ETV Bharat / state

"சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு இடஒதுக்கீடு கொள்கை பொருந்தாது" - சென்னை உயர் நீதிமன்றம்

Madras High Court orders about reservation policy: சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு இடஒதுக்கீடு கொள்கை பொருந்தாது என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2023, 6:57 AM IST

Madras High Court orders about reservation policy
சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு இட ஒதுக்கீடு கொள்கை பொருந்தாது - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கடந்த 1998ஆம் ஆண்டு அரசாணைப்படி, 50 சதவீதத்திற்கு அதிகமாக சிறுபான்மை மாணவர்களைக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கக் கூடாது என்ற நிபந்தனையை மீறியதாக, சென்னையில் உள்ள நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரிக்கு சிறுபான்மை அந்தஸ்தை நீட்டிக்க மறுத்து தமிழக உயர் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவு மற்றும் 1998ஆம் ஆண்டு அரசாணையின் நிபந்தனையை எதிர்த்தும், நிரந்தர சிறுபான்மை அந்தஸ்து வழங்கக் கோரியும் நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், தேசிய சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் ஆணையச் சட்டப்படி, கல்வி நிறுவனங்களின் சிறுபான்மை அந்தஸ்து குறித்து முடிவெடுக்க ஆணையத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. ஆகவே, சிறுபான்மை அந்தஸ்தைக் குறிப்பிட்ட காலத்துக்கு வழங்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை எனக் கூறி, மனுதாரர் கல்வி நிறுவனத்துக்கு சிறுபான்மை அந்தஸ்தை நீட்டிக்க மறுத்த அரசு உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

அதன் தொடர்ச்சியாக, இந்திய அரசியல் சட்டத்தில் 2005ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தத்தின்படி, இடஒதுக்கீட்டுக் கொள்கை சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்தாது என தீர்ப்பளித்தனர். மேலும், 50 சதவீத இட ஒதுக்கீட்டுச் சிறுபான்மையினரைச் சேர்த்தாலும், மீதமுள்ள 50 சதவீத இடங்களுக்கும் தகுதியின் அடிப்படையில் சிறுபான்மையினர் போட்டியிடலாம் எனக் கூறி, அப்படி மாணவர்கள் சேரும் பட்சத்தில் அது 50 சதவீத கட்டுப்பாட்டை மீறியதாகக் கருத முடியாது என உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: இயக்குநர் ஷங்கர் மீதான வழக்கு.. இடைக்காலத் தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம்!

சென்னை: கடந்த 1998ஆம் ஆண்டு அரசாணைப்படி, 50 சதவீதத்திற்கு அதிகமாக சிறுபான்மை மாணவர்களைக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கக் கூடாது என்ற நிபந்தனையை மீறியதாக, சென்னையில் உள்ள நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரிக்கு சிறுபான்மை அந்தஸ்தை நீட்டிக்க மறுத்து தமிழக உயர் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவு மற்றும் 1998ஆம் ஆண்டு அரசாணையின் நிபந்தனையை எதிர்த்தும், நிரந்தர சிறுபான்மை அந்தஸ்து வழங்கக் கோரியும் நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், தேசிய சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் ஆணையச் சட்டப்படி, கல்வி நிறுவனங்களின் சிறுபான்மை அந்தஸ்து குறித்து முடிவெடுக்க ஆணையத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. ஆகவே, சிறுபான்மை அந்தஸ்தைக் குறிப்பிட்ட காலத்துக்கு வழங்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை எனக் கூறி, மனுதாரர் கல்வி நிறுவனத்துக்கு சிறுபான்மை அந்தஸ்தை நீட்டிக்க மறுத்த அரசு உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

அதன் தொடர்ச்சியாக, இந்திய அரசியல் சட்டத்தில் 2005ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தத்தின்படி, இடஒதுக்கீட்டுக் கொள்கை சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்தாது என தீர்ப்பளித்தனர். மேலும், 50 சதவீத இட ஒதுக்கீட்டுச் சிறுபான்மையினரைச் சேர்த்தாலும், மீதமுள்ள 50 சதவீத இடங்களுக்கும் தகுதியின் அடிப்படையில் சிறுபான்மையினர் போட்டியிடலாம் எனக் கூறி, அப்படி மாணவர்கள் சேரும் பட்சத்தில் அது 50 சதவீத கட்டுப்பாட்டை மீறியதாகக் கருத முடியாது என உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: இயக்குநர் ஷங்கர் மீதான வழக்கு.. இடைக்காலத் தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.