ETV Bharat / state

புகார் கொடுத்த ஐடி ஊழியரை வேலையை விட்டு நீக்கிய நிறுவனம்! - ஐடி ஊழியர் ஆட்குறைப்பு

சென்னை: சட்ட விரோதமாக ஊழியர்கள் வேலையை விட்டு நீக்கப்படுவதற்கு, எதிராக புகார் கொடுத்த, ஐடி தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஊழியரை காக்னிசென்ட் நிறுவனம் வேலையை விட்டு நீக்கியுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

it labours union complaint against the cognizant employees terminates issue
author img

By

Published : Nov 13, 2019, 7:21 PM IST

தகவல் தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசென்ட், "2020 ஃபிட் ஃபார் குரோத்" என்றத் திட்டத்தின் அடிப்படையில், 12 ஆயிரம் தொழிலாளர்களை பணியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது.

அவற்றில் ஐந்தாயிரம் ஊழியர்களுக்குத் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு, மீண்டும் வேறு துறைகளில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும், கடந்த மாதம் அறிவித்திருந்தது. காக்னிசென்ட் நிறுவனம், தற்போது தனது லாபத்தை அதிகரிப்பதற்காகவே, நீண்ட நாட்களாகப் பணியாற்றி வரும் இடைநிலை ஊழியர்களை வேலையைவிட்டு நீக்குவதாக முடிவு எடுத்துள்ளது.

ஊழியர்கள் தாங்களாக வேலையை விட்டுப்போக நிர்பந்திக்கப்படுவதாகவும், இதனை ஏற்காத ஊழியர்கள் வேலையை விட்டு நீக்கப்படுவதாகவும் ஐடி தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றன.

இந்நிலையில், இது தொடர்பாகப் புகார் அளித்து, ஊடகங்களுக்குப் பேட்டி அளித்ததாக எஃப்.ஐ.டி.இ தொழிற்சங்க உறுப்பினர்கள் இருவரை காக்னிசென்ட் நிறுவனம் வேலையை விட்டு நீக்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக, இன்று தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய எஃப்.ஐ.டி.இயைச் சேர்ந்த இளவரசன் கூறுகையில், "கடந்த அக்டோபர் மாதம் முதல், காக்னிசென்ட் நிறுவனம் பணியாளர்களை வேலையை விட்டு நீக்குவதில்தான் கவனம் செலுத்தி வருகிறது.

ஐடி நிறுவனத்தில் ஆட்குறைப்பு

சட்டவிரோத வேலை நீக்கத்திற்கெதிராகப் புகாரளித்த இருவர் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். நீண்ட நாட்களாகப் பிராஜெக்ட் இல்லாததால் அவர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறினாலும், ஐடி ஊழியர்கள் ஒன்றிணைவதற்கு எதிராகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று குற்றம்சாட்டினார்.

மேலும், "பெங்களூரூ, புனே உள்ளிட்ட நாட்டின் பல்வேறுப் பகுதிகளிலும் இதுபோன்று வேலை நீக்கங்கள் தொடர் கதையாகி வருகின்றன. காக்னிசென்ட் நிறுவனம் மட்டுமின்றி இன்ஃபோசிஸ் உள்ளிட்ட வேறு சில நிறுவனங்களும் ஊழியர்களை வேலையை விட்டு நீக்கப்போவதாக அறிவித்துள்ளன.

புகார் கொடுத்த ஐடி ஊழியரை வேலையை விட்டு நீக்கிய காக்னிசென்ட்

இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் இளவரசன் கூறினார்.

இதையும் படிங்க: சென்னையில் தொடர்ந்து அதிகரிக்கும் காற்று மாசு - காரணம் என்ன?

தகவல் தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசென்ட், "2020 ஃபிட் ஃபார் குரோத்" என்றத் திட்டத்தின் அடிப்படையில், 12 ஆயிரம் தொழிலாளர்களை பணியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது.

அவற்றில் ஐந்தாயிரம் ஊழியர்களுக்குத் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு, மீண்டும் வேறு துறைகளில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும், கடந்த மாதம் அறிவித்திருந்தது. காக்னிசென்ட் நிறுவனம், தற்போது தனது லாபத்தை அதிகரிப்பதற்காகவே, நீண்ட நாட்களாகப் பணியாற்றி வரும் இடைநிலை ஊழியர்களை வேலையைவிட்டு நீக்குவதாக முடிவு எடுத்துள்ளது.

ஊழியர்கள் தாங்களாக வேலையை விட்டுப்போக நிர்பந்திக்கப்படுவதாகவும், இதனை ஏற்காத ஊழியர்கள் வேலையை விட்டு நீக்கப்படுவதாகவும் ஐடி தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றன.

இந்நிலையில், இது தொடர்பாகப் புகார் அளித்து, ஊடகங்களுக்குப் பேட்டி அளித்ததாக எஃப்.ஐ.டி.இ தொழிற்சங்க உறுப்பினர்கள் இருவரை காக்னிசென்ட் நிறுவனம் வேலையை விட்டு நீக்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக, இன்று தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய எஃப்.ஐ.டி.இயைச் சேர்ந்த இளவரசன் கூறுகையில், "கடந்த அக்டோபர் மாதம் முதல், காக்னிசென்ட் நிறுவனம் பணியாளர்களை வேலையை விட்டு நீக்குவதில்தான் கவனம் செலுத்தி வருகிறது.

ஐடி நிறுவனத்தில் ஆட்குறைப்பு

சட்டவிரோத வேலை நீக்கத்திற்கெதிராகப் புகாரளித்த இருவர் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். நீண்ட நாட்களாகப் பிராஜெக்ட் இல்லாததால் அவர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறினாலும், ஐடி ஊழியர்கள் ஒன்றிணைவதற்கு எதிராகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று குற்றம்சாட்டினார்.

மேலும், "பெங்களூரூ, புனே உள்ளிட்ட நாட்டின் பல்வேறுப் பகுதிகளிலும் இதுபோன்று வேலை நீக்கங்கள் தொடர் கதையாகி வருகின்றன. காக்னிசென்ட் நிறுவனம் மட்டுமின்றி இன்ஃபோசிஸ் உள்ளிட்ட வேறு சில நிறுவனங்களும் ஊழியர்களை வேலையை விட்டு நீக்கப்போவதாக அறிவித்துள்ளன.

புகார் கொடுத்த ஐடி ஊழியரை வேலையை விட்டு நீக்கிய காக்னிசென்ட்

இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் இளவரசன் கூறினார்.

இதையும் படிங்க: சென்னையில் தொடர்ந்து அதிகரிக்கும் காற்று மாசு - காரணம் என்ன?

Intro:Body:புகார் கொடுத்த ஐடி ஊழியரை வேலையை விட்டு நீக்கிய காக்னிசன்ட்

சென்னை: சட்டவிரோதமாக ஊழியர்களை வேலையை விட்டு நீக்கப்படுவதற்கு எதிராக புகார் கொடுத்த ஐடி தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஊழியரை காக்னிசென்ட் நிறுவனம் வேலையை விட்டு நீக்கியுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

அமெரிக்க பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசன்ட், "2020 ஃபிட் ஃபார் கிரோத்" என்ற திட்டத்தின் அடிப்படையில், 12 ஆயிரம் தொழிலாளர்கள் தற்போதுள்ள பணியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. அவற்றில் ஐந்தாயிரம் ஊழியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு மீண்டும் வேறு துறைகளில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும், மீதமுள்ளவர்கள் வேலையை விட்டு நீக்கப்படுவார்கள் என்றும் கடந்த மாதம் அறிவித்திருந்தது. காக்னிசன்ட் நிறுவனம் தற்போது நஷ்டத்தை சந்திக்காத நிலையில் தனது லாபத்தை அதிகரிப்பதற்காக நீண்ட நாட்களாகப் பணியாற்றி வரும் இடை நிலை ஊழியர்களை வேலையைவிட்டு நீக்குவதாக கூறப்படுகிறது. ஊழியர்கள் தாங்களாக வேலையை ராஜினாமா செய்யுமாறு நிர்பந்திக்கப்படுவதாகவும், இதனை மறுக்கும் ஊழியர்கள் வேலையை விட்டு நீக்கப்படுவதாகவும் ஐடி தொழிற் சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றன. இது தொடர்பாக அனைத்து இந்திய தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் மன்றம் (ஃஎப்ஐடிஇ) சார்பில் தொழிலாளர் கூடுதல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஃஎப்ஐடிஇ, தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் சங்கம் (யுனைட்), என்டிஎல்ஃஎப் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளித்து, ஊடங்களுக்குப் பேட்டி அளித்த ஃஎப்ஐடிஇ உறுப்பினர்கள் இருவரை தற்போது காக்னிசன்ட் நிறுவனம் வேலையை விட்டு நீக்கியுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. இது தொடர்பாக, இன்று மீண்டும் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்துப் பேசிய ஃஎப்ஐடிஇ உறுப்பினர் இளவரசன் ராஜா, "கடந்த அக்டோபர் மாதம், காக்னிசன்ட் 12 ஆயிரம் பணியாளர்களை வேலையைவிட்டு நீக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தது. அவற்றில், 5 ஆயிரம் பேரை திறன் பயிற்சி கொடுத்து வேறு துறையில் பணியில் அமர்த்தப்போவதாகவும் கூறியது. ஆனால் தற்போது வரை பணியாளர்களை வேலையை விட்டு நீக்குவதில்தான் கவனம் செலுத்தி வருகிறது. திறன் பயிற்சி அளிக்கப்படுவதில்லை. காக்னிசன்ட் நிறுவனத்தில் சட்டவிரோதமாக வேலையை விட்டு நீக்கப்படுவதற்கு எதிராகப் புகார் அளித்த இரண்டு பேர் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். நீண்ட நாட்களாகப் பிராஜக்ட் ஏதும் இல்லாததால் அவர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறியிருந்தாலும், ஐடி ஊழியர்கள் ஒன்றிணைவதற்கு எதிராகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "பெங்களூரூ, புனே உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இதுபோன்று வேலையிலிருந்து நீக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. காக்கிசென்ட் நிறுவனம் மட்டுமின்றி இன்ஃபோசிஸ் உள்ளிட்ட வேறு சில நிறுவனங்களும் ஊழியர்கள் வேலையை விட்டு நீக்கப்போவதாக அறிவித்துள்ளன. ஐடி நிறுவனங்கள் ஆட்களை வேலையை விட்டு நீக்கக்கூடாது என்று கூறவில்லை ஆனால் அதற்குரிய நடைமுறைகள் பின்பற்ற வேண்டும் என்றுதான் கூறுகிறோம். இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

பேட்டி: இளவரசன் ராஜா, ஃஎப்ஐடிஇ (AIFITE- All India Forum for IT/ ITES Employees)Conclusion:visual in mojo
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.