ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் 800 கிராம் தங்கம் பறிமுதல்

துபாயிலிருந்து சென்னைக்கு விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.36 லட்சம் மதிப்புடைய 800 கிராம் தங்கத்தை சுங்க அலுவலர்கள் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

author img

By

Published : Sep 15, 2022, 5:56 PM IST

சென்னை விமான நிலையத்தில் ரூ.36 லட்சம் மதிப்புடைய 800 கிராம் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் ரூ.36 லட்சம் மதிப்புடைய 800 கிராம் தங்கம் பறிமுதல்

சென்னை: துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அலுவலர்கள் சோதனை நடத்தினர். அப்போது சென்னையைச்சேர்ந்த முருகன் கோவிந்தராஜ் (32) என்ற பயணியின் மீது சந்தேகம் ஏற்பட்டது. அந்தப் பயணியை நிறுத்தி சோதனையிட்டனர். அவருடைய உடைமைகளில் எதுவும் இல்லை. ஆனாலும் சந்தேகம் தீராமல் பயணியை முழுமையாக சோதித்தனர்.

அவருடைய ஜீன்ஸ் பேண்டில் அணிந்திருந்த பெல்டின் பக், தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது. மேலும் அவருடைய ஜீன்ஸ் பேண்டிற்குள் 3 தங்கக்கட்டிகள் வைத்து தைக்கப்பட்டு இருந்தன. அவரிடம் இருந்து ரூ.36 லட்சம் மதிப்புடைய 580 கிராம் தங்கத்தை சுங்க அலுவலர்கள் பறிமுதல் செய்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் துபாயில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னைக்கு வந்தது. அந்த விமானம் மீண்டும் டெல்லிக்கு, உள்நாட்டு விமானமாக புறப்பட்டுச்செல்ல வேண்டும். இதை அடுத்து விமான ஊழியர்கள் விமானத்தை சுத்தப்படுத்திய போது, விமானத்தின் கழிவறையில் ஒரு சிறிய பாா்சல் இருந்தது. அதை எடுத்துப் பிரித்து பார்த்த போது, அதில் 220 கிராம் தங்க செயின் இருந்தது. அதன் மதிப்பு ரூ.10 லட்சம். இதையடுத்து பாதுகாப்பு அலுவலர்கள், அதை சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனர். சுங்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:மாடு திருட முயற்சி: சிசிடிவி மூலம் போலீசார் விசாரணை!

சென்னை: துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அலுவலர்கள் சோதனை நடத்தினர். அப்போது சென்னையைச்சேர்ந்த முருகன் கோவிந்தராஜ் (32) என்ற பயணியின் மீது சந்தேகம் ஏற்பட்டது. அந்தப் பயணியை நிறுத்தி சோதனையிட்டனர். அவருடைய உடைமைகளில் எதுவும் இல்லை. ஆனாலும் சந்தேகம் தீராமல் பயணியை முழுமையாக சோதித்தனர்.

அவருடைய ஜீன்ஸ் பேண்டில் அணிந்திருந்த பெல்டின் பக், தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது. மேலும் அவருடைய ஜீன்ஸ் பேண்டிற்குள் 3 தங்கக்கட்டிகள் வைத்து தைக்கப்பட்டு இருந்தன. அவரிடம் இருந்து ரூ.36 லட்சம் மதிப்புடைய 580 கிராம் தங்கத்தை சுங்க அலுவலர்கள் பறிமுதல் செய்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் துபாயில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னைக்கு வந்தது. அந்த விமானம் மீண்டும் டெல்லிக்கு, உள்நாட்டு விமானமாக புறப்பட்டுச்செல்ல வேண்டும். இதை அடுத்து விமான ஊழியர்கள் விமானத்தை சுத்தப்படுத்திய போது, விமானத்தின் கழிவறையில் ஒரு சிறிய பாா்சல் இருந்தது. அதை எடுத்துப் பிரித்து பார்த்த போது, அதில் 220 கிராம் தங்க செயின் இருந்தது. அதன் மதிப்பு ரூ.10 லட்சம். இதையடுத்து பாதுகாப்பு அலுவலர்கள், அதை சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனர். சுங்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:மாடு திருட முயற்சி: சிசிடிவி மூலம் போலீசார் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.