ETV Bharat / state

தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் கைது!

author img

By

Published : May 30, 2019, 7:05 PM IST

சென்னை: செல்போன், செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இரண்டு இளைஞர்களை, சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

தொடர் செல்போன் பறிப்பில் ஈடுப்பட்ட 2 பேர் கைது

சென்னையில் நேற்று மட்டும் ஒரே நாளில் மூன்று வெவ்வேறு இடங்களில் செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் சிந்தாரிப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் நின்றுக் கொண்டிருந்த பாத்திமாவிடம் செல்போன், வேளச்சேரி டாம்ஸ் ரோடு பகுதியில் நின்று கொண்டிருந்த லட்சுமியின் செல்போன் மற்றும் சிந்தாதிரிப் பேட்டை ஜங்ஷன் அருகே நின்றுக் கொண்டிருந்த சந்திரன் ஆகியோரின் செல்போனும் அடையாளம் தெரியாத நபர்களால் பறிக்கப்பட்டது.

தொடர் செல்போன் பறிப்பில் ஈடுப்பட்ட 2 பேர் கைது

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடங்களில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில், இரு சக்கர வாகனத்தில் வரும் வியாசர்பாடியை சேர்ந்த அஜித், ஆவடியை சேர்ந்த சுந்தர்ராஜ் இருவரும் செல்போன், செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது பதிவாகியிருந்தது. இதைத் தொடர்ந்து இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த செல்போன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சென்னையில் நேற்று மட்டும் ஒரே நாளில் மூன்று வெவ்வேறு இடங்களில் செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் சிந்தாரிப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் நின்றுக் கொண்டிருந்த பாத்திமாவிடம் செல்போன், வேளச்சேரி டாம்ஸ் ரோடு பகுதியில் நின்று கொண்டிருந்த லட்சுமியின் செல்போன் மற்றும் சிந்தாதிரிப் பேட்டை ஜங்ஷன் அருகே நின்றுக் கொண்டிருந்த சந்திரன் ஆகியோரின் செல்போனும் அடையாளம் தெரியாத நபர்களால் பறிக்கப்பட்டது.

தொடர் செல்போன் பறிப்பில் ஈடுப்பட்ட 2 பேர் கைது

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடங்களில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில், இரு சக்கர வாகனத்தில் வரும் வியாசர்பாடியை சேர்ந்த அஜித், ஆவடியை சேர்ந்த சுந்தர்ராஜ் இருவரும் செல்போன், செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது பதிவாகியிருந்தது. இதைத் தொடர்ந்து இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த செல்போன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இருசக்கர வாகனம் மூலமாக செல்போன் மற்றும் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்...

சென்னை சிந்தாதிரிப் பேட்டை பகுதியில் இரு சக்கர வாகனங்களை வைத்துக்கொண்டு வியாசர்பாடியை சேர்ந்த அஜித், ஆவடியை சேர்ந்த சுந்தர்ராஜ் இரண்டு பேரும் செல்போன் மற்றும் செயின் பறிப்பு சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்...

இது தொடர்பாக சிந்தாதிரிப் பேட்டையைச் சேர்ந்த பாத்திமா, லட்சுமி, சந்திரன் ஆகிய 3 பேரும் தனித்தனியாக சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். புகாரை பெற்றுக்கொண்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் ஆரோக்கியமாள் சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிரமாக தேடி வந்தார்...

சிந்தாரிப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் நின்ற பாத்திமாவின் செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் இருசக்கர வாகனத்தில் பறந்த கொள்ளையன் டேம்ஸ் ரோடு பகுதியில் நின்று கொண்டிருந்த லட்சுமியின் உடைய செல்போனையும் பறித்து கொண்டு சென்றான். சிந்தாதிரிப் பேட்டை ஜங்ஷன் அருகில் நின்ற சந்திரன் செல்போனும் பறிக்கப்பட்டது...

இது தொடர்பான சிசிடிவி கேமராக்களை  தீவிரமாக ஆராய்ந்து அதில் இருவரும் சிக்கிக் கொண்டனர். இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிரிவு 379 மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். அவனிடமிருந்து செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.