ETV Bharat / state

ஓடும் பேருந்தில் மத்திய பாதுகாப்பு துறை முன்னாள் ஊழியர் மாரடைப்பால் உயிரிழப்பு

author img

By

Published : Oct 29, 2020, 2:50 PM IST

சென்னை: ஓடும் பேருந்தில் மத்திய பாதுகாப்பு துறை முன்னாள் ஊழியர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

மத்திய பாதுகாப்பு துறை முன்னாள் ஊழியர் உயிரிழப்பு
மத்திய பாதுகாப்பு துறை முன்னாள் ஊழியர் உயிரிழப்பு

சென்னை புழல் கேம்ப் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் தேவராஜ் (84). இவர் ஆவடியில் உள்ள மத்திய பாதுகாப்பு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

தேவராஜ் இருதய நோய் காரணமாக அண்ணா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஆவடியில் உள்ள ராணுவ துறை கேண்டினில் பொருட்களை வாங்க வந்துள்ளார்.

பின்னர் அவர் செங்குன்றம் செல்லும் மாநகரப் பேருந்தில் (தடம் எண். 62) பயணம் செய்துள்ளார். இந்த பேருந்து அம்பத்தூர் ராம் நகர் பகுதியில் உள்ள தியேட்டர் அருகில் வந்து கொண்டிருந்தபோது தேவராஜ் திடீரென சுருண்டு கீழே விழுந்தார்.

இதனை பார்த்த ஓட்டுநர், நடத்துனர் உடனடியாக பேருந்தை நிறுத்தி108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து தேவராஜ் உடலை பரிசோதனை செய்தனர். ஆனால் அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது.

தகவல் அறிந்து வந்த அம்பத்தூர் காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஓட்டுநர் பயிற்சியாளருக்கு மாரடைப்பு: துரிதமாக செயலாற்றிய பயிற்சி ஓட்டுநர்கள்!

சென்னை புழல் கேம்ப் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் தேவராஜ் (84). இவர் ஆவடியில் உள்ள மத்திய பாதுகாப்பு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

தேவராஜ் இருதய நோய் காரணமாக அண்ணா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஆவடியில் உள்ள ராணுவ துறை கேண்டினில் பொருட்களை வாங்க வந்துள்ளார்.

பின்னர் அவர் செங்குன்றம் செல்லும் மாநகரப் பேருந்தில் (தடம் எண். 62) பயணம் செய்துள்ளார். இந்த பேருந்து அம்பத்தூர் ராம் நகர் பகுதியில் உள்ள தியேட்டர் அருகில் வந்து கொண்டிருந்தபோது தேவராஜ் திடீரென சுருண்டு கீழே விழுந்தார்.

இதனை பார்த்த ஓட்டுநர், நடத்துனர் உடனடியாக பேருந்தை நிறுத்தி108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து தேவராஜ் உடலை பரிசோதனை செய்தனர். ஆனால் அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது.

தகவல் அறிந்து வந்த அம்பத்தூர் காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஓட்டுநர் பயிற்சியாளருக்கு மாரடைப்பு: துரிதமாக செயலாற்றிய பயிற்சி ஓட்டுநர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.