ETV Bharat / state

நெதர்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு வந்த போதை மாத்திரைகள்: சுங்கத்துறையினர் விசாரணை

author img

By

Published : Jul 2, 2020, 7:54 PM IST

சென்னை: நெதர்லாந்து நாட்டிலிருந்து சரக்கு விமானத்தில் சென்னைக்கு வந்த பார்சலில் ரூ. 3 லட்சம் மதிப்புடைய போதை மாத்திரைகளை விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகள்

சென்னை விமான நிலையத்தின் கொரியா் பார்சல் பிரிவில் வெளிநாடுகளிலிருந்து சரக்கு விமானங்களில் வந்திருந்த பார்சல்களை சுங்கத்துறை அலுவலர்கள் சோதனையிட்டனா்.

அப்போது நெதர்லாந்து நாட்டிலிருந்து சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரு முகவரிக்கு ஒரு பார்சல் வந்திருந்தது. அதனுள் மருத்துவ பொருள்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. சமீபகாலமாக மருத்துவ பொருள்கள் என்று குறிப்பிடப்பட்டு வரும் பார்சல்களில் போதை மாத்திரைகள் இருப்பதால், அலுவலர்களுக்கு அந்த பாார்சல் மீதும் சந்தேகம் ஏற்பட்டது. பின் அந்த பார்சலைப் பிரித்து சோதனையிட்டனர். அதனுள் ஆரஞ்சு கலரில் 100 மாத்திரைகள் இருந்ததை கண்டுப்பிடித்தனா்.

மாத்திரைகளை ஆய்வுசெய்தபோது, மெத்தோ கெட்டமின் வகையை சோ்ந்த (ரெட் புல்)சிவப்பு காளை என்ற போதை மாத்திரைகள் என்பது தெரியவந்தது. அந்த மாத்திரைகளின் மதிப்பு ரூ.3 லட்சம், இதையடுத்து சுங்கத்துறை போதை மாத்திரைகளை கைப்பற்றினர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகள்
பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகள்

இதையடுத்து இந்த பார்சலை தனியே எடுத்துவைத்துவிட்டு, பார்சலில் இருந்த போன் நம்பரை தொடா்புகொண்டனர். ஆனால் அந்த எண் உபயோகத்தில் இல்லை என்று வந்தது. அதைப்போல் அம்பத்தூா் முகவரியும் போலியானது என்று விசாரணையில் தெரியவந்தது.மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தின் கொரியா் பார்சல் பிரிவில் வெளிநாடுகளிலிருந்து சரக்கு விமானங்களில் வந்திருந்த பார்சல்களை சுங்கத்துறை அலுவலர்கள் சோதனையிட்டனா்.

அப்போது நெதர்லாந்து நாட்டிலிருந்து சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரு முகவரிக்கு ஒரு பார்சல் வந்திருந்தது. அதனுள் மருத்துவ பொருள்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. சமீபகாலமாக மருத்துவ பொருள்கள் என்று குறிப்பிடப்பட்டு வரும் பார்சல்களில் போதை மாத்திரைகள் இருப்பதால், அலுவலர்களுக்கு அந்த பாார்சல் மீதும் சந்தேகம் ஏற்பட்டது. பின் அந்த பார்சலைப் பிரித்து சோதனையிட்டனர். அதனுள் ஆரஞ்சு கலரில் 100 மாத்திரைகள் இருந்ததை கண்டுப்பிடித்தனா்.

மாத்திரைகளை ஆய்வுசெய்தபோது, மெத்தோ கெட்டமின் வகையை சோ்ந்த (ரெட் புல்)சிவப்பு காளை என்ற போதை மாத்திரைகள் என்பது தெரியவந்தது. அந்த மாத்திரைகளின் மதிப்பு ரூ.3 லட்சம், இதையடுத்து சுங்கத்துறை போதை மாத்திரைகளை கைப்பற்றினர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகள்
பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகள்

இதையடுத்து இந்த பார்சலை தனியே எடுத்துவைத்துவிட்டு, பார்சலில் இருந்த போன் நம்பரை தொடா்புகொண்டனர். ஆனால் அந்த எண் உபயோகத்தில் இல்லை என்று வந்தது. அதைப்போல் அம்பத்தூா் முகவரியும் போலியானது என்று விசாரணையில் தெரியவந்தது.மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.