ETV Bharat / state

‘திமுகவை மகத்தான வெற்றி பெறச்செய்வோம்’ - வேல்முருகன் உறுதி

author img

By

Published : Oct 1, 2019, 5:22 PM IST

சென்னை: தேர்தல் பணிக்குழு நியமித்து விக்கிரவாண்டியில் திமுகவை மகத்தான வெற்றி பெறச் செய்வோம் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

velmurugan

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வேல்முருகன், “தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெறுவதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவளிக்கும். தேர்தல் பணிகள் குறித்தும் களப்பணிகள் குறித்தும் திமுக தலைவருடன் ஆலோசித்தோம். தமிழக வாழ்வுரிமை கட்சி தேர்தல் பணிக்குழு நியமித்து விக்கிரவாண்டியில் திமுகவை மகத்தான வெற்றியடையச் செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.

வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பு

அதேபோல், தமிழரின் வரலாற்று பெருமையை குறிக்கும் கீழடி அகழ்வாராய்ச்சி பாரதத்தின் பெருமை என்று கூறியிருக்கும் பண்பாட்டுத்துறை அமைச்சரின் கருத்துக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய மோடி அரசுக்கு ஜால்ரா அடிக்கும் செயலாக மூத்தகுடி தமிழரின் பெருமைகளை சில நூறு ஆண்டுகாலம் முன் தோன்றிய இந்திக்காரர்களின் காலில் கொண்டுபோய் வைக்கக்கூடாது என்று மாநில அரசை கேட்டுக்கொள்கிறேன்.

ஐநாவில் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்று கூறும் மோடி தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்கத் தயாரா என்ற திமுக தலைவரின் கருத்தை நான் வழிமொழிகிறேன். சமஸ்கிருதத்தை திணிக்க வேண்டும் என்பவர்களும் கூட தமிழின் பெருமையை உணர்ந்து தமிழை புகழ்ந்து பேசி வருகின்றனர். தமிழுக்கு நானும் தொண்டாற்றுவேன் என்று மோடி கூறினாலும் பாடத்திட்டத்தில் இந்தியை திணிப்பது, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு, அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் மதவாதத்தை திணிப்பது போன்ற திட்டங்களை நாங்கள் விளங்கிக் கொள்வோம்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: விக்கிரவாண்டியில் ஜெ. ஆசியுடன் பரப்புரையை தொடங்கிய அதிமுக வேட்பாளர்!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வேல்முருகன், “தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெறுவதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவளிக்கும். தேர்தல் பணிகள் குறித்தும் களப்பணிகள் குறித்தும் திமுக தலைவருடன் ஆலோசித்தோம். தமிழக வாழ்வுரிமை கட்சி தேர்தல் பணிக்குழு நியமித்து விக்கிரவாண்டியில் திமுகவை மகத்தான வெற்றியடையச் செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.

வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பு

அதேபோல், தமிழரின் வரலாற்று பெருமையை குறிக்கும் கீழடி அகழ்வாராய்ச்சி பாரதத்தின் பெருமை என்று கூறியிருக்கும் பண்பாட்டுத்துறை அமைச்சரின் கருத்துக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய மோடி அரசுக்கு ஜால்ரா அடிக்கும் செயலாக மூத்தகுடி தமிழரின் பெருமைகளை சில நூறு ஆண்டுகாலம் முன் தோன்றிய இந்திக்காரர்களின் காலில் கொண்டுபோய் வைக்கக்கூடாது என்று மாநில அரசை கேட்டுக்கொள்கிறேன்.

ஐநாவில் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்று கூறும் மோடி தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்கத் தயாரா என்ற திமுக தலைவரின் கருத்தை நான் வழிமொழிகிறேன். சமஸ்கிருதத்தை திணிக்க வேண்டும் என்பவர்களும் கூட தமிழின் பெருமையை உணர்ந்து தமிழை புகழ்ந்து பேசி வருகின்றனர். தமிழுக்கு நானும் தொண்டாற்றுவேன் என்று மோடி கூறினாலும் பாடத்திட்டத்தில் இந்தியை திணிப்பது, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு, அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் மதவாதத்தை திணிப்பது போன்ற திட்டங்களை நாங்கள் விளங்கிக் கொள்வோம்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: விக்கிரவாண்டியில் ஜெ. ஆசியுடன் பரப்புரையை தொடங்கிய அதிமுக வேட்பாளர்!

Intro:Body:தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று சந்தித்து நடைபெறயிருக்கும் இடைத்தேர்தலுக்கு தனது கட்சியின் ஆதரவை தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி வேட்பாளர் மாபெரும் வெற்றி பெறுவதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தி.மு.க. தலைவர் ஸ்டாலினிடம் தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

தேர்தல் பணிகள் குறித்தும் களப்பணிகள் குறித்தும் அவருடன் ஆலோசிக்கப்பட்டது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி தேர்தல் பணிக்குழு நியமித்து விக்கிரவாண்டியில் தி.மு.க.வை மகத்தான வெற்றியடையச் செய்வோம் என்று தெரிவித்துள்ளோம்.

தமிழகத்திலிருக்கும் மத்திய அரசு பணியிடங்களில் அன்னியர்கள் பணியமர்த்தப்படுவது குறித்து தளபதி ஸ்டாலினிடம் வலியுறுத்தி அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதுகுறித்து விவாதம் எழுப்பி சில தீர்வுகளை பெற்றுத்தந்தனர். அந்த அழுத்தத்தை தொடர்ந்து அவர்கள் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.

தமிழரின் வரலாற்று பெருமையை குறிக்கும் கீழடி அகழ்வாராய்ச்சி பாரதத்தின் பெருமை என்று கூறியிருக்கும் பண்பாட்டுத்துறை அமைச்சரின் கருத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.

மத்திய மோடி அரசுக்கு ஜால்ட்ரா அடிக்கும் செயலாக மூத்தகுடி தமிழரின் பெருமைகளை சில நூறு ஆண்டுகாலம் முன் தோன்றிய இந்திக்காரர்களின் காலில் கொண்டுபோய் வைக்ககூடாது என்று மாநில அரசை கேட்டுக்கொள்கிறேன்.

இடஒதுக்கீட்டால் பயனடைந்த வன்னியர்கள் விக்கிரவாண்டியில் அதிகம் உள்ளனர். அந்த இடஒதுக்கீட்டுக்கு தி.மு.க. அயராது போராடியது. ஆனால் அப்படி போராடியவர்களை எம்.ஜி.ஆர் அரசு சுட்டுக் கொன்றது. அதற்கு காரணமானவர்கள் தான் தற்போது ஆட்சி செய்து வருகின்றனர். அவர்களுடன் தான் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி வைத்துள்ளது. பிற்படுத்தப்பட்ட மக்களான் உரிமைக்காக தி.மு.க. உழைத்து இன்றுவரை போராடி வருகிறது. எனவே சமுகநீதி கோட்பாடு அடிப்படையில் தி.மு.க வை நாங்கள் ஆதரித்து வெற்றி அடையச் செய்வோம்.

ஐ.நா வில் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்று கூறும் மோடி தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க தயாரா என்ற தி.மு.க தலைவரின் கருத்தை நான் வழிமொழிகிறேன். சமஸ்கிருதத்தை திணிக்க வேண்டும் என்பவர்களும் கூட தமிழின் பெருமையை உணர்ந்து தமிழை புகழ்ந்து பேசி வருகின்றனர்.

தமிழுக்கு நானும் தொண்டாற்றுவேன் என்று மோடி கூறினாலும் பாடத்திட்டத்தில் இந்தியை திணிப்பது, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு, அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் மதவாதத்தை திணிப்பது போன்ற திட்டங்களை நாங்கள் விளங்கிக் கொள்வோம்" என்று தெரிவித்தார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.