ETV Bharat / state

'தி கேரளா ஸ்டோரி' படத்தை வெளியிட்டால் தியேட்டரை உடைப்போம் - சீமான் எச்சரிக்கை

author img

By

Published : May 6, 2023, 3:38 PM IST

'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை வெளியிட்டால் தியேட்டரை உடைப்போம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்.

seeman
சீமான்

சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு எதிர்ப்புகளை மீறி 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் நேற்று (மே 5) திரைக்கு வந்தது. இப்படத்தில் கேரளாவை சேர்ந்த 32,000 பெண்கள் மதம் மாற்றப்பட்டு, ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்க்கப்பட்டது போன்ற காட்சி இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படத்தை வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அமைந்தகரையில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு பின் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறுகையில், " நம் நாடு மதச்சார்பின்மை கொண்ட நாடு. ஆனால் கடந்த காலங்களில் மத அரசியல் செய்யும் கட்சிகள் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் கொடும்பான்மையை நாம் அனைவரும் பார்க்கிறோம். இப்போது ஆட்சி நடத்துபவர்களுக்கு மதம்தான் முக்கியம், அதைத் தவிர எதுவும் அவர்களுக்கு கவலை கிடையாது.

இந்த சூழலில் பாரதிய ஜனதா கட்சி பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்க உள்ளது. அவர்களது ஆட்சி ஹிட்லரின் ஆட்சி போல் ஒரு கொடுங்கோல் ஆட்சியாய் உள்ளது. ஹிட்லருடைய ஸ்வஸ்திக் உத்திரத்தை அவர்களது கொடியில் வைத்து ஆட்சி செய்யும் இவர்களும் அதைத்தான் பின்பற்றுகின்றனர். குறிப்பாக இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் அழித்து ஒழிப்பது தான் நோக்கமாய் கொண்டுள்ளனர். தேர்தல் காலகட்டங்களில் புர்கா, காஷ்மீர் பைல்ஸ் ஆகிய படங்களை வைத்து சர்ச்சை செய்தனர். தற்போது கர்நாடக தேர்தல் வரும் சமயத்தில் கேரளா ஸ்டோரியை வைத்து சர்ச்சையில் ஈடுபடுகின்றனர்.

விடுதலைக்காக போராடிய அனைவருமே தற்போது பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் இருக்கின்றனர் அல்லது நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்த நாட்டுக்காக ஒரு போராட்டம் கூட செய்யாத ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக 20 மாநிலங்களின் சட்டமன்றத்தில் உள்ளது. இதை மறுத்து என்னுடன் தொலைக்காட்சியில் வாதாட தயாராக இருக்கிறீர்களா? சாவர்க்கரை வீர மனிதர் என பொய்யாக பட்டம் கட்டி போராட்டம் செய்து நமது நாட்டுக்கே பெரிய துரோகம் செய்தது ஆர்எஸ்எஸ்.

பயங்கரவாதம் என்பது வேறு, தீவிரவாதம் என்பது வேறு. அதி பயங்கரவாதிகளிடம் இந்த நாடே சிக்கிக்கொண்டது. ஒரு கருத்தை தீவிரமாக வாதிப்பது விவாதிப்பது தீவிரவாதம், அதற்கு மாற்றுக் கருத்து சொல்பவரை அழித்து ஒழிப்பது பயங்கரவாதம். அதை தான் இப்போது பாஜக அரசு நடத்தி வருகிறது. மற்றவர்களை பயங்கரவாதிகள் என பட்டம் கட்டுவதை நிறுத்த வேண்டும்.

கேரளாவில் இருக்கும் 32,000 பெண்கள், இளைஞர்களை மதம் மாற்றி வெளிநாடுகளுக்கு கொண்டு சென்று தீவிரவாத பயிற்சிகளை அளித்து நம் நாட்டுக்கே திருப்பி வைப்பது அந்தப் படத்தை எடுத்த இயக்குனருக்கு தெரிகிறது உளவுத்துறைக்கு தெரியாதா? படம் வந்த பிறகு ஏன் குரல் கொடுக்க வேண்டும். மதம் மாற்றத்தை பற்றி பேசும் பாஜக அரசுக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கும் தகுதி கிடையாது. அந்தப் படத்தில் save your daughters என ஓர் வசனம் வருகிறது, அதே தான் நானும் சொல்கிறேன்.

இந்த படத்தை பார்க்காமல் தடுத்து நம் மக்களை காப்பாற்றுவோம். பிறப்பின் அடிப்படையில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை விட உயர்ந்தவன், தாழ்ந்தவன் என ஹிந்து மதம் மட்டுமே சொல்கிறது. அதை கடைப்பிடிப்பது ஹிந்து தர்மம் என சொல்கிறது. எனவே தான் அரேபியாவில் இருந்த இஸ்லாமிய மதம் இங்கு வரை பரவி உள்ளது.

எதிர்ப்பை மீறி கேரளா ஸ்டோரியை திரையரங்குகளில் ஒளிபரப்பு செய்தால் தியேட்டரை அடித்து உடைப்போம். யாரையும் இத்திரைப்படத்தை பார்க்க விடமாட்டோம். ஆளுநர் முறையிடுவது சுத்த பைத்தியக்காரத்தனம். அவர் வேலையை செய்யாமல் சர்ச்சைகளை பரப்பிக் கொண்டு வருகிறார்" என கூறினார்.

இதையும் படிங்க: தஞ்சையில் ஜமாத் தலைவருக்கு பார்சலில் மண்டை ஓடு.. இளைஞர் பகீர் வாக்குமூலம்!

சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு எதிர்ப்புகளை மீறி 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் நேற்று (மே 5) திரைக்கு வந்தது. இப்படத்தில் கேரளாவை சேர்ந்த 32,000 பெண்கள் மதம் மாற்றப்பட்டு, ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்க்கப்பட்டது போன்ற காட்சி இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படத்தை வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அமைந்தகரையில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு பின் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறுகையில், " நம் நாடு மதச்சார்பின்மை கொண்ட நாடு. ஆனால் கடந்த காலங்களில் மத அரசியல் செய்யும் கட்சிகள் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் கொடும்பான்மையை நாம் அனைவரும் பார்க்கிறோம். இப்போது ஆட்சி நடத்துபவர்களுக்கு மதம்தான் முக்கியம், அதைத் தவிர எதுவும் அவர்களுக்கு கவலை கிடையாது.

இந்த சூழலில் பாரதிய ஜனதா கட்சி பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்க உள்ளது. அவர்களது ஆட்சி ஹிட்லரின் ஆட்சி போல் ஒரு கொடுங்கோல் ஆட்சியாய் உள்ளது. ஹிட்லருடைய ஸ்வஸ்திக் உத்திரத்தை அவர்களது கொடியில் வைத்து ஆட்சி செய்யும் இவர்களும் அதைத்தான் பின்பற்றுகின்றனர். குறிப்பாக இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் அழித்து ஒழிப்பது தான் நோக்கமாய் கொண்டுள்ளனர். தேர்தல் காலகட்டங்களில் புர்கா, காஷ்மீர் பைல்ஸ் ஆகிய படங்களை வைத்து சர்ச்சை செய்தனர். தற்போது கர்நாடக தேர்தல் வரும் சமயத்தில் கேரளா ஸ்டோரியை வைத்து சர்ச்சையில் ஈடுபடுகின்றனர்.

விடுதலைக்காக போராடிய அனைவருமே தற்போது பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் இருக்கின்றனர் அல்லது நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்த நாட்டுக்காக ஒரு போராட்டம் கூட செய்யாத ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக 20 மாநிலங்களின் சட்டமன்றத்தில் உள்ளது. இதை மறுத்து என்னுடன் தொலைக்காட்சியில் வாதாட தயாராக இருக்கிறீர்களா? சாவர்க்கரை வீர மனிதர் என பொய்யாக பட்டம் கட்டி போராட்டம் செய்து நமது நாட்டுக்கே பெரிய துரோகம் செய்தது ஆர்எஸ்எஸ்.

பயங்கரவாதம் என்பது வேறு, தீவிரவாதம் என்பது வேறு. அதி பயங்கரவாதிகளிடம் இந்த நாடே சிக்கிக்கொண்டது. ஒரு கருத்தை தீவிரமாக வாதிப்பது விவாதிப்பது தீவிரவாதம், அதற்கு மாற்றுக் கருத்து சொல்பவரை அழித்து ஒழிப்பது பயங்கரவாதம். அதை தான் இப்போது பாஜக அரசு நடத்தி வருகிறது. மற்றவர்களை பயங்கரவாதிகள் என பட்டம் கட்டுவதை நிறுத்த வேண்டும்.

கேரளாவில் இருக்கும் 32,000 பெண்கள், இளைஞர்களை மதம் மாற்றி வெளிநாடுகளுக்கு கொண்டு சென்று தீவிரவாத பயிற்சிகளை அளித்து நம் நாட்டுக்கே திருப்பி வைப்பது அந்தப் படத்தை எடுத்த இயக்குனருக்கு தெரிகிறது உளவுத்துறைக்கு தெரியாதா? படம் வந்த பிறகு ஏன் குரல் கொடுக்க வேண்டும். மதம் மாற்றத்தை பற்றி பேசும் பாஜக அரசுக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கும் தகுதி கிடையாது. அந்தப் படத்தில் save your daughters என ஓர் வசனம் வருகிறது, அதே தான் நானும் சொல்கிறேன்.

இந்த படத்தை பார்க்காமல் தடுத்து நம் மக்களை காப்பாற்றுவோம். பிறப்பின் அடிப்படையில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை விட உயர்ந்தவன், தாழ்ந்தவன் என ஹிந்து மதம் மட்டுமே சொல்கிறது. அதை கடைப்பிடிப்பது ஹிந்து தர்மம் என சொல்கிறது. எனவே தான் அரேபியாவில் இருந்த இஸ்லாமிய மதம் இங்கு வரை பரவி உள்ளது.

எதிர்ப்பை மீறி கேரளா ஸ்டோரியை திரையரங்குகளில் ஒளிபரப்பு செய்தால் தியேட்டரை அடித்து உடைப்போம். யாரையும் இத்திரைப்படத்தை பார்க்க விடமாட்டோம். ஆளுநர் முறையிடுவது சுத்த பைத்தியக்காரத்தனம். அவர் வேலையை செய்யாமல் சர்ச்சைகளை பரப்பிக் கொண்டு வருகிறார்" என கூறினார்.

இதையும் படிங்க: தஞ்சையில் ஜமாத் தலைவருக்கு பார்சலில் மண்டை ஓடு.. இளைஞர் பகீர் வாக்குமூலம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.