ETV Bharat / state

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி; போலீசார் விசாரணை - chennai

சென்னை: ஆயிரம் விளக்கு பகுதியில் அப்பார்ட்மெண்ட் ஒன்றில் ஆழ்துளை கிணறு தோண்டும் பணிகள் நடைபெற்றபோது மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
author img

By

Published : Aug 23, 2019, 7:12 AM IST

சென்னை ஆயிரம் விளக்கு பகுதி ஹடோஸ் சாலையில் உள்ள அப்பார்ட்மெண்ட் ஒன்றில் தண்ணீருக்காக ஆழ்துளை கிணறு தோண்டுவதற்கான பணிகள் நேற்று நடைபெற்றது. இதற்காக விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த காண்ட்ராக்டர் மணிகண்டன் தலைமையில் நான்கு பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, சக்திவேல் (20) என்பவர் கீழே செல்லக்கூடிய மின்சார வயரில் கால் வைத்ததில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் அவர் மயங்கி கீழே விழுந்ததையடுத்து, அவருடன் வேலை செய்யக்கூடிய ராஜேந்திரன் என்பவர் அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

சக்திவேல்
சக்திவேல்

அங்கு சக்திவேலை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்பார்ட்மெண்ட்டின் செயலாளர் உஷா, கண்ட்ராக்டர் மணிகண்டன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதி ஹடோஸ் சாலையில் உள்ள அப்பார்ட்மெண்ட் ஒன்றில் தண்ணீருக்காக ஆழ்துளை கிணறு தோண்டுவதற்கான பணிகள் நேற்று நடைபெற்றது. இதற்காக விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த காண்ட்ராக்டர் மணிகண்டன் தலைமையில் நான்கு பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, சக்திவேல் (20) என்பவர் கீழே செல்லக்கூடிய மின்சார வயரில் கால் வைத்ததில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் அவர் மயங்கி கீழே விழுந்ததையடுத்து, அவருடன் வேலை செய்யக்கூடிய ராஜேந்திரன் என்பவர் அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

சக்திவேல்
சக்திவேல்

அங்கு சக்திவேலை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்பார்ட்மெண்ட்டின் செயலாளர் உஷா, கண்ட்ராக்டர் மணிகண்டன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Intro:Body:தண்ணீருக்காக போர் போடும் போது மின்சாரம் தாக்கி தொழிலாளி ஒருவர் பலி..

சென்னை ஆயிரம் விளக்கு பகுதொ ஹடோஸ் சாலையில்  ஸ்ரீ அப்பார்ட்மெண்ட் ஒன்று உள்ளது. இந்த அப்பார்ட்மெண்டில் தண்ணீர் போர் போடும் வேலை நேற்று நடைப்பெற்றது.இதற்காக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த காண்ட்ராக்டர் மணிகண்டன் தலைமையில் நான்கு பேர் வேலை செய்ததாக தெரிகிறது. அப்போது சக்திவேல் (20) போர் போடும் வேலை செய்யும் போது கீழே செல்லக்கூடிய மின்சார வயரில் கம்பி பட்டு மின்சாரம் தாக்கியதில் மயங்கி கீழே விழுந்தார்.இதனால் அவருடன் வேலை செய்யக்கூடிய ராஜேந்திரன் என்பவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் மருத்துவர்கள் சோதித்து பார்த்து ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்து உள்ளனர்..இது தொடர்பாக அருகிலிருந்த நபர் புகார் அளித்ததின் பேரில் அப்பார்ட்மெண்ட்டின் செயலாளர் உஷா மேரா மற்றும் கண்ட்ராக்டர் மணிகண்டன் ஆகியோரிடம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.