ETV Bharat / state

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க கால நீட்டிப்பு

author img

By

Published : Dec 29, 2022, 12:05 PM IST

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க மார்ச் வரை கால அவகாசம் வழங்கி மாநகராட்சி மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க மார்ச் வரை கால நீட்டிப்பு
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க மார்ச் வரை கால நீட்டிப்பு

சென்னை: மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் சிங்கார சென்னை 2.0 திட்டம் பகுதி 1 மற்றும் 2-ன் கீழ் ரூ.277.04 கோடியில் 60.83 கி.மீ நீளத்திற்கும், வெள்ள நிவாரண நிதியின் கீழ் ரூ.295.73 கோடியில் 107.57 கி.மீ நீளத்திற்கும், உட்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ.27.21 கோடியில் 10 கி.மீ நீளத்திற்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதேபோல் மூலதன நிதியின் கீழ் ரூ.8.26 கோடியில் 1.05 கி.மீ நீளத்திற்கும், உலக வங்கி நிதி உதவியின் கீழ் விடுபட்ட இடங்களில் ரூ.120 கோடியில் 44.88 கி.மீ நீளத்திற்கும் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவற்றில் சிங்கார சென்னை 2.0 திட்டம் பகுதி 1-ல் 10 சிப்பங்கள், சென்னை 2.0 திட்டம் பகுதி 2-ல் 10 சிப்பங்கள், வெள்ள நிவாரண நிதியில் 45 சிப்பங்கள், உலக வங்கி நிதியில் 38 சிப்பங்கள், உட்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் நிதியில் 4 சிப்பங்கள் முடிக்காத முடியாத நிலை ஏற்பட்டது.

மேலும், சிங்கார சென்னை நிதியில் குளங்கள் சீரமைக்கும் திட்டத்தில் 5 சிப்பங்கள் உள்ளிட்ட பணிகளை வடகிழக்கு பருவமழை மற்றும் குடிநீர் குழாய்கள், மின் மாற்றிகள், மின் கம்பங்கள் ஆகியவற்றை இடம் செய்யும் பணிகள் தாமதம் ஆகிய காரணத்தால் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காத முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், இந்தப் பணிகளை வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் முடிக்க கால அவகாசம் வழங்கி மாநகராட்சி மாமன்றத்தில் இன்று (டிச. 29) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பனிப்போர்வை போர்த்திய ஓசூர் - வாகன ஓட்டிகள் அவதி!

சென்னை: மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் சிங்கார சென்னை 2.0 திட்டம் பகுதி 1 மற்றும் 2-ன் கீழ் ரூ.277.04 கோடியில் 60.83 கி.மீ நீளத்திற்கும், வெள்ள நிவாரண நிதியின் கீழ் ரூ.295.73 கோடியில் 107.57 கி.மீ நீளத்திற்கும், உட்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ.27.21 கோடியில் 10 கி.மீ நீளத்திற்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதேபோல் மூலதன நிதியின் கீழ் ரூ.8.26 கோடியில் 1.05 கி.மீ நீளத்திற்கும், உலக வங்கி நிதி உதவியின் கீழ் விடுபட்ட இடங்களில் ரூ.120 கோடியில் 44.88 கி.மீ நீளத்திற்கும் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவற்றில் சிங்கார சென்னை 2.0 திட்டம் பகுதி 1-ல் 10 சிப்பங்கள், சென்னை 2.0 திட்டம் பகுதி 2-ல் 10 சிப்பங்கள், வெள்ள நிவாரண நிதியில் 45 சிப்பங்கள், உலக வங்கி நிதியில் 38 சிப்பங்கள், உட்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் நிதியில் 4 சிப்பங்கள் முடிக்காத முடியாத நிலை ஏற்பட்டது.

மேலும், சிங்கார சென்னை நிதியில் குளங்கள் சீரமைக்கும் திட்டத்தில் 5 சிப்பங்கள் உள்ளிட்ட பணிகளை வடகிழக்கு பருவமழை மற்றும் குடிநீர் குழாய்கள், மின் மாற்றிகள், மின் கம்பங்கள் ஆகியவற்றை இடம் செய்யும் பணிகள் தாமதம் ஆகிய காரணத்தால் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காத முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், இந்தப் பணிகளை வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் முடிக்க கால அவகாசம் வழங்கி மாநகராட்சி மாமன்றத்தில் இன்று (டிச. 29) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பனிப்போர்வை போர்த்திய ஓசூர் - வாகன ஓட்டிகள் அவதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.