்த அமைச்சர் கே.என். நேரு!

பூவிருந்தவல்லி நகராட்சி ஆணையர் மக்கள் பணி செய்வதற்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் இதனால் பல பணிகள் கிடப்பில் உள்ளதாகவும் பகிரங்கமாக புகார் செய்தார். இதையடுத்து அமைச்சர் கே.என். நேரு நீங்கள் அதிகமாக பேசுகிறீர்கள் என கூறி அமர வைத்துவிட்டார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: கார்த்தி சிதம்பரம் மகளின் லேப்டாப்பை பறிமுதல் செய்தது சட்டவிரோதம் - வழக்கறிஞர் குற்றச்சாட்டு

திருவள்ளூர்: ஆவடி மாநகராட்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு, ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஆவடி மாநகராட்சி பூந்தமல்லி, திருவேற்காடு திருநின்றவூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் திருமழிசை பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது மக்கள் அடிப்படை தேவைகளை விரைந்து முடிக்க அறிவுருத்தினார். ஒவ்வொரு நகரமன்ற தலைவர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வந்தனர். அப்போது பூவிருந்தவல்லி நகரமன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் பூவிருந்தவல்லி நகராட்சி ஆணையர் நாராயணன் மீது சரமாரியாக புகார் அளித்தார்.

’அதிகமாக பேசுறீங்க’ பெண் தலைவரை ஆய்வு கூட்டத்தில் அமரவைத்த அமைச்சர் கே.என். நேரு!

பூவிருந்தவல்லி நகராட்சி ஆணையர் மக்கள் பணி செய்வதற்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் இதனால் பல பணிகள் கிடப்பில் உள்ளதாகவும் பகிரங்கமாக புகார் செய்தார். இதையடுத்து அமைச்சர் கே.என். நேரு நீங்கள் அதிகமாக பேசுகிறீர்கள் என கூறி அமர வைத்துவிட்டார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: கார்த்தி சிதம்பரம் மகளின் லேப்டாப்பை பறிமுதல் செய்தது சட்டவிரோதம் - வழக்கறிஞர் குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.